2018


2018 பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லாத மகிழ்ச்சியான வருடமாக அமைந்தது.இரண்டு வீடுகள் மாறினேன்.மகள் தாரா பிறந்தாள்.மகள் பிறக்க வேண்டும் என்று நானும் மனைவி லக்ஷ்மியும் ஆசைப்பட்டோம்.அப்படியே நிகழ்ந்தது.கெளதம் செய்யும் சேட்டைகளை பொறுத்துக்கொள்பவர் மிக விரைவிலேயே கெளதமர் ஆகிவிடுவார்.லேப்டாப் , மொபைல் போன் என்று உடைபடாத பொருள்கள் இல்லை.அவனை சமாளிப்பதே ஒரு நாளின் முக்கிய விஷயமாக இந்த வருடத்தில் இருந்தது.வேலையில் சின்னச்சின்ன சிக்கலகள்.அடுத்த வருடம் இனிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.வேலை சார்ந்தும் நிறைய படிக்க வேண்டியிருக்கிறது.

ஒரளவு நன்றாகவே இந்த வருடத்தில் வாசித்தேன்.குறைவாக எழுதினேன்.மணல் வீடு ஹரிகிருஷ்ணன் கேட்டதால் இரண்டு சிறுகதைகளை எழுத முடிந்தது.பிம்பம் என்ற சிறுகதை முதலில் அவருக்கு அனுப்பினேன்.அவருக்கு பிடிக்கவில்லை.பின்னர் காலச்சுவடுக்கு அனுப்பினேன்.பதிலில்லை.வலைதளத்தில் பிரசுரித்துவிட்டேன்.பிம்பம் சிறுகதை என்னளவில் முக்கிய முயற்சி.அதில் 30 வருடங்களுக்கு மேலான காலத்தை எழுதியிருக்கிறேன்.நான் பெரும்பாலும் தன்னிலையில் லீனியரான கதைகளையே எழுதியிருக்கிறேன்.இது படர்க்கையில் முன் பின் என்று ஒரு தந்தைக்கும் மகனுக்குமான தொடர்ச்சியான கதையாக எழுதினேன்.தினறல் இருந்தது.ஆனால் இனி அது போல எழுதும் கதைகளை எளிதாக எழுத முடியும் என்று நினைக்கிறேன்.பிளவு என்ற மற்றொரு சிறுகதையை மணல் வீடு இதழுக்கு அனுப்பினேன்.வரும் ஜனவரி இதழில் பிரசுரமாகும்.2019யில் என் முதல் சிறுகதை தொகுப்பை கொண்டு வருவேன்.ஒரு குறும்படம் எடுக்கும் ஆவல் இருக்கிறது.

கார்ல் யுங்கின் சில புத்தகங்களை வாசித்தது இந்த வருடத்தின் முக்கியமான விஷயம்.அது பல கதவுகளை திறந்து விட்டது.அவரை தொடர்ந்து வாசிக்க வேண்டும்.தமிழில் நாம் இலக்கியம் சார்ந்து வாசிக்கும் பல கருத்துகள் கார்ல் யுங் வழியாக பெற்றவையாக இருக்க வேண்டும்.ஓ.ரா.ந.கிருஷ்ணன்  எழுதிய Buddhism and Spinoza வாசித்தேன்.எனக்கு மிகவும் பிடித்திருந்தது.தொடர்ந்து அவரை வாசிக்கிறேன்.தத்துவத்திற்கான இணைய இதழ் ஒன்றை துவங்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.அதைப்பற்றி கிருஷ்ணனிடம் பேசினேன்.ஒரிரு அடிகள் எடுத்து வைத்துவிட்டு நிறுத்திவிட்டேன்.அடுத்த வருடத்தில் அதை செயல்படுத்த இன்னும் தீவிரமாக முயற்சிக்க வேண்டும்.முதல் இதழை கொண்டு வருவதுதான் சிக்கல்.அடுத்தடுத்து கொண்டுவருவது எளிதாகிவிடும்.

ஒரிரு கவிதைகள் எழுதினேன்.கட்டுரைகள் எழுதினாலும் சிறப்பான கட்டுரை என்று எதுவும் இல்லை.தொடர்ந்து நிறைய வாசிக்க வேண்டும்.எழுத வேண்டும்.அதைத் தவிர்த்த பெரிய கனவுகள் எதுவும் இல்லை.எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.




ஜாதி மாற்று திருமணங்களும் மேல்நிலையாக்கமும்




இன்று பெருநகரங்களில் ஓரளவு ஜாதி மாற்று திருமணங்கள் நிகழ்கின்றன.சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் கூட நிகழ்கிறது.இந்த திருமணங்கள் நிகழ்வதால் ஜாதிய கட்டமைப்பு எந்தளவு மாறியிருக்கிறது.பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை தரவுகளை சரி பார்க்காமலே சொல்ல முடியும்.ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் உயர்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்ளும் போது அவர்கள் உயர்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்களாக மாறுகிறார்கள்.அவர்கள் ஜாதியற்றவர்களாக மாறுவதில்லை.பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் ஆணோ பெண்ணோ அவர்களின் பெற்றோரிடமிருந்து மனதளவில் விலகுகிறார்கள்.அவர்களின் ஜாதியிலிருந்து அதன் சடங்குகளிலிருந்து அதன் உணவு பழக்கவழக்கங்களிலிருந்து அதன் குல தெய்வங்களிலிருந்து விலகுகிறார்கள்.அவர்கள் அதுவரை இருந்த ஜாதியிலிருந்து திருமணம் செய்துகொண்ட உயர்த்தப்பட்ட ஜாதிக்காரராக மாறுகிறார்கள்.இதை அவர்கள் விரும்பாமல் செய்யவில்லை.இதை அவர்கள் விரும்பியே செய்கிறார்கள்.அவர்கள் தங்கள் உடலின் ஏதோ ஒரு அருவெருக்கதக்க ஒன்றை சட்டையை கழற்றி வீசி விட்டு செல்வது போலவே செய்கிறார்கள்.

இடைநிலை ஜாதியை சேர்ந்தவர் பிராமண ஜாதியை சேர்ந்தவரை திருமணம் செய்யும் போது இடைநிலை சாதிக்காரர் பிராமணர் ஆகிறார்.அவர் அந்த ஜாதி மாற்றத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும் குழந்தைகள் பிறந்த பின்னர் இது நிகழ்கிறது.அந்தக் குழந்தைகளுக்கான சடங்குகள் அவர்கள் இருவரில் யார் உயர்த்தப்பட்ட ஜாதியோ அதன் அடிப்படையிலேயே நிகழ்கிறது.இதே போல தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் இடைநிலை ஜாதியை சேர்ந்தவரையோ அல்லது பிராமணர் போன்ற உயர்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவரையோ திருமணம் செய்யும் போதும் இது நடக்கிறது.அங்கும் அவர்கள் எது உயர்த்தப்பட்ட ஜாதியோ அதன் தெய்வங்கள் , சடங்குகள், உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை ஏற்கிறார்கள்.உயர்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவரின் உறவினர்கள் , பெற்றோர்கள் ஆகியோருடன்தான் அந்த தம்பதியினர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவரின் பெற்றோர்கள் , உறவினர்கள் , சுற்றோர் சிறிது சிறிதாக அந்தத் தம்பதிகளின் வீட்டிற்கு வருவது , பண்டிகைகளில் கலந்து கொள்வது ஆகியவை குறைந்து விடுகிறது.சின்னச் சின்ன அவமானங்களை அவர்கள் தொடர்ந்து சந்திக்கிறார்கள்.அவர்கள் சிறிது சிறிதாக அந்தக் தம்பதிகளிடமிருந்து விலகிவிடுகிறார்கள்.இது மெல்ல யாரும் சரியாக கவனிக்காத வண்ணம் நிகழ்ந்து முடிந்து விடுகிறது.

இறுதியில் ஜாதி நிலைக்கொள்கிறது.அவர்களில் யார் உயர்த்தப்பட்ட ஜாதியனரோ அவர்களின் ஜாதியே அவர்களின் குழந்தைகளுக்கு செல்கிறது.பள்ளிகளில் அவர்கள் இதை பதிவு செய்வார்கள் என்று சொல்லவில்லை.அவர்கள் ஜாதி அற்றவர்களாக தங்களை பிரகடனப்படுத்திக் கொள்ளக்கூடும். ஆனால் அவர்களின் தினசரிகளில் அது வந்துவிடுகிறது.அதை அவர்கள் அங்கீகரிக்காமல் இருக்கலாம்.நமக்கு இயல்பாகவே ஜாதிய உயர்வு தாழ்வும் அதன் படிநிலைகளும் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது.ஜாதி மாறி திருமணம் செய்யும் போது உயர்த்தப்பட்ட ஜாதிக்கு மாறும் ஒரு விஷயமாக இது முடிந்துவிடுகிறது.ஜாதிய கட்டமைப்பு அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.Status Quo.பெருநகரங்களில் இன்று ஜாதி மாற்று திருமணங்கள் நிறையவே நிகழ்கின்றது.கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் மிக குறைந்த எண்ணிக்கையில் நிகழ்கிறது.உண்மையில் ஜாதி மாற்று திருமணங்களில் மேல்நிலையாக்கம் மட்டுமே நிகழ்கிறது.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அவன் நான் யார் நான் யார் என்று கேட்டுக் கொள்கிறான்.அவனது தந்தையை இவர்தான் என் தந்தை என்று சொல்ல அவன் கூச்சப்படுகிறான்.இறுதியில் இவர்தான் என் தந்தை என்று சபையினர் முன் சொல்கிறான்.அவன் இது தான் என் தந்தை ,இது தான் ஊர், இது தான் என் ஜாதி,  இது தான் என் உணவு பழக்கவழக்கங்கள் , நான் படிக்க வந்திருக்கிறேன் , படிப்பேன் என்று அறிவிக்கிறான். மேல்நிலையாக்கத்தை
நோக்கி அவன் செல்லவில்லை.நான் நான் இருக்கும் இடத்திலிருந்தும் நீங்கள் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வந்து தேநீர் அருந்தலாம் என்கிறான்.அதற்கு நான் நீங்கள் ஆக வேண்டியதில்லை என்கிறான்.அவன் மேல்நிலையாக்கத்திலிருந்து தன்னை விலக்கிக்கொள்கிறான்.நான் நானாக இருந்து கொண்டே எனக்கானவற்றை பெற்றுக்கொள்கிறேன் என்கிறான்.அவன் தன்ணுணர்வு கொள்கிறான்.தன் சுயத்தை கண்டுகொள்கிறான்.ஜாதி மாற்று திருமணங்களில் வெற்றி அவை ஜாதி மாற்று திருமணங்களாக மட்டும் இருப்பதில் இல்லை.அதன் பிறகு அதில் எது உயர்த்தப்பட்ட ஜாதியோ அதன் அடையாளங்களை இருவருமே நிராகரிப்பது.அல்லது இரண்டையும் சமமாக பார்ப்பது.அந்தத் தம்பதியினர் எந்த ஜாதியை தேர்வு செய்கின்றனர் என்பதை சமூக மதிப்பீடு முடிவு செய்கிறது.அந்த சமூக மதிப்பீட்டை உடைத்து உங்களுக்கான விழுமியங்களை உருவாக்கிக்கொள்ளா விட்டால் ஜாதி மாற்று திருமணங்களால் பெரிய பலன் ஒன்றுமில்லை.

மேல்நிலையாக்கத்தின் மூலம் ஒருவர் நான் ஜாதியை வெறுக்கிறேன், என் பெற்றோரை வெறுக்கிறேன், என் குலதெய்வத்தை , உணவு பழக்கவழக்கங்களை வெறுக்கிறேன் என்று அறிவிக்கிறார்.அவர் மற்றொருவரின் ஜாதியை உயர்ந்த ஜாதி என்று ஏற்கிறார்.உண்மையில் அவர் அந்த சமூக மதிப்பீட்டை ஏற்கிறார்.ஜாதிய ஏற்றத்தாழ்வை ஏற்கிறார்.அவர்களின் பெற்றோர் தன் பெற்றோரை விட சிறந்தவர்கள் என்கிறார்.அவர்களின் உணவு பழக்கங்கள் , தினசரி செயல்பாடுகள் உயர்ந்தவை என்கிறார்.அவர் சுயம் அற்றவர் ஆகிறார்.அவர் தொலைந்து போய்விடுகிறார்.இது உண்மையில் மிகவும் பரிதாபத்திற்குரியது.

Photograph : https://www.deviantart.com/m-lucia/art/dialogue-144416688

எஸ்.ராமகிருஷ்ணன்






2004யில் திருவல்லிக்கேணி மேன்சனில் இருந்த போது தொடர்ந்து விகடன் வாங்கினேன்.அப்போது அதில் இரண்டு முக்கியமான தொடர் கட்டுரைகள் வந்தது.ஒன்று பாலாவின் இவன் தான் பாலா என்ற தொடர்.மற்றது துணையெழுத்து.இரண்டும் பிடித்திருந்தது.அதன் பிறகு 2005யில் உயிர்மை பத்திரிக்கையை தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையம் அருகே இருக்கும் பேப்பர் கடையில் பார்த்து வாங்கினேன்.அதிலும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிக்கொண்டிருந்தார்.அப்போது உயிர்மையின் உள்ளடக்கம் வித்யாசமாக இருந்தது.இப்போது போல இல்லை.ஐன்ஸ்டின் ஒரு அறிவுத் திருடரா என்ற கட்டுரை வந்திருத்தது.ரவி ஸ்ரீனிவாஸ் எழுதியிருந்தார்.புகைப்படம் பதிப்புரிமை உலகமயமாதல் என்று சே குவேராவின் புகைப்படம் சார்ந்து ஒரு கட்டுரை வந்திருந்தது.இந்த கட்டுரைகளின் தலைப்புகள் தான் முகப்பு பக்கங்களாக இருந்தன.இன்று உயிர்மை முற்றிலும் மாறிவிட்டது.அப்போது தொடர்ச்சியாக எஸ்.ராமிகிருஷ்ணன், ஜெயமோகன் (காய்தல் உவர்த்தல்!) , சாரு நிவேதிதா எழுதிக்கொண்டிருந்தார்கள்.ஷாஜி உயிர்மையில் இசை பற்றி எழுதிய கட்டுரைகளின் வழி புகழ் பெற்றார்.ஆரம்பத்தில் அவருடைய கட்டுரைகளை ஜெயமோகன் மொழிபெயர்த்தார்.ஆனால் பத்திரிக்கையில் தமிழில் ஜெ என்று இருக்கும்.ஜெயமோகன் என்று இருக்காது.

2005 அல்லது 2006யில் உயிர்மையில் நெடுங்குருதி நாவல் பற்றிய குறிப்பு பார்த்தேன்.அபிராமபுரத்தில் இருந்த மனுஷ்யபுத்திரன் வீட்டிற்கு சென்று புத்தகம் வாங்கினேன்.அந்த நாவல் நான் வாசித்த அற்புதமான நாவல்களில் ஒன்று.நாவல் வாசித்து முடித்த அன்று தொண்டையில் ஏதோ வலி ஏற்பட்டு மன அழுத்தம் கொண்டு அழுதது நினைவில் இருக்கிறது.எஸ்.ராமகிருஷ்ணனின் மிக முக்கியமான நாவலாக நெடுங்குருதி இருக்கும்.அவரின் மொத்த வாழ்க்கையும் தேடலும் அந்த நாவலில் இருப்பதாக எனக்கு தோன்றும்.அந்த கிராமத்து மக்கள் குற்றப் பரம்பரையினராக அடையாளம் காணப்பட்டிருப்பார்கள்.அந்த கிராமம் ஒரு சுழுல் போல அந்த மனிதர்களை அந்த கிராமம் நோக்கி மறுபடி மறுபடி இழுத்து வரும்.ரத்னாவதி இறக்கும் போது இந்த உலகில் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தவாறு தற்கொலை செய்து கொள்வாள்.

அவருடைய உறுபசி அதிக எழுத்துப்பிழைகளுடன் பிரசுரமானது.ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏதோ ஒரு லட்சியவாதம் இளைஞர்களை கவர்கிறது.ஆனால் அந்தக் காலகட்டத்திற்கு பிறகு அந்த இளைஞர்கள் என்னவாகுகிறார்கள்.ஒரு வகையில் எஸ்.ராமகிருஷ்ணனின் அக்கறை உதிரி மனிதர்கள் பற்றிய அக்கறை. அவருடயை ஜன்னலை தட்டாதே அஷ்ரப் சிறுகதை அப்படியான உதிரி மனிதனை பற்றியதுதான்.
சம்பத் திராவிட இயக்கத்தின் லட்சியங்கள் முடிந்து போன காலத்தில் சிதறி போகிறான்.பின்தொடரும் நிழலின் குரல் , அபிலாஷ் எழுதிய ரசிகன் ஆகிய நாவல்களோடு இணைத்து வாசித்து பார்க்க வேண்டிய நாவல் உறுபசி.சம்பத்துக்கும் , ரசிகனின் சாதிக்குக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது.

யாமம் நாவல் சென்னையை மையப்படுத்தியது.மிளகு வரலாற்றை மாற்றிவிடுகிறது.இந்த நாவலை வாசித்துவிட்டு பாரீஸ் கார்னரில் இருக்கும் ஆர்மேனியன் சர்ச்சை சென்று பார்த்தேன்.இந்த நாவலில் ஏதோ ஒரு வகையில் எல்லோரும் பிறழ்ந்து விடுகிறார்கள்.இதுவும் உதிரி மனிதர்களை பற்றிய நாவல் தான்.இந்த நாவலின் மொழி நம்மை மிகவும் வசீகரிக்கக்கூடியது.

அதன் பின் அவருடைய நாவல்களை வாசிக்கவில்லை.வாசிக்க தோன்றவில்லை.அவருடைய அபுனைவு மிகவும் பலவீனமானது.அவரால் தன் எண்ணங்களை தொகுத்து தர்க்கப்படுத்தி ஏன் இவர் முக்கியமான எழுத்தாளர் , ஏன் இல்லை என்று சொல்ல முடியாது.சில நெகிழ்ச்சியான வரிகள்.சில தகவல்கள்.அவரால் ஒரு போதும் நல்ல கட்டுரையை எழுத முடிந்ததில்லை.அவரின் நல்ல கட்டுரை தொகுப்பு துணையெழுத்து மட்டும் தான்.விழித்திருப்பவனின் இரவு வாசித்திருக்கிறேன்.ஆனால் அதன் வழி நீங்கள் தகவல்களை மட்டுமே பெற முடியும்.சில்வியா பிளாத் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைக்கு ஜெயமோகன் வாசகர் கடிதம் எழுதியது நினைவுக்கு வருகிறது.அதில் ஜெயமோகன் எப்படி பதிப்பாளர்கள் எழுத்தாளர்களை பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி அவர்களை பிரபலப்படுத்துகிறார்கள் என்று எழுதியிருந்தார்.

எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ந்து இலக்கிய கூட்டங்களில் பேசுபவர்.அவர் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.பேசியிருக்கிறார்.ஆனால் அவை பெரும்பாலும் நெகிழ்ச்சியை மட்டுமே முதன்மைபடுத்துபவை.நீங்கள் அந்தக் கட்டுரைகளின் வழி தஸ்தாயெவ்ஸ்கி பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடியாது.ஆனால் ஏதோ ஒரு வகையில் அவை தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க தூண்டுபவை.Pakistan என்பதை bakistan என்று உச்சரிப்பார்.

ஜெயமோகன் போல ஒரு வாசகர் வட்டத்தை அவர் உருவாக்கவில்லை.அல்லது அப்படி எதுவும் உருவாகவில்லை.குறும்படங்கள் , தொலைக்காட்சி தொடர்கள், நாடகங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்திருக்கிறார்.நானும் பல ஆண்டுகளாக வடபழனியிலும் சாலிக்கிராமத்திலும் வசித்திருந்தாலும் அவரை சென்று சந்தித்ததில்லை.அபிலாஷ் அவர் எப்படி அட்டவனை போட்டு தன் ஒரு நாளை வகுத்திருப்பார் என்று சொல்லியிருக்கிறார்.தன் நேரத்தை மிகவும் கவனமாக செலவு செய்பவர்.இல்லை என்றால் இத்தனை தொடர்ச்சியாக எழுதியிருக்க முடியாது.அவருக்கு திரைப்படம் இயக்கும் எண்ணம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

தமிழில் ஒருவர் முழு நேர எழுத்தாளராக இருக்க விழைவது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமம்.உறவினர்கள் மத்தியில் மட்டுமே எத்தனை அவமானங்கள்.அத்தனையும் மீறி முழு நேர எழுத்தாளராக இருந்து வாழ்வில் வெற்றி பெற்றவர் எஸ்.ராமகிருஷ்ணன்.விருதுநகர் அவரின் சொந்த ஊர் என்றாலும் சாலிக்கிராமத்தில் ஒரு சொந்த வீடு வாங்கியது அவருக்கு மிகுந்த நிறைவை அளித்தது என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.

சாகித்திய அகாடமி ஒரு நாவலை முன்னிட்டு விருது அளித்தாலும் அது அந்த எழுத்தாளரின் அதுவரையான எழுத்து செயல்பாட்டை அங்கீகரிக்கும் ஒன்றாகவே பார்க்க முடியும்.எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

இந்து என்ற அடையாளம்



நான் கடவுள் படத்தில் வரும் காட்சி


சமீபத்திய ப்ரண்ட்லைன் இதழில் காசியில் காசி விஸ்வாநாதர் ஆலயத்தை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மிக துரிதமாக நிகழ்ந்து வருவதை பற்றி கட்டுரைகளை பிரசுரித்திருக்கிறது.சில நூற்றாண்டுகளை கடந்த பாரம்பரிய கட்டிடங்கள் , கோயில்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன.இந்த பணியின் நோக்கம் கங்கையிலிருந்து காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு இடையில் எந்த ஆக்கிரமிப்புகளும் இருக்கக்கூடாது என்பதாகும்.மத்தியிலும் , உத்தர் பிரதேசத்திலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கிறது.இடிக்கப்படுவதில் கோயில்கள் இருக்கிறது.அப்படியென்றால் இவர்களுக்கு எந்தளவு இறை நம்பிக்கை உள்ளது.இந்த செயல் திட்டத்தின் உள்நோக்கம் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் இருக்கும் மசூதியை மையப்படுத்தியதாக இருக்குமோ என்ற ஊகமும் பதற்றமும் எழுந்துள்ளது.

உண்மையில் பாரதிய ஜனதா கட்சியிலும் ராஷ்டிரிய ஸ்வயம்ஸேவக் சங்கிலும் , விஷ்ய இந்து பரிஷத்திலும், பிற இந்துத்துவ அமைப்புகளிலும் இருப்பவர்கள் எந்தளவு இந்துக்கள்.இவர்கள் எந்தளவு இறை நம்பிக்கையாளர்கள்.இவர்கள் எந்தளவு இறைவனின் மீது நம்பிக்கை வைத்து பாவ புண்ணியத்திற்கு அஞ்சுபவர்கள்.இவை முக்கியமான கேள்விகள்.

இடது சாரி அமைப்புகள் வர்க்க அடிப்படையில் பாட்டாளி மக்களை ஒருங்கிணைத்து பாட்டாளி சர்வாதிகாரம் என்ற அரசு இயந்திரத்தை உருவாக்க முனைகிறது.உலக பாட்டாளிகளே ஒன்றுபடுங்கள் என்று அது கூக்குரலிடுகிறது.பாட்டாளிகள் அனைவரும் ஒன்று என்று அது உலக பாட்டாளிகளை ஒரே ஜனத்திரளாக ஒர் அமைப்பாக ஒர் இயக்கமாக மாற்ற முற்படுகிறது.அதற்காக சமூகத்தை முதலாளி X தொழிலாளி என்ற வர்க்க அடிப்படையில் பிரிக்கிறது.பாட்டாளியின் உழைப்பே முதலாளியின் லாபமாக மாறுகிறது.பாட்டாளிகள் ஒன்றிணைந்து மூலதனத்தை கைப்பற்றும் போது வர்க்க வேறுபாடுகள் அற்ற ஆன்மிகமான சமூகம் உருவாகும் என்று அது நம்புகிறது.அத்தகைய சமூகத்தில் பொருளாதார அடிப்படையிலான ஏற்ற தாழ்வுகள் இருக்காது.இது பாட்டாளிகள் ஒன்றிணையாமல் நிகழாது.இதனால் தொழிற்சங்கங்கள் உருவானது.கம்யூனிச அரசாங்கங்கள்  உலகில் தோன்றியது. ஆனால் இன்று நவீன முதலாளித்துவத்தில் தொழிலாளியும் முதலாளி ஆகலாம் என்ற எண்ணம் உருவாகிவிட்டது. இடதுசாரிகள் பாட்டாளிகளை இனி அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்று சொல்லி ஒருங்கிணைக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறது.ஏனேனில் இன்று சுரண்டப்படும் தொழிலாளி நாளை சுரண்டும் முதலாளியாகலாம்.அதற்கான வாசல்கள் திறந்திருக்கிறது என்று அவன் உண்மையிலேயே நம்புகிறான்.இன்று அதிகாரத்தை ஒன்று முன்வாசல் வழி அடையலாம் அல்லது பின்வாசல் வழி அடையலாம்.இரண்டிலும் வெற்றி அடையும் வரைதான் போராட்டம்.வெற்றி பெற்ற பின் முன்வாசல் வழி வந்தவர் பின் வாசல் வழி வந்தவர் வரவேற்பரையில் அமர்ந்து தேநீர் அருந்துகின்றனர்.

இந்த இடதுசாரி இயக்கங்களின் மறுபக்கம் வலதுசாரி அமைப்புகள்.இவர்களுக்கு மதத்தின் மீதும் மொழியின் மீதும் சாதியின் மீதும் இனத்தின் மீதும் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.ஆனால் இதை கொண்டு பண்பாட்டு தளத்தில் ஜனத்திரளை ஒருங்கிணைக்க முடியும் என்பதை வலதுசாரி இயக்கங்கள் தொடர்ச்சியாக கண்டு உணர்ந்து பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளன.இதன் தலைவர்கள் சாதி மாறி திருமணம் செய்து கொள்வார்கள்.தங்கள் பிள்ளைகளுக்கு வேறு சாதியில் மதத்தில் திருமணம் செய்து வைப்பார்கள்.பண்பாட்டு தளத்தில் மக்களை ஒருங்கிணைப்பது , எதிரியை கட்டமைப்பது , வெறுப்பை உருவாக்குவது  அதிகாரத்தை கைப்பற்றுவது இது வலதுசாரி இயக்கங்களின் பணி.இன்று
ஆர்.எஸ்.எஸ்ஸூம் அதனால் உருவாக்கப்பட்ட இயக்கங்களும் இந்து என்ற அடையாளத்தை கொண்டு இதை செய்கிறது.இவர்களுக்கு இந்து சமயம் மீதோ அதன் உண்மையான வரலாற்றின் மீதோ அக்கறை இல்லை.இவர்கள் ஒரு புனைவான வரலாற்றை உருவாக்குகிறார்கள்.அதில் ஒரு எதிரி கட்டமைக்கப்படுகிறான்.அந்த எதிரியால் தாங்கள் பிரிதிநித்துவப்படுத்தும் ஜனத்திரள் வரலாற்றில் எந்தளவு பண்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டது என்று பிரச்சாரம் செய்கிறது.பின்னர் நிகழ் காலத்தில் இந்த எதிரி தொடர்ந்து வளர்ந்து வருவதால் தாங்கள் பிரிதிநித்துவப்படுத்தும் ஜனத்திரள் தங்களின் பண்பாட்டு அடையாளங்களை தொலைத்துவிடும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கிறது.அவர்களுக்கு பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது.அவர்களுக்கு அந்த வலதுசாரி அமைப்பு ஒர் அடையாளத்தை அளிக்கிறது.மக்கள் பண்பாட்டு தளத்தில் ஒருங்கிணைகிறார்கள்.அந்த வலதுசாரி அமைப்பு அதிகாரத்தை அடைகிறது.

ஒரு முறை அபிலாஷூடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் தொண்ணூறுகளின் உலகமயமாக்கல் கொள்கைக்கு பின்னர்தான் பாரதிய ஜனதா வளர்ந்தது என்றார்.அது மிக முக்கியமான அவதானிப்பு.உலகமயமாக்கல் கிராமத்து , சிறுநகரத்து மனிதனை பெருநகருக்கு அழைத்து வருகிறது.பெருநகரத்து மனிதன் அடையாளமற்றவன்.அந்நியன்.அவன் இந்திய அளவிலான ஒர் அடையாளத்தை ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களின் வழி  பெறுகிறான்.அவன் தமிழனற்ற இந்தியன்.கிராம தெய்வங்கள் அற்ற பெருந் தெய்வங்களை கொண்ட இந்தியன்.ஹிந்தியை ஏற்கும் இந்தியன்.மொழி வழி மாநிலங்கள் என்பவை நிர்வாகத்தின் தேவை கருதிதானே தவிர அதில் உண்மையான கூட்டாட்சி அமைப்பு என்று எதுவும் இல்லை என்று கருதுபவன்.மொழி வேறுபாடுகள் அற்று சாதி வேறுபாடுகள் அற்று ஒரு மதத்தின் கீழ் ஒருங்கிணைப்படும் ஜனத்திரள்  பெரும் ஜனசக்தி.அந்த ஜன சக்தி அதிகாரத்தை அடைவதற்கான வழி.பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தது.

பாரதிய ஜனதா கட்சி பெருநகரத்தின் தனிமனிதனின் கட்சி.பெருநகரத்தின் உயர்த்தப்பட்ட இந்துக்கள் பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சியை ஆதிரிக்கிறார்கள்.அவர்கள் கிராம தெய்வங்கள் அற்றவர்கள்.மொழி அற்றவர்கள்.வேர் அற்றவர்கள்.ஜாதி அற்றவர்களும் கூட.அவர்களின் அடையாளம் , அரண் இந்துத்துவ அமைப்புகள்.உண்மையில் இன்று நமது மொழி , பண்பாட்டு வழக்கங்கள் , கிராம பொருளாதாரம் , கிராம தெய்வங்கள்  , நாட்டார் கலைகள் அழிந்து போவது தொழிற்மயத்தை முன்வைக்கும் உலகமயமாக்கல் கொள்கையால்தான்.அது வேறு எந்த எதிரியாலும் இல்லை.ஆனால் ஒரு பக்கம் இந்து என்ற அடையாளத்தை முன்வைத்தவாறு புஷ்பக விமானம் அன்றே இருந்தது என்று பிதற்றிக்கொண்டு மறுபக்கம் கிராம பொருளாதாரத்தை முழுமையாக வேரறுத்து வருகிறோம்.

வலதுசாரி அமைப்புகள் இந்துக்கள் அல்ல.அவர்கள் இந்துத்துவம் என்ற கோட்பாட்டை முன்வைத்து பண்பாட்டு தளத்தில் மக்களை ஒருங்கிணைத்து அதிகாரத்தை அடைய விரும்பும் அமைப்பு ,அவ்வளவுதான்.தொடர்ந்து கல்வி மாநில அரசின் அதிகாரத்திலிருந்து மத்திய அரசின் அதிகாரத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பல பள்ளிகள் தமிழக அரசின் பாடத்திட்டத்திலிருந்து மத்திய அரசின் பாடத்திட்டத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.மாநிலங்களின் உரிமைகள் சிறிது சிறிதாக பறிக்கப்பட்டு கவர்னருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டு தமிழகத்தில் இருப்பது போல ஒரு அதிகாரமற்ற அரசை இந்திய அளவில் உருவாக்குவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.முற்றிலும் தொழிற்மயமான பெருநகரங்களை கொண்டு சிறு நகரங்களில் உள்ள தொழில்கள் நசுக்கப்பட்டு கிராம பொருளாதாரம் முழுமையாக இல்லாமல் செய்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது மட்டுமே ஒருவனுக்கான வாழ்வாதாரம் என்ற நிலைமை உருவாக்கப்பட்டு வருகிறது.இதனால் பண்பாட்டு தளத்தில் முற்றிலும் வேர்கள் அற்ற மனிதர்கள் முளைத்து வருவார்கள்.இந்த வேர்கள் அற்ற மனிதர்களுக்கு பண்பாட்டு தளத்தில் அடையாளத்தை அளிக்கும் இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் இருக்கும்.அவர்கள் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்த படி இருப்பார்கள்.

இந்த சமூகம் ஏதோ ஒரு வகையில் உயர்த்தப்பட்ட பெருநகரத்தை சேர்ந்த குழுந்தைகள் மட்டும் மருத்துவம் , பொறியியல் போன்ற படிப்புகளை படித்தால் போதும் என்று நினைக்கிறது.கிராம சிறு நகரத்து பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த அதிகாரத்தை அடையும் மக்களுக்கு சேவகர்களாக இருந்து செத்து மடிய வேண்டியதுதான்.நீட் போன்ற இந்திய அளவிலான மருத்துவ தேர்வுக்கு உண்மையான நோக்கம் என்ன.இவை கிராம சிறு நகரத்து பிள்ளைகளை மருத்துவம் படிக்க விடாமல் செய்கிறது.இது பிற படிப்புகளுக்கும் தொடரும்.உயர்த்தப்பட்ட பெருநகரத்தை சேர்ந்தவர்கள் அதிகாரத்தை அடைவார்கள்.அவர்கள் அதிகாரத்தை உருவாக்குவர்கள்.பிறர் வாழ அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக மாற்றம் உண்மையில் மாநில கட்சிகளின் கூட்டமைப்பு.அது உருவாக வேண்டும்.பண்பாட்டு தளத்தில் பெருநகர் சார்ந்த மாற்று கலாச்சார வெளிகள் உருவாக வேண்டும்.கிராம  சிறு நகர தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.கல்வி முழுக்க முழுக்க மாநில உரிமைக்கு மாற வேண்டும்.இவை நிகழ வேண்டும். மண் பயனுற வேண்டும்.



மெளலானா அபுல் கலாம் அசாத்





India Wins Freedom  1935யிலிருந்து 1948வரையான காலகட்டத்தில் இந்திய அளவில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகள் பற்றி மெளலானா அபுல் கலாம் அசாதின் பார்வையை முன்வைக்கும் புத்தகம்.இந்த புத்தகத்தின் வழி நாம் அறிந்த கேள்விப்பட்ட சில சம்பவங்கள் பற்றிய மாற்று பார்வையை புதிய பார்வையை இந்தப் புத்தகம் அளிக்கிறது.இந்தப் புத்தகத்தை அசாத் எழுதவில்லை.அவர் சொன்னதை ஹூமாயூன் கபீர் எழுத்தாக்கம் செய்திருக்கிறார்.அபுல் கலாம் அசாத் 1939யிலிருந்து 1946வரை காங்கிரஸின் தலைவராக இருந்திருக்கிறார்.இந்தப் புத்தகம் பெரும்பாலும் அந்தக் காலகட்டத்தை பற்றி பேசுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியா போருக்கான தனது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் முன்வைக்கப்படும் கிரிப்ஸ் தூதுக்குழுவின் திட்டம் தோல்வியில் முடிகிறது.கிரிப்ஸ் தூதுக்குழுவிடம் அபுல் கலாம் அசாத் வைக்கும் பிரதான கோரிக்கை இந்திய சுதந்திரம் பற்றிய வாக்குறுதி.ஆனால் கிரிப்ஸ் தூதுக்குழுவால் அதைத் தர இயலவில்லை.இதில் காந்தியும் அசாதும் வேறுபடுகிறார்கள்.அசாத் இந்திய சுதந்திரம் பற்றி வாக்குறுதி இருந்தால் ஆதரவு தரலாம் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்த போது காந்தி போருக்கு எதிரான நிலைப்பாட்டை வைத்திருந்தார்.இருந்த போதும் காங்கிரஸ் செயற் குழுவில் இந்திய சுதந்திரம் பற்றிய வாக்குறுதி இருந்தால் போருக்கான ஆதரவு தரலாம் என்கிற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.ஆனால் அதைப்பற்றி தெளிவாக கிரிப்ஸ் தூதுக்குழுவால் சொல்ல முடியாததால் அந்த திட்டம் தோல்வியில் முடிகிறது.பின்னர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி அறிவிக்கிறார்.அதற்கான தீர்மானத்தை காங்கிரஸ் கமிட்டியில் வெளியீட்ட அடுத்த நாளே அனைத்து தலைவர்களும் கைது செய்யப்படுகிறார்கள்.காந்தி தவிர பிறர் அனைவரும் அகமத்நகர் கோட்டை சிறைச்சாலையில் தங்க வைக்கப்படுகிறார்கள்.மூன்று வருடங்கள் கழித்து அவர்கள் வெளிவரும் போது போர் அநேகமாக முடிந்துவிடுகிறது.

அவர்கள் வெளிவந்தவுடன் சிம்லா மாநாடு நடைபெறுகிறது.அதில் இந்தியர்களை மட்டுமே உள்ளடக்கிய செயற்குழு ஒன்றை உருவாக்க இருப்பதாகவும் வைஸ்ராய் அந்த செயற்குழுவின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே நடப்பார் என்றும் அவர் தன்னிச்சையாக செயலாற்ற முடியாது என்றும் சொல்கிறார் ஸவஸ்ராய் வேவல்.கிரிப்ஸ் செயற்குழுவின் திட்டமும் கிட்டத்தட்ட இது போன்ற ஒன்று தான் என்றாலும் அதில் பாதுகாப்பு துறை இந்தியர்களிடம் இருக்காது என்பது இருந்தது.மேலும் அப்போது போர் நடந்துக்கொண்டிருந்தது.இப்போது போர் முடியும் தருணத்தில் இருக்கிறது.அதனால் பிரிட்டனுக்கு இந்தியாவின் ஆதரவு தேவையில்லை.ஆனால் இந்தியாவில் புதிய அரசியல் சூழலை உருவாக்குவதே இந்தக் கோரிக்கையின் நோக்கம் என்று வைஸ்ராய் விளக்குகிறார்.காங்கிரஸூம் முஸ்லிம் லீக் கட்சியும் அதை ஏற்கிறது.ஆனால் இறுதியில் ஆட்சியில் இடம் பெறப்போகும் முஸ்லிம்கள் , முஸ்லீம்கள் லீக் கட்சியினராகத்தான் இருக்க வேண்டும் என்று ஜின்னா வலியுறுத்துகிறார்.இந்த ஒரு விஷயத்தால் சிம்லா மாநாடு தோல்வியில் முடிகிறது.ஜப்பான் மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியபின் போர் முற்றாக முடிந்துவிடுகிறது.


அதன் பின் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது.பஞ்சாப், சிந்த், வங்கம் தவிர பிற மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது.வங்கத்தில் முஸ்லிம் லீக் வெற்றி பெறுகிறது.பஞ்சாபில் யூனியனிஸ்ட் கட்சியும் லீக் கட்சியும் சம எண்ணிக்கையை பெறுகின்றன.சிந்த் மாகாணத்தில் லீக் கட்சி அதிக இடங்களை பெற்றாலும் பெரும்பாண்மையை பெற இயலவில்லை.முஸ்லிம்களை அதிக அளவில் கொண்ட வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது.பஞ்சாபில் யூனியனிஸ்ட் கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தருகிறது.பிரட்டனில் போர் முடிந்து தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடிக்கிறது.அட்லீ பிரதமர் ஆகிறார்.தொழிலாளர் கட்சி வந்தவுடன் பிரித்தானிய அமைச்சர்களின் தூதுக்குழு திட்டம் உருவாக்கப்படுகிறது.அது முழுமையான கூட்டாட்சி அமைப்பு  முறையை வலியுறுத்தியது. பாதுகாப்பு,வெளிவுறவுத் துறை, தொலைதொடர்பு ஆகியவை மட்டும் மத்திய அரசின் கீழ் வரும்.மற்றவை மாகாணங்கள் கீழ் வரும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.இதை முஸ்லிம் லீக் கட்சியும் காங்கிரஸூம் ஏற்றுக்கொள்கிறது.

1946யில் மெளலானா அபுல் கலாம் அசாத் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறார்.ஜவகர்லால் நேரு தலைவர் ஆகிறார்.ஆட்சியில் படேல் உள்துறையை ஏற்கிறார்.முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த லிகாயத் அலி நீதித்துறை அமைச்சர் ஆகிறார்.பிரிட்டன் அரசு இந்திய சுதந்திரத்திற்கான தேதியை குறிக்கிறது.வைஸ்ராய் வேவல் அவசரமாக தேதி குறித்து இதை செய்யாமல் நிதானமாக இதை செய்யலாம் என்கிறார்.வேறுபாடு முற்றவே அவர் ராஜினாமா செய்கிறார்.

மவுண்ட்பேட்டன் வைஸ்ராய் ஆகிறார்.அவர் இந்திய பிரவினை பற்றிய தன் வரைவை முன்வைக்கிறார்.இதற்கு அபுல் கலாம் அசாத் மறுப்பு தெவிக்கிறார்.மவுண்ட்பேட்டன் இது ஏன் நல்ல தீர்வு என்று தன் தரப்பை விளக்குகிறார்.இந்தியா போன்ற பல்வேறு இன மொழி வேறுபாடுகள் கொண்ட நாட்டிற்கு வலுவான மத்திய அரசு இருக்க வேண்டும்.பிரித்தானிய அமைச்சரவையின் தூதுக்குழு திட்டம் ஏறகப்படுமானால் அது பலவீனமான மத்திய அரசை ஏற்படுத்தும்.அது நிரந்தரமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்கிறார்.இந்த பலவீனமான மத்திய அரசு எனும் திட்டம் ஏற்கப்படுவதற்கான முக்கிய காரணம் முஸ்லிம் லீக் கட்சி.அவர்களுக்கு தனி நாடு தந்துவிட்டால் இந்தியா தன் விருப்பம் போல் மத்திய அரசுக்கான அதிகாரத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்கிறார்.

முதலில் சர்தார் படேல் மவுண்ட்பேட்டன் திட்டத்தை ஏற்கிறார்.பின்னர் நேருவும் அதை ஏற்கிறார்.காந்தியும் வேறு வழி இருக்கவில்லை என்ற முடிவுக்கு வருகிறார்.அபுல் கலாம் அசாத் தன் பார்வையில் இந்தப் பிரிவினை ஏன் நிகழ்ந்தது என்று சொல்கிறார்.நேரு காங்கிரஸ் தலைவரானபின் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பிரத்தானிய அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தை அப்படியே ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை என்கிறார்.இதனால் ஜின்னாவிற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது.அவர் காங்கிரஸ் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறது.கூட்டாட்சி அமைப்பில் மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் என்பதால்தான் பிரித்தானிய அமைச்சரவையின் தூதுக்குழு திட்டதத்தை ஏற்றதாகவும் ஆனால் இப்படி முரணாக பேசினால் நாளை காங்கிரஸ் மத்தியில் பெரிய மாற்றங்களை செய்ய இயலும் , அதனால் பிரிவினை தான் தீர்வு என்றும் சொல்கிறார்.இந்த வாய்ப்பை நேரு ஜின்னாவிற்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டதாக அசாத் கருதுகிறார்.இரண்டாவது படேல் ஏதேனும் ஒரு முக்கியமான அமைச்சரவை பதவியை முஸ்லிம் லீக் கட்சிக்கு கொடுக்க வேண்டும் என்கிற போது நீதித்துறையை கொடுத்துவிடலாம் என்கிறார்.இதனால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற இயலாமல் போய்விடுகிறது.எல்லாவற்றிற்கும் நீதித்துறையின் ஒப்புதல் தேவைப்படுகிறது.இது மிகப்பெரிய சிக்கலை உருவாக்குகிறது.மேலும் 1944யில் காந்தி புனா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் ஜின்னாவை சந்திக்கிறார்.எந்த வித மக்கள் ஆதரவும் அற்ற ஜின்னாவை தன் தொடர் சந்திப்புகள் மூலமாகவே மக்கள் மத்தியில் முக்கியமானவர் என்ற எண்ணத்தை  தோன்றச் செய்து விட்டார் என்று அசாத் தன் கவலையை தெரிவிக்கிறார். அதுமட்டுமில்லாமல் தேவையில்லாமல் குவைத் இ அசாம் என்ற அடைமொழியுடன் ஜின்னாவிற்கு கடிதம் எழுதி அவருக்கு பெரிய மக்கள் தலைவர் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டார் என்று ஆதங்கப்படுகிறார்.மேலும் முஸ்லிம் லீக்கை கண்டுகொள்ளாமல் காங்கிரஸை ஆட்சி அமைக்க அழைக்கிறது அரசு.தங்களை பொருட்படுத்தவில்லை என்ற எரிச்சலில் கல்கத்தாவில் நேரடி நடவடிக்கை என்ற பெயரில் மிகப்பெரிய அழிவுகளை உருவாக்குகிறது முஸ்லிம் லீக்.பிரிவினைக்கு இவைகள் முக்கியமான காரணம் என்று அசாத் புத்தகத்தின் பல்வேறு இடங்களில் சொல்கிறார்.

இப்படி தொடர்ச்சியான சம்பவங்கள் மூலமாக பிரிவினை ஒரு தவிர்க்க இயலாத விஷயம் என்ற பிம்பத்தை நாமே தோன்றச் செய்துவிட்டோம் என்கிறார் அசாத்.ஆனால் அவர் சொல்வதில் ஒரு முக்கிய விடுபடல் இருக்கிறது.மவுண்ட்பேட்டன் சொல்வது போல ஒரளவுக்கு வலுவான மத்திய அரசு இல்லாமல் மாகாணங்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் என்றால் இந்தியா பலவீனமாகி இருக்கும்.இதை நேருவும் படேலும் ஏற்றார்கள்.அசாத் மற்றொரு யோசனையை தெரிவிக்கிறார்.இப்போது இருப்பது போல இடைக்கால அரசை இன்னும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கலாம்.அப்போது முஸ்லிம் லீக் கட்சியின் வலு குறைந்துவிடும்.அதன்பின் பிரிவினையின் தேவை இருக்காது என்கிறார்.அதை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை.ஜின்னாவிற்கு பிரதமர் பதவி கொடுத்துவிட்டால் இந்தப் பிரிவினையின் தேவை இருக்காது என்ற யோசனையும் முன்வைக்கப்படுகிறது.காந்தியும் மவுண்ட்பேட்டனும் அதை ஏற்கிறார்கள்.ஆனால் நேருவும் படேலும் அதை நிராகிரிக்கிறார்கள்.பிரிவினை தவிர வேறு வழியில்லை என்ற நிலை வந்துவிடுகிறது.அதற்கான நாளும் குறிக்கப்படுகிறது.பிரிவினையை தொடர்ந்து இந்தியா சுதந்திரம் பெறுகிறது.வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது.அவர்கள் பாகிஸ்தானோடு சென்று விட முடிவு எடுக்கிறார்கள்.கான் சகோதரர்கள் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகிறார்கள்.காங்கிரஸ் இப்படி தங்களை சட்டென்று கைவிட்டதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அசாத்திற்கு படேலை பிடிக்கவில்லை என்று இந்தப் புத்தகம் மூலம் தெரிகிறது.பிரிவினைக்கு பின்னர் மேற்கு கிழக்கு பஞ்சாபில் மிகப்பெரிய அளவில் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.இது பின்னர் டெல்லியில் பரவுகிறது.டெல்லியில் இருக்கும் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள்.காந்தி இதை குறித்து கேட்கும் போது படேல் அப்படி பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என்கிறார்.காந்தி உண்ணாவிரதம் எடுக்கப்போவதாக அறிவிக்கிறார்.படேல் தான் பம்பாய்க்கு செல்ல வேண்டும் என்று சொல்லி சென்றுவிடுகிறார்.காந்தியால் மட்டுமே அரசியில் வாழ்க்கை பெற்ற படேல் காந்தியை விரோதித்து அவரது அறிவரையை ஏற்காமல் இருந்தது மிகப்பெரிய தவறு என்கிறார் அசாத்.

டெல்லியில் காந்தியின் உண்ணாவிரதத்தை தொடர்ந்து அமைதி திரும்புகிறது.காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரியில் பிர்லா இல்லத்தில் இருக்கும் போது அங்கு ஒரு முறை வெடிகுண்டு வீசப்படுகிறது.அதைத்தொடர்ந்து சில நாட்களிலேயே கோட்சேவால் காந்தி கொல்லப்படுகிறார்.வெடிகுண்டு வீசப்பட்ட போதே காவலை அதிகரித்து சோதனையை தீவிரப்படுத்தியிருந்தால் இந்தச் துயரச் சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.ஆனால் படேல் அதை செய்யவில்லை.அந்த குற்றவுணர்வுதான் அவர் அடுத்த சில வருடங்களில் மாரடைப்பில் இறக்க காரணம் என்கிறார் அசாத்.

அசாத் பிரிவினை தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று புத்தகம் முழுக்க சொன்னாலும் அது சாத்தியமான ஒன்றாக இருக்கவில்லை என்பதை அந்த புத்தகத்தின் வழியே நம்மால் உணர முடிகிறது.அதற்கு முக்கிய காரணம் எந்த மக்கள் ஆதரவும் அற்ற அகங்காரம் மட்டுமே நிரம்பிய ஜின்னா.அவருக்கு இந்திய பிரதமர் பதவி கொடுக்கப்பட்டிருந்தால் அல்லது பிரித்தானிய அமைச்சரவையின் தூதுக்குழு திட்டத்தை ஏற்றிருந்தால் ஒரு வேளை பிரிவினை தவிர்க்கப்பட்டிருக்கலாம்.ஆனால் அது எத்தனை காலம் தொடர்ந்திருக்கும்.மேலும் பலவீனமாக மத்திய அரசு பல்வேறு இன மொழி அடையாளங்களை கொண்ட மாகாணங்களை எப்படி கட்டுப்படுத்தும்.மற்றும் மறுபடி நேரடி நடவடிக்கை நாள் போன்ற ஒன்று நிகழ்ந்திருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்.

மெளலானா அபுல் கலாம் அசாத்தின் இந்தப் புத்தகத்தில் அம்பேத்கர் எங்கும் வரவில்லை.மதராஸ் மாகானம் எங்கும் பெரிதாக வரவில்லை.ராஜகோபாலாச்சாரி ஒரிரு இடங்களில் வருகிறார். உண்மையில் அசாத்தால் பிரிவினையை ஏற்க முடியவில்லை.அந்தப் பிரிவினைக்கு காரணமாக நேரு, படேல்,ஜின்னா ஆகியோரின் பதவி சார்ந்த அகங்காரம்,தனிமனித பலவீனங்களை சுட்டிக்காட்டுகிறார்.நேருவுக்கு கிருஷண்ன் மேனன் மீது அபாரமான நம்பிக்கை இருந்ததை கண்டறிந்து அதன் வழி மவுண்ட்பேட்டன் பிரிவினைக்கு சாதகமான எண்ணங்களை நேருவில் உருவாக்கினார் என்கிறார்.மேலும் லேடி மவுண்ட்பேட்டனின் ஆளுமை நேருவில் பிரிவினை சார்ந்து முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிறார்.காந்தி கூட ஒரு கட்டத்தில் பிரிவினையை ஏற்றுக்கொண்டதை சொல்லி புலம்புகிறார்.ஆனால் மனிதர்கள் மட்டுமே இந்தப் பிரிவினைக்கு காரணமில்லை.அது ஒரு சூழல்.அவ்வளவுதான்.அதில் மனித அகங்காரங்களும் பலவீனங்களும் ஒரு அங்கம் மட்டுமே.1930களிலிருந்து 1948வரையான இந்திய வரலாற்றை பற்றிய மற்ற புத்தகங்களுடன் இணைத்து வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.

அகமத்நகர் கோட்டை சிறைச்சாலையில் இருந்த போது நேரு அங்கு ஒரு பூந்தோட்டத்தை உருவாக்கலாம் என்கிறார்.விதைகள் கொண்டு வரப்பட்டு அங்கு அனைவரும் இணைந்து பூந்தோட்டத்தை உருவாக்குகிறார்கள்.பஷீர் தான் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு பூந்தோட்டத்தை உருவாக்கிவிடுவார்.அது போல இந்தப் பூந்தோட்டம் அந்த சிறைச்சாலையில் அந்த போர் காலத்தில் எதிர் காலத்தின் நிச்சயமின்மையில் உருவாக்கப்பட்டது அந்த பெருந்தலைவர்கள் பற்றிய  அழகான ஆளுமை சித்திரத்தை உருவாக்கிவிடுகிறது.எத்தனை அற்புதமான மனிதர்கள்.இனி அப்படியான தலைவர்கள் இந்தியாவிற்கு எப்போது கிடைப்பார்கள்.

India Wins Freedom - Maulana Abul Kalam Azad - Orient Longman.



பிம்பம்




-1-

கூரை வேய்ந்திருந்த டீக்கடையில் பட்டர் பிஸ்கட்டும் டீயுமாக நின்றிருந்தார் கிருஷ்ணன்.புங்கை மரத்தின் இளஞ் சிவப்பு பூக்கள் எங்கும் சொரிந்தன.இளஞ் சிவப்பு பாவாடை தாவணியில் சிற்றருவியின் இரைச்சல் போல சென்று கொண்டிருந்தார்கள் பள்ளி யுவதிகள்.மாலை வெயிலின் சத்தம் வண்டின் ரீங்காரம் போல ஒலித்துக்கொண்டிருந்தது.சைக்கிள் பெல்லை அடித்துக்கொண்டு  யுவதிகளை தாண்டிச் சென்றான் சிறுவன்.டீக்கடை பேஞ்சில் அமர்ந்தார் கிருஷ்ணன்.கவுன் அனிந்தவாறே வந்தார் ஏபிபி. கிருஷ்ணன் எனக்கும் டீ சொல்லுங்க என்று சொல்லிக் கொண்டு அமர்ந்து தினத்தந்தி பேப்பரை திறந்தார்.ராஜ் நரேய்ன் சிறுநீர் அருந்துவது உடல்நலத்திற்கு நல்லது என்று மறுபடியும் சொல்லியிருந்தார்.சரண் சிங் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.ரஜினிகாந்த் தூப்பாக்கியுடன் அமர்ந்திருக்கும் பில்லா திரைப்படத்தின் விளம்பரம் வந்திருந்தது.தன் கழுத்திலிருந்த மருக்களை தடவிக்கொண்டார் ஏபிபி.

ஏட்டை பார்த்து என்ன ஏட்டு இன்னிக்கு கிருஷ்ணன் அந்த கரண்ட் தெப்ட் கேஸ்ல கிராஸ் பண்ணது மாஜிஸ்திரேட்டுக்கு கேட்காதது இருக்கட்டும் , அது கிருஷ்ணனுக்கு கேட்டதா என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று சொல்லி சிரித்தார்.எல்லோரும் சிரித்தார்கள்.யாரையோ சொல்வது போல எழுந்து தனக்கும் ஏபிபிக்கும் ஒரு ரூபாய் கொடுத்து விட்டு கவுன் அணிந்தவாறு ஓப்பன் கோர்ட்டுக்குள் சென்றார் கிருஷ்ணன்.சிகரெட்டை பற்ற வைத்துவாறு கிருஷ்ணன் செல்வதையே பார்த்துக்கொண்டே இருந்தார் ஏபிபி.கோர்ட்டுக்குள் செல்லும் போது கையிலிருந்த கேஸ் கட்டு கீழே விழுந்தது.எடுக்கக் குனிந்தவர் இந்த வழக்கில் வெற்றி பெற்று விடுவோம் என்று நினைத்துக்கொண்டார். தொங்கு மீசையை நீவிவிட்டார்.ஓடுங்கியிருந்த அவரின் தோள்களில் கூன் விழுந்திருந்தது.மெல்ல உள்ளே சென்றார்.

விட்னஸ் நான்கு அருவாளால் வெட்டினார் என்று சொல்லியிருக்கிறார்.ஆனால் மருத்துவர் அளித்த அறிக்கையில் கத்தி காயம் என்று சொல்லியிருக்கிறார்.சந்தேகத்தின் பலனை எதிரி ராஜனுக்கு அளித்து இந்த நீதிமன்றம் அவரை விடுவிக்கிறது என்று தீர்ப்பளித்தார் மாஜிஸ்திரேட்.நான்காவது விட்னஸ் ஏட்டிடம் கிருஷ்ணன் அன்று கேட்கும் போது தனக்கு சரியாக புரியவில்லை.ஏதோ ஒரு குழப்பத்தில் அருவாள் தானே என்று கேட்டதற்கு ஆமாம் என்று சொல்லிவிட்டதாக புலம்பிக்கொண்டிருந்தார்.

காலணாவுக்கு நாவல் பழங்களை பெரிய அலுமனிய பாத்திரத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த மூதாட்டியிடம் வாங்கி ஒன்றை எடுத்து நாவில் சுழற்றி கொட்டையை துப்பினார் கிருஷ்ணன்.நாவல் பழ பொட்டலத்தை எடுத்து ஸ்கூட்டரின் பெட்டியில் வைத்தார்.கவுன் பையை ஸ்கூட்டர் கேரியரில் மாட்டினார்.மடித்துவிட்டிருந்த வேஷ்டியை எடுத்துவிட்டவாறு கிருஷ்ணன் அருகில் வந்தார் ராஜன்.அவர் செருப்பு அணிந்திருக்கவில்லை.நூறு ரூபாயை கொடுத்து விட்டு மீதியை வீட்டிற்கு வந்து தருவதாக சொன்னார்.ராஜனின் கால் கட்டை விரலில் லேசாக ரத்தம் கசிந்தது.கிருஷ்ணன் கேட்டதற்கு கீழே இறங்கி வரும் போது படியில் தடுக்கிவிட்டதாக சொன்னார்.அவரே மேலும் ராமலிங்க சாமிக்கு வேண்டிக்கொண்டதால் இனி செருப்பு அணிவதில்லை என்றார்.அசைவத்தை கூட விட்டுவிட்டதாக சொன்னார்.அவர் பேசும் போது கைகளை காற்றில் அலையவிட்டார்.எதிரியை தாக்க உண்மையில் ராஜனுக்கு கத்தியும் தேவையில்லை,அருவாளும் தேவையில்லை,இந்த தூண் கைகள் போதும் என்று நினைத்துக்கொண்டார் கிருஷ்ணன்.

ஏபிபி கிருஷ்ணனிடம் எதுவும் பேசாமல் ஜாவா பைக்கை எடுத்துக்கொண்டு சென்றார்.ஸ்கூட்டரின் கீக்கரை அடித்துவிட்டு சுற்றிவந்து ஸ்டாண்டிலிருந்த வண்டியை தள்ளி திருப்பினார் கிருஷ்ணன்.ராஜன் கிருஷ்ணனுக்கு சலாம் வைத்தார்.தலையை அசைத்து ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்லிச் சென்றார் கிருஷ்ணன்.ராஜன் அடுத்து ஒருவரை அடித்துவிட்டு கைதாகும் போது  ஜாமின் எடுக்க அவரின் தம்பி ஐம்பது ரூபாயை எடுத்துக்கொண்டு சைக்கிளில் வருவார்.அதுவரை இந்த நூறு ரூபாய்க்கு மேல் எதுவும் வரப்போவதில்லை.கமினாட்டி பய என்று ஏபிபியை நினைத்துக் கொண்டார்.நால்ரோடு மார்கெட்டில் காய்கறி வாங்க வண்டியை நிறுத்தினார்.

-2-

டீ கிளாஸூம் கையுமாக நின்றிருந்தான் அரவிந்தன்.வெள்ளை நிறத்தில் பழுப்பு திட்டுகள் நிரம்பிய பசுமாடு தர்பூசணி பழ மட்டைகளை தின்றுகொண்டிருந்தது.விரட்டிய பூசணிக்கடைக்காரரை பார்த்து சர்தான்பா என்று சொல்லிக்கொண்டு திரும்பியது.இளஞ் சிவப்பு நிறத்தில் சேலை அணிந்திருந்த யுவதி தன் ஹேண்ட் பேக்கை சரி செய்தவாறு அரவிந்தன் அருகில் வந்தாள்.ரிஷி மோட்டார்ஸ் நிறுவனம் எங்கிருக்கிறது என்று கேட்டாள்.அப்போது அவளது செந்நிற உதடுகள் கீழே விழுந்துவிட்டது.அதை எடுத்து அவளுக்கு தர வேண்டும் என்று நினைத்தவாறு கீழே பார்த்தான்.பிறகு நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.நா என்று சொல்லி அவளது உதடுகளை பார்த்தான். பின்னர் தொண்டையை கமறி, நானூறு மீட்டர் சென்று இடது பக்கமாக திரும்பினால் மூன்றாவது கட்டிடம் என்றான்.அவள் ம்ம் என்று தலையாட்டி சென்றாள்.

ரிஷி மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளாகத்தில் தன் வண்டியை நிறுத்திவிட்டு பார்த்தால் உடன் வேலை செய்பவனோடு வந்து இறங்கினாள் இளஞ் சிவப்பு சேலைக்காரி.அரவிந்தனை பார்த்துவிட்டு தலையை சிலுப்பிக்கொண்டு உள்ளே சென்றாள்.அவன் அரவிந்தனை பார்த்து புன்னகைத்தான்.அரவிந்தன் புன்னகைக்கவில்லை.

கண்ணாடியில் பட்டு சிதறிய மாலையின் மஞ்சளில் செருகியிருந்தாள் வரவேற்பறை பெண்.அவளிடம் தன் பெயர் ரேணுகா என்றும் நேர்காணலுக்கு நாதன் வரச்சொல்லியிருந்தார் என்றும் சொன்னாள் இளம் நங்கை.தலையசைத்து அமரச்சொல்லி சைகை செய்தாள் மஞ்சள் மங்கை.கண்வேயர் மிக மெதுவாக  செல்கிறது ,மேலே வா என்ற மாடியிலிருந்து கத்தினான் தலை முழுமையாக வழுவியிருந்தவன்.அமர்ந்திருந்த செந்நிறத்தாள் அழைத்தவனையும் அரவிந்தனையும் மாறி மாறி பார்த்தாள்.

பழுதான கன்டன்ஸரை மாற்றிவிட்டு தன் இடம் நோக்கி சென்றவனை கண்ணாடி அறையிலிருந்து சைகையால் அழைத்தார் அவனின் மேலாளர் யாசர்.அறையில் அமர்ந்திருந்தாள் யுவதி.இவர் ரேணுகா.எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்கிறார்.ஒரு வருடம் ஆகிறது.இவரை நேர்காணல் செய்துவிட்டு என் இடத்திற்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு பருவமே புதிய பாடல் பாடு என்று ஹம்மிங் செய்தபடியே சென்றார் யாசர்.

ஸிங்கரனஸ் மோட்டாருக்கும் இன்டக்ஸன் மோட்டாருக்கும் என்ன வித்யாசம் என்று கேட்டான் அரவிந்தன்.தெரியாது என்றாள்.ஃபேனில் என்ன மோட்டார் பயன்படுத்தப்படுகிறது என்று கேட்டான்.உதட்டை பிதுக்கினாள்.அந்தரத்தில் பறந்துகொண்டு ஹைய் டென்ஸன் கம்பியை பிடித்தால் ஷாக் அடிக்குமா என்ற கேள்விக்கு அடிக்கும் என்றுதான் நினைக்கிறேன் என்றாள்.ட்ரான்ஸ்பார்மரில் எப்படி வோல்டேஜ்ஜை குறைப்பதும் ஏற்றுவதும் சாத்தியமாகிறது என்று கேட்டுவிட்டு மேலும் தொடரலாமா என்று அவளை வினவினான்.தொடரலாம் என்றாள்.மழை நேரங்களில் தென்னமரத்தின் மட்டை டிரான்ஸ்மிஸன் கம்பியில் பட்டால் ஏன் பற்றிக்கொள்கிறது என்று கேட்டான்.ஷார்ட் ஸர்கூட் ஆவதால் இருக்கலாம் என்றாள்.டிரான்ஸிஸ்டரை எதற்கு பயன்படுத்துவார்கள் என்பதற்கு அவள் சிரித்துவிட்டாள்.உங்களுக்கு அடிப்படைகள் தெரியவில்லையே என்று சொல்லி அவளைப் பார்த்தான்.நீள் நகங்களில் இளஞ் சிவப்பு நிறத்தில் நெயில் பாலிஷ் ஈட்டிருந்தாள்.அப்போதுதான் அவளது ஹேன்ட் பேக் கூட இளஞ் சிவப்பு நிறத்திலிருந்ததை கவனித்தான்.அவளது காதணிகள் கூட அந்த நிறத்தில் இருக்கலாம்.அவளது கார்மேகக் கூந்தல் அவளது காதுகளை மறைத்திருந்தது.அவளது காலணியை பார்க்கலாம் என்றால் குனிந்து பார்ப்பது தவறாக எடுத்துக்கொள்ளப்படலாம் என்று அதை தவிர்த்தான்.டிரான்ஸ்மிஷனிலேயே அதிக மின்சாரம் வீணாகிவிடுகிறது என்று சொல்லப்படுகிறதே , அப்படியென்றால் என்ன என்று விளக்கமுடியுமா என்ற கடைசியாக கேட்டான்.எதையும் உளற வேண்டாம் என்று முடிவு செய்து தெரியவில்லை என்றாள்.சரி இங்கேயே இருங்கள் நான் வருகிறேன் என்று சொல்லி யாசரை பார்க்கச் சென்றான்.

அந்தப் பெண்ணுக்கு எதுவும் தெரியாது என்பது தனக்கும் தெரியும் என்றார் யாசர்.அந்தப் பெண்ணுக்கு சம்பளம் இல்லாமல் ஆறுமாதம் ட்ரெயினிங் கொடுத்து பார்ப்போம் , பிறகு முடிவு செய்யலாம் என்று நாதன் சொன்னதாக சொன்னார்.அந்தப் பெண்ணிடம் சென்று செய்தியை சொன்னான்.அவள் புன்னகைத்து எழுந்தாள்.அவளது காலணிகளும் இளஞ் சிவப்பு நிறத்தில் இருந்தது.

-3-

ராஜாவுக்கு ராஜா நான்டா எனக்கு மந்திரி இங்கு யாருமில்ல என்று அலறிக்கொண்டிருந்தது லக்ஷ்மி திரையரங்கின் ஸ்பீக்கர்கள்.டாக்ஸியில் கட்டிடத்தின் மீது செங்குத்தாக சென்றுகொண்டிருந்தார் ரஜினிகாந்த்.காக்கி சட்டை பேன்ட் அணிந்திருந்த ரஜினிகாந்த் கட் டவுட்டில் புன்னகைத்தார்.கருப்பு நிற நிஜார் அணிந்திருந்த அரவிந்தன் நைனா நைனா என்று சிணுங்கிக்கொண்டிருந்தான்.கூச்சி ஐஸ்காரன் ஐஸ் பெட்டியின் மூடியை திறந்து மூடி தட்டிக் கொண்டிருந்தான்.நிறை கூட்டம்.காக்கி பேன்ட்டை பார்த்த அரவிந்தன் தலை தூக்கி பார்த்தான்.கான்ஸடபிள் லத்தியால் கூட்டத்தை வரிசைக்கு தள்ளினார்.அவரின் பேன்ட்டை பிடித்து இழுத்தான்.குனிந்து பார்த்த கான்ஸடபிளிடம் எங்க அப்பா லாயர் கிருஷ்ணன் ,அவருகிட்ட ஈட்டுக்கினு போங்க என்றான்.கிருஷ்ணன் பையனா நீ என்றவர் அவனை தூக்கிக்கொண்டார்.டிக்கட் வாங்கிய கிருஷ்ணன் நிற்கச் சொன்ன இடத்தில் பையனை காணவில்லை என்பதை கண்டுகொண்டார்.அந்தக் கூட்டத்தில் எங்கிருந்து தொடங்கி எப்படி தேடுவது என்பதை குறித்து ஆலோசித்தார்.கான்ஸடபிள் கிருஷ்ணன் தோளை தட்டினார்.திரும்பிய கிருஷ்ணனிடம் அரவிந்தனை கொடுத்துவிட்டு பாத்துக்கோங்க சார் என்று சொல்லி கூட்டத்தை வரிசைப்படுத்த சென்றுவிட்டார்.கிருஷ்ணன் அரவிந்தனின் கரங்களை பற்றிக்கொண்டார்.அரவிந்தன் கூச்சி ஐஸை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.கிருஷ்ணனும் அரவிந்தனும் படிக்காதவன் படத்தை பார்க்க திரையரங்குக்குள் ஒன்றாக சென்றார்கள்.

-4-

நாதனின் அறையில் மல்லி புஷ்பங்களை வைத்து வேங்கடாசலபதியை அலங்கரித்து விஷ்ணு சகஸ்ரநாமத்தை சொன்னார் அர்ச்சகர்.அர்ச்சகர் சென்ற பின் மேஜையில் இருந்த உதிரிப்பூக்களை    பார்த்துக்கொண்டிருந்தான் அரவிந்தன்.நாதனின் நெற்றியில் அர்ச்சகர் வைத்துச் சென்ற குங்குமம் இருந்தது.வெண்ணிற சல்வார் கமீஸில் அமர்ந்திருந்தாள் ரேணுகா.ரேணுகாவுக்கு பயிற்சியளித்து ஆறு மாதங்கள் கழித்து ஒரு நேர்காணலை யாசர் வைப்பார்.தேர்ச்சியில் வெற்றி பெறும் நிலையில் அவள் தொடரலாம்.அவளுக்கு பயிற்சியாளராக அரவிந்தனை நியமிக்கிறேன் என்றார்.யாசர் சரியென்று தலையசைத்தார்.எனக்கு இதில் விருப்பமில்லை என்றான் அரவிந்தன்.நாதன் யாசரை பார்த்தார்.அவர் நாதனை பார்ப்பதை தவிர்த்து அரவிந்தனை பார்த்தார்.அவன் நான் பணிக்கு திரும்புகிறேன் என்று சொல்லி அறையிலிருந்து வெளியேறினான்.யாரும் பேசவில்லை.யாசர் எழுந்திருக்க எத்தனித்தார்.அவரை அமரச்சொல்லி சைகை செய்த நாதன், அரவிந்தனுக்கு இதில் விருப்பமில்லை என்றால் அதை உங்களிடம் முன்னரே சொல்லியிருக்க வேண்டும்,இல்லையென்றால் பிறகு சொல்லியிருக்கலாம்.இது தவறு.சரி போகட்டும்.வேறு யார் இதற்கு சரியாக இருப்பார் என்று தோன்றுகிறதோ அவரை நியமியுங்கள்.பொறுப்பு உங்களுடையது என்று சொல்லிச் சென்றார்.

-5-


எப்போதும் பச்சை தமிழன் , இப்போ நான் வெள்ளைத் தமிழன் என்று பாடிக்கொண்டிருந்தார், ஆடிக்கொண்டுமிருந்தார் ரஜினிகாந்த்.பச்சை தமிழன் என்று ஈவேரா காமராஜரை சொன்னார்.திராவிட முன்னேற்ற கழகத்தை கண்ணீர்த்துளிகள் என்றார்.தன் காதல் ஏற்கப்படாததால் தற்கொலைக்கு துணிகிறார் சிவாஜி.கதாநாயகி தன் சிவப்பு தாவணியை கழற்றி ரயிலை நிறுத்த சமிக்ஞை செய்தவாறு தண்டவாளத்தில் ஓடி வருகிறார்.வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றி எழுந்த கிருஷ்ணன் திரையரங்கை விட்டு வெளியே வந்து நின்றார். சிவப்பு நிற சோபாவில் அமர்ந்து தளர்வானார்.மொட்டை தலையுடன் கூலிங்கிளாஸில்  ரஜினிகாந்தின் டிஜிட்டல் போஸ்டரை பார்த்தார்.கதாநாயகியின் பெயர் ஸ்ரேயா.ஸ்ரேயஸ் என்பது அற வாழ்வின் பயன்.அதுவும் முக்கியம் என்கிறது நம் மரபு.எழுந்து சென்று ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கினார்.மறுபடியும் வந்து சோபாவில் அமர்ந்துகொண்டார்.நீங்க பாத்ரூம் போயிருக்கீங்கனு நினைச்சேன், இங்க என்ன பண்றீங்க என்று கேட்டுக்கொண்டு அவர் அருகில் வந்தான் அரவிந்தன்.இல்ல நீ போய் பாரு , எனக்கு படம் பிடிக்கல என்றார் கிருஷ்ணன்.அவர் அருகில் அமர்ந்த அரவிந்தன் அவர் வைத்திருந்த பாட்டிலை வாங்கி அவனும் நீர் அருந்தினான்.சரி வாங்க என்றவன் அவரை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான்.பெரும் மழை.முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு நின்றிருந்த இரு சக்கர வாகனங்கள் மழையில் பனித்திருந்தன.கெடிலம் ஆற்றின் நதிக்கரையில் தன் அண்ணன் வரதராஜூலுவுடன் நின்று கொண்டு பார்த்த பெரும் மழை.காமராஜரின் மறைவின் போது அதே கெடிலம் ஆற்றின் நதிக்கரையில் பார்த்த மழை.தன் திருமணத்தின் பந்தகால் அன்று பொழிந்த மழை.ஒடுங்கி நின்றார் கிருஷ்ணன்.அரவிந்தன் இருவருக்கும் டீ வாங்கி வந்தான்.

-6-



மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்ன தான் வித்யாசம் என்று தோழர் ஸ்ரீனிவாசராவை கேட்டான் அரவிந்தன்.இந்தியா என்கிற நாட்டை இருவரும் எப்படி பார்க்கிறோம் என்பதில் வித்யாசம் உள்ளது என்றார்.கெட்டியான கறுப்பு கண்ணாடி சட்டகத்திற்கு பின்னால் தொலைவில் அழுந்தியிருந்தன அவரது கண்கள்.ஆனால் சீனப்போரின் போது இருந்த சிக்கல்கள் இப்போது இருக்கிறதா என்று கேட்டான்.ஆமாம் என்றார்.கம்யூனிஸ்ட் அரசாங்கம் தன் மக்களின் மீது தானே எப்படி அரசு இயந்திரத்தின் அதிகாரத்தை செலுத்த முடியும் என்று கேட்டான்.நீங்கள் அதிகம் வாசிக்க வேண்டும் என்றார் ஸ்ரீனிவாசராவ்.புத்ததேவ் தொழிற்சாலைகள் மட்டுமே படித்துவரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான வழி என்று கருதுகிறார்.அது உண்மையும் கூட.தொழிற்சாலைகளுக்கு நிலம் வேண்டும்.சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு எதிராக  உருவாக்கப்பட்ட போராட்டங்கள் தானாக உருவானவை அல்ல.நந்திகிராமில் கெமிக்கல் தொழிற்சாலை வரப்போவதில்லை என்று சொன்ன பின்னும் போராட்டம் தொடரும் போது ஒர் அரசு அமைதியாக இருக்க வாய்ப்பில்லை என்றார்.

நாம் தொழிற்சாலைகளைத் தான் முதன்மையானதாக கொள்ள வேண்டுமா என்று கேட்டான்.எது வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்குமோ அதுவே முதன்மையானது என்றார் ஸ்ரீனிவாசராவ்.கொஞ்சம் இருங்க என்று படுக்கையிலிருந்து எழுந்தவர் தன் படுக்கையின் மீது  பரணில் இருந்த முன்னேற்றப் பதிப்பகத்தின் சில புத்தகங்களை எடுத்து அரவிந்தனிடம் கொடுத்தார்.புத்தகங்களை வைக்க இடமில்லை.வாசிப்பார்கள் என்று தோன்றுபவர்களிடம் கொடுத்துவிடுகிறேன் என்றார்.வாங்கிக்கொண்டான்.

கயர்லாஞ்சியில் நடந்தது போல இந்தியாவில் ஏகப்பட்ட சாதிய கொடூரங்கள் நடக்கிறது.ஆனால் ஏன் இந்தியாவை நீங்கள் சாதியால் பிளவுண்ட சமூகமாக பார்க்காமல் வர்க்க அடிப்படையில் பார்க்கிறீர்கள் .உயர்த்தப்பட்ட சாதி பெண் தாழ்த்தப்பட்ட சாதி பெண் கொடுமை படுத்தப்படுவதை பார்த்து ஒன்றும் செய்யாமல் நிற்கிறாள்.இதில் எங்கு வர்க்கம் வருகிறது.ஸ்ரீனிவாசராவ் மறுக்கும் தொனியில் தலையசைத்து நாங்கள் இந்தியாவில் இருக்கும் சாதிய பாகுப்பாட்டை தீவிரமாக கவனிக்கிறோம்,ஆராய்கிறோம், சமீபத்தில் கூட உத்தப்புரத்தில் போராட்டம் நடத்தினோம் என்றார்.இன்று மாறிவிரும் முதலாளித்துவத்தை கம்யூனிஸ்ட் கட்சி கணக்கில் எடுத்துக்கொள்கிறதா என்று தெரியவில்லை என்றான்.புத்ததேவ் அதைத்தான் நடைமுறைப்படுத்த விரும்புகிறார்.முதலீடுகளை ஊக்குவிக்கிறார்.நாங்கள் அனைத்தையும் விவாதிக்கிறோம் என்றார்.அப்படியென்றால் வலதுக்கும் இடதுக்குமான வித்யாசம் இனி பண்பாட்டு தளத்தில் மட்டும்தானா என்று கேட்டான்.மிகவும் மேலோட்டமான கேள்வியாக தெரியவில்லையா என்றார்.

அரவிந்தன் கதவை திறக்க முற்பட்ட போது இரும்பு நாற்காலி கதவில் இடித்தது.நாற்காலியை மடித்து சுவற்றில் சாய்த்து விட்டு கதவை திறங்கள்.இது ஒரு ஆள் மட்டுமே புழங்க சாத்தியமுள்ள அறை என்று சொல்லி சிரித்தார் ஸ்ரீனிவாசராவ்.அரவிந்தன் நாற்காலியை மடித்து சுவற்றில் சாய்த்துவிட்டு மரக்கதவை திறந்து வெளியே வந்தான்.

-7-



இந்திரா காந்தி சரண் சிங்கால் கைது செய்யப்படுகிறார் என்ற செய்தி அறிவிக்கப்பட்டதுமே தன்னுடன் பார் ரூமிலிருந்த குமாஸ்தாக்களுக்கும், வக்கீல்களுக்கும் , எஸ்.ஐக்கும் டீ வாங்கிக்கொடுத்தார் கிருஷ்ணன்.காமராஜரின் இறுதி காலகட்டத்தின் துயரத்திற்கு பழிவாங்கியாகி விட்டது என்று பெருமூச்சு விட்டார்.அப்போது இந்திரா காங்கிரஸ்தான் இனி காங்கிரஸாக இருக்கும் என்று சொன்ன ஏபிபியை போடா துரோகி என்று கத்தினார்.நாம் எப்போதும் ஸ்தாபன காங்கிரஸ் தான் என்று குமறினார்.ஸ்தாபன காங்கிரஸ் ஜனதாவில் கலந்துவிட்டது, நீயும் ஒரு நாள் இந்திரா காங்கிரஸூக்கு வருவாய் என்று சுண்ணாம்பை வெற்றிலையில் தடவியபடி சொன்னார் ஏபிபி.மேஜையை தள்ளிவிட்டு ஏபிபியை நோக்கி பாய்ந்தார் கிருஷ்ணன்.கிருஷ்ணனை தடுத்த எஸ்.ஐ. ஏபிபியை அமைதியாக  இருக்கும் படி சொன்னார்.வெற்றிலைச்சாறு வழிய சிரித்தபடி பார் ரூமிலிருந்து வெளியே சென்றார் ஏபிபி.

-8-



மாலை , கோர்ட்டின் வரந்தாவில் மஞ்சள் வெயிலை படரவிட்டிருந்தது.தனியாக நின்றார் கிருஷ்ணன்.சரண் சிங்கும் மொராஜி தேசாயும் அதிக காலம் ஒன்றாக இருக்க மாட்டார்கள்.மறுபடியும் இந்திரா காங்கிரஸ் வந்துவிடக்கூடும்.ஸ்தாபன காங்கிரஸ் என்பது இனி இல்லாத காங்கிரஸாக ஆகிவிடும்.ஜனதா கட்சியில் பொறுப்பு வகிப்பது பொருளற்றது என்று  தோன்றியது.எல்லோரும் கிளம்பிகொண்டிருந்தார்கள்.தம்பி இங்க வாப்பா என்று அழைத்தார் திருமண் ஈட்டுயிருந்த அனந்தரங்கன்.நாளைக்கு நான் வரல, சகலன் பொண்ணுக்கு கடலூர்ல சுப்புராயலு மண்டபத்துல கல்யாணம், அப்படியே செசன்ஸ் கோர்ட்டுக்கு போக வேண்டியிருக்கு.நீ என்ன பன்ற, நாளைக்கு வேலுச்சாமி கேஸ் ஹியரிங் வருது.அவருக்கு உடம்பு சரியில்ல, வர முடியலன்னு சொல்லி அடுத்த மாசத்துக்கு ஹியரிங் டேட் வாங்கிக்கோ என்று சொல்லி பத்து ரூபாய் அளித்தார்.கிளம்ப யத்தனித்தவர் நான் வாழவைப்பேன்னு ஒரு படம் வந்திருக்கு, சிவாஜி படம், அதுல ஒரு பையன் புதுசாக நடிச்சிருக்கான்.பெரு ரஜினிகாந்த்.நல்லா நடிக்கிறான்.நீ போய் பாரு என்றார்.ஆகட்டும் பார்க்கலாம் என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் கிருஷ்ணன்.

ஐ எம் மைக்கேல் டிசோஸா.ட்ரூ கிறிஸ்டியன் என்று திரையில் பழுப்பு பேன்டும் பழுப்பு கோட்டும் தொப்பியுமாக அடிக்கடி சொல்லிகொண்டிருந்தான் ஒருவன்.வேகமாக நடந்தான்.துப்பாக்கியை சுழற்றினான்.கோட்டை விலக்கி இடையில் இரு கைகளையும் வைத்து ஸ்டைலாக நின்றான்.படிக்கட்டுகளில் விரைவாக ஏறினான்.அவனின் தமிழ் கொச்சையாக இருந்தது.கரிய நிறத்திலிருந்த அந்த ஆள் மேஜர் சுந்தர்ராஜனை தப்ப விடாமல் தன்னுயிரை இழக்கிறான்.சிறிய கூர்மையான கண்கள்.விரைவாக நடந்து திரையரங்கை விட்டு வெளியே வந்தார் கிருஷ்ணன்.சட்டென்று தாவி சைக்கிளில் அமர்ந்தார்.வேகமாக மிதித்தார்.ஐ எம் மைக்கேல் டிசோஸா.ட்ரூ கிறிஸ்டியன் என்று சொல்லிக் கொண்டார்.விசில் அடித்தார்.தன் வீட்டின் படிக்கட்டுகளில் பரவசமாக நடந்தார்.வீட்டின் கதவை திறந்த போது மெட்ராஸிலிருந்து சம்மந்தம் வந்திருப்பதாகவும் ஜாதகம் நன்றாக இருப்பதாகவும் பெண் பார்க்க வரும் திங்கட்கிழமை செல்லலாம் என்றும் அண்ணன் வரதராஜலு கடிதம் எழுதியிருந்தார்.பெண் பார்க்க தான் இப்போது வரவில்லை , ஆனால் தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமே என்று பதில் எழுதிவிட்டு தூங்கப்போனார் கிருஷ்ணன்.கைகளை கட்டிலில் வைக்காமல் குதித்து படுத்தார்.

-9-



லோக் பால் அமைய வேண்டும் என்று ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கினார் அண்ணா ஹாசாரே என்ற தினத்தந்தியின் தலைப்புச் செய்தியை சத்தமாக வாசித்தான் மணிகண்டன்.திருவான்மியூரில் இருந்து கிளம்பும் மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் நானும் கலந்து கொள்ளப்போகிறேன் என்று மணிகண்டனிடம் சொன்னாள் ரேணுகா.அரவிந்தன் டீக்கடையிலிருந்து எழுந்து வந்து வெளியில் நின்றான்.சுத்தியலை கொண்டு சிலையை உடைக்கலாம்.சுத்தியலோடு உளியும் இருந்தால் சிலையை உருவாக்கலாம்.திருப்புளியை வைத்துக் கொண்டு திருகாணிகளைத்தான் திருக முடியும்.அது போதும் போலிருக்கிறது.மற்றபடி எந்தப் பிரச்சனையும் ஒரு வேளை இல்லையோ.எல்லாம் யோசிக்கும் வேலையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாய் முடிகிறது.பசுமாடு தர்பூசணி மட்டைகளை தின்றுகொண்டிருந்தது.

ரேணுகா அரவிந்தன் அருகில் வந்தாள்.மணிகண்டனும் வந்தான்.நான் அரவிந்தனுடன் தனியாக பேச வேண்டும் என்று சொன்னவள் கண்களை சுருக்கி அரவிந்தனை கூர்மையாக பார்த்தாள்.கைகளை கட்டிக்கொண்டு வயிற்றுக்கு முட்டுக்கொடுத்து நின்றாள். நான் நாதனின் உறவுக்காரப் பெண் என்பதால்தான் இங்கு பயிற்சி பெறுகிறேன்.உண்மைதான்.ஆனால் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அற்றவள் இல்லை.எங்கள் கல்லூரியில் எந்த அடிப்படையும் இல்லை.எதுவும் கற்றுத்தரப்படவில்லை.ஏதோ படித்து வெளியே வந்தோம்.இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இங்கே இருக்கிறேன்.உங்களுக்கு ஏன் என் மீது இவ்வளவு எரிச்சல் என்று கேட்டாள்.அவளது உதடுகள் துடித்துக்கொண்டிருந்தது.நான் உங்களை பொருட்படுத்தவில்லை என்பது இல்லை.எனக்கு உங்களுக்கு பயிற்சி அளிக்கும் அளவு பொறுமை இல்லை , அவ்வளவுதான்.வேறு காரணங்கள் இல்லை என்றான்.கைகளை தொங்க விட்டு் ரொம்ப நல்லது என்று  சலித்தவள் விலகி நின்ற மணிகண்டனை பார்த்து போகலாம் என்று கண் அசைத்தாள்.அவனுடன் நடந்து அலுவலகம் நோக்கி சென்றாள்.

மாலை ,மஞ்சள் வெயிலை சாலையில் படரவிட்டிருந்தது.பசுமாட்டை கடைக்காரர் விரட்ட அது தன் வழி பார்த்து சென்றது.தனியாக நின்றான் அரவிந்தன்.வண்டியை கிளப்பிக்கொண்டு அலுவலகம்  சென்றான். வண்டியை நிறுத்திய போது கிருஷ்ணன் அழைத்தார்.திருமண சம்மந்தம் வந்திருப்பதாக சொன்னார்.பெண் பார்க்க வர சொல்கிறார்கள் என்ன சொல்லட்டும் என்றார். நான் வரல, நீங்க போய் பேசிட்டு வாங்க என்றான்.ஆனா நீ வரலன்னா என்று கேட்க வந்த கிருஷ்ணன், சரி நான் பேசிட்டு சொல்றேன் என்றார்.தொங்கு மீசையை நீவிவிட்டுக்கொண்டான் அரவிந்தன்.ஓடுங்கியிருந்த அவனது தோள்களில் கூன் விழுந்திருந்தது.

-10-



எண்ணத்தில் நூறு திட்டமிட்டு கபாலி வாரான் கைத்தட்டு , பம்பரம் போல சுத்திக்கிட்டு பறையிசை அடித்து நீ பாத்திகட்டு என்று முணுமுணுத்துக் கொண்டு மருத்துவமனை லாபியில் அமர்ந்திருந்தான் அரவிந்தன்.அவனை உள்ளே அழைத்தார்கள்.தொப்புள் கொடி சுற்றிக்கொண்டிருக்கிறது என்றார் மருத்துவர்.அரவிந்தன் தலையசைத்தான்.மானிட்டரில் பத்து எட்டு நான்கு என்று எண்கள் மாறிக்கொண்டிருந்தது.மீரா அரவிந்தனின் கரங்களை பற்றிக்கொண்டாள்.அவள் கண்களிலிருந்து நீர் கொட்டியது.அரவிந்தன் அங்கிருந்த மற்ற இயந்திரங்களை போல நின்றுகொண்டிருந்தான்.மருத்துவர்கள் அரவிந்தனை வெளியே சென்று காத்திருக்கச் சொன்னார்கள்.கதவுகள் திறப்பதும் மருத்துவர்கள் வருவதும் செல்வதுமாக இருந்தது.உங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது என்று சொல்லிச் சென்றாள் செவிலி.என்ன குழந்தை  என்று கேட்டதற்கு வந்து சொல்வார்கள் என்று சொல்லி மறைந்தாள்.செந்நிற பூக்கள் நிரம்பிய சேலை அணிந்திருந்த மாந்தளிர் மருத்துவர் உங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்று புன்னககைத்து கடந்தார்.அரவிந்தன் கிழே இறங்கி வந்தான்.எதிரில் டீக்கடையில் லேமன் டீ சொன்னான்.டீ குடித்துவிட்டு கிருஷ்ணனை அழைத்து பேசினான்.பெரும் மழையாக பெய்துகொண்டிருந்த வெயிலை பார்த்து வெறுமன நின்றான்.

-11-

இருள் அப்பியிருந்த இரவின் இருட்டில் கிருஷ்ணன் அமர்ந்திருந்தார்.மெழுகுவர்த்தியை பற்ற வைத்தான் அரவிந்தன்.நெருப்பின் ஜ்வாலை கண்ணாடியில் பிரதிபலித்தது.படிகளிலிருந்து வழிந்தோடியது மழைநீர்.மீராவின் மடியில் குழந்தை படுத்துக்கொண்டிருந்தது.வதபத்ர சாயிக்கி வரஹாலா லாலி என்று பாடிக் கொண்டிருந்தாள் மீரா.மென் ஒளியில் ஜ்வலித்தது அவளின் கூர் நாசி.மீராவின் அருகில் வந்து அமர்ந்தான் அரவிந்தன்.அவளது தலையை வருடினான்.

என் தந்தை என் மகன்
என் மகன் என் தந்தை
நான் தந்தை நான் மகன்

என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொன்னான்.இங்கு எதுவுமே நிற்பதில்லை,எல்லாம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.உன் மடியில் ஒரு துளி பிரபஞ்சம் என்றான்.மீரா சிரித்தாள்.சாப்ட்டிங்களா என்றாள்.தலையசைத்தான்.நான் உறங்கச் செல்கிறேன் என்று எழுந்தார் கிருஷ்ணன்.அரவிந்தனின் தோளில் தலை சாய்த்து கண் அயர்ந்தாள் மீரா.அவளின் மடியில் குழந்தை உறங்கத் துவங்கியிருந்தது.


கூட்டு நனவிலி

கூட்டு நனவிலி என்று நாம் பயன்படுத்தும் வார்த்தை கார்ல் யுங் சொல்லும் Collective Unconscious என்ற சொல்லிலிருந்து தான் வந்திருக்க வேண்டும்.கார்ல் யுங் ஒருவர் தன் சிகிச்சையின் பகுதியாக அந்தரங்கமான துயரத்தை,சிக்கலை ஒரு மனநல மருத்துவரிடம் பகிர்ந்து கொள்வதை பாதிரியாரிடம் கொள்ளும் பாவ மன்னிப்புக்கு நிகரானதாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.அவரை படிக்கும் போது அமைப்பியலில் கிளாட் லெவி ஸ்ட்ராஸ் எழுதிய கட்டுரைகள் இயல்பாகவே நினைவுக்கு வருகின்றன.

டார்வின் பரிணாமவியல் கோட்பாட்டை முன்வைத்த பின்னர் நம்மிடையே Survival of the fittest,Natural Selection போன்ற எண்ணங்கள் ஆழமாக வேர் விட துவங்குகிறது.ஒரு சமூகத்தில் யார் இருக்கலாம், யார் இருக்கக்கூடாது , ஒரு வீட்டில் யார் இருக்கலாம் என்பது குறித்த நம் பிரக்ஞை இந்த பரிணாமவியல் கோட்பாட்டால் வடிவமைக்கப்பட்டுள்ளது.நமது பொருளாதார கோட்பாடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

நமது பொருளாதார கோட்பாடுகள் மனிதனின் தீமையின் அடிப்படையிலேயே முன்வைக்கப்பட்டன.நாம் நம் மார்பில் அறைந்து கொண்டு நான் நான் என்று பிதற்றுவதும் முன்னே செல்வதும் அதற்கான நியாயங்களையும் டார்வின் வழங்குகிறார்.நீட்ஷேவின் அதிமனிதன் டார்வினின் பரிணாமவியலால் வந்த மனிதன்.இன்றைய அனைத்து முன்னேற்றங்களும் மனிதனின் அக உலகில் பெரிய மாற்றத்தை உருவாக்கவில்லை.

இன்று உலகின் முதல் பணக்காரர் எந்தளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்.நின்றால் தீவு அசைந்தால் தோணி இரண்டுக்கும் மின்னற் பொழுதே தூரம் என்ற தேவதேவனின் வரிதான் மனிதன்.இன்று ஒரு அலுவலக அறையில் நாகரீகமாக நடந்து கொள்ளும் மனிதன் தன் மூதாதையின் வாழ்க்கை பார்வையை அடைவதற்கான நேரம் மின்னற் பொழுதுதான்.நம் விஞ்ஞானம் நம் அக வாழ்வில் அந்தளவுதான் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.கார்ல் யுங் நாம் நம் கூட்டு நனவிலியை பிரக்ஞையின் வழி அறிவதன் வழியே நாம் அக விடுதலை பெற முடியும் என்கிறார்.அதை ஆழ் படிமங்கள் மூலம் விளக்குகிறார்.இவை இலக்கியத்திற்கு , மதத்திற்கு அருகில் வருபவை.இங்கு விஞ்ஞானத்திற்கு இடமில்லை.இன்று மனச்சோர்வு குறித்து பேசும் போது அதை ஒரு ரசாயன மாற்றத்தின் விளைவு என்றே நிறுவ முற்படுகின்றனர்.ஒரு முறை மனச்சோர்வு சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தான் சிறுவயதில் தன் அன்னையுடன் மேற்கொண்ட கப்பல் பயணத்தை பற்றி சொல்கிறார் கார்ல் யுங்.அந்த பெண் தன் சிக்கலிருந்து விடுபடுகிறார்.

மனிதர்கள் எல்லோரும் எதோ ஒரு வகையில் ஒன்றுதான்  என்ற எண்ணத்தை கூட்டு நனவிலி கோட்பாடு உருவாக்கி விடுகிறது.இது மொழியியல் , அமைப்பியல் முன்வைத்த கோட்பாடுகளுடன் ஒத்துப்போகிறது.

மற்றமையும் அதிகாரமும்





பிறர் நம்மை குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று நாம் தொடர்ந்து கவலை பட்டுக்கொண்டே இருக்கிறோம்.பிறிரில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதே அதிகாரத்தை நோக்கிய நமது இச்சையாக மாறுகிறது.நாம் ஏன் நிறைய பணம் சம்பாதிக்க நினைக்கிறோம்.நாம் ஏன் பெரும் பதவிகளை அடைய விரும்புகிறோம்.நாம் ஏன் நமது உடலை அழகானதாக வலுவானதாக மாற்ற விரும்புகிறோம்.அறிவை பெற நாம் அலைந்து கொண்டே இருக்கிறோம்.பணம், கல்வி,வீரம்,அழகு இவை அதிகாரத்தை அடைய வழி வகுக்கின்றன.

நிறை செல்வம்  வைத்திருப்பவரின் அகங்காரம் தன்னை விட குறைவான செல்வம் வைத்திருப்பவரை பார்த்து நிறைவடைகிறது.அப்படியே கல்வி,வீரம்,அழகு எல்லாம் மற்றமையில் தன்னை ஒப்பிட்டு நிறைவு கொள்கிறது.பிறரில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதே நம்மை நிறைவடையச் செய்கிறது அல்லது அமைதி இழக்கச் செய்கிறது.
அமைப்பியலில் ஒரு சிகப்பு விளக்கு "நிறுத்து" என்ற சமிக்ஞையை அளிப்பது அது பச்சை மற்றும் மஞ்சள் நிற விளக்குகளுடன் இருப்பதால் தான் என்று கூறி நாம் அனைத்தையும் ஒரு சூழமைவில் வைத்து தான் புரிந்து கொள்கிறோம் என்கிறது.இதை நாம் பெளத்தத்திலும் பார்க்கலாம்.நாம் எதையும் அது அதுவல்ல என்று புரிந்தே தொகுத்து கொள்கிறோம்.அது அதுதான் என்று புரிந்து அல்ல.

நாம் நம்மை புரிந்து கொள்வதும் தொகுத்துக் கொள்வதும் பிறரை முன்னிலை படுத்தித்தான்.பிறர்,  மற்றமை தான் எப்போதும் பிரதானமாகிறது.ஐரோப்பா போல நாம் நாட்டில் தனிமனித சுதந்திரம் இல்லை என்றுதான் பேசுகிறோம்.தனியான தனித்த பிறிதொன்றை சாராத சுயம் என்று ஒன்று இல்லை.நாம் நான் நான் என்று சொல்லும் அனைத்திலும் பிறர் தான் இருக்கிறார்கள்.தனித்த சுயம் என்பது பாவனை மட்டுமே.

நாம் அடையும் மகிழ்ச்சியும் துயரமும் பிறரில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதில் இருக்கிறது.நமது வேலை இடங்களில் , நமது குடும்பத்தில் , நமது நட்பு சூழலில் , உறவுகளில், ஊரில் நாம் எப்படி பார்க்கப்படுகிறோம் என்பது நமது ஆளுமையை பாதிக்கிறது.மிகுந்த அவமானத்தை அடையும் தருணத்தில் நீங்கள் வேலை செய்யும் இடத்தையும் உடன் வேலை செய்பவர்களையும் எரித்து விட வேண்டும் கொலை செய்து விட வேண்டும் என்று தோன்றுவது நீங்கள் பிறிரில் நீங்கள் எப்படியாக பதிந்துவீட்டீர்கள் என்பதை மாற்றுவதற்காகத்தான்.அங்கே அதிகாரத்தின் மீதான இச்சை துவங்குகிறது.ஆரோக்கியமான பால்ய காலத்தை கொண்டவர் வளர்ந்த பின் பிறரை துயரப்படுத்துவதை விட ஆரோக்கியமற்ற பால்ய காலத்தை கொண்டவர் அதிகம் துயரப்படுத்துகிறார்.அதிகாரத்தின் வழி அவர் தன் துயரமான அவமானமான பால்ய காலத்தின் பக்கங்களை துடைக்கிறார்.

பணம், பதவி, வீரம் , அழகு , கல்வி ,சேவை என்று எதுவுமே சமூகத்தில் அதிகாரத்தை அடைவதற்கான இச்சையை உள்ளடக்கியதுதான்.அதிகாரம் பிறிரில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை மாற்றுகிறது.ஆல்பர் காம்யூவின் வீழ்ச்சி நாவலில் அதன் மைய கதாபாத்திரம் கிளைமண்ட் ஒரு முறை சாலையில் சிகப்பு விளக்கு எரிவதால் காரை நிறுத்தியிருப்பான்.அந்த காரை கடந்து செல்ல வழி விடாததால் ஒரு மோட்டார் சைக்கிள் காரன் கிளைமண்டை திட்டிவிட்டு சென்றுவிடுவான்.கிளைமண்ட் அவனை பிடித்து மண்டியிட வைத்து தண்டிக்க வேண்டும் என்று மறுபடி மறுபடி நினைப்பான்.அந்த நினைவால் அவனால் சமநிலையுடன் நடந்து கொள்ளவே முடியாது.

தஸ்தாயெவ்ஸ்கியின் பதின் நாவலில் பத்தொன்பது வயது இளைஞன் அர்காடி தன் தந்தையிலிருந்து தன்னை பிறித்து அறிய முடியாமல் அவரை மையப்படுத்தியே சிந்திப்பான்.அவர் உண்மையில் நல்லவரா தீயவரா என்பதில்தான் அவனது பெரும் பகுதி காலம் கழியும்.அவர் நல்லவர் என்ற எண்ணம் வந்தவுடன் அவரை மிகவும் நேசிப்பான்.அவரைப் பற்றிய தவறான செய்தியை அறியும் போது அவரை மிகவும் வெறுப்பான்.அவனது இருப்பு அவனது தந்தையின் இருப்பால் மட்டுமே அர்த்தம் கொள்கிறது.அவன் அவனது தந்தையின் நிழலுருவம்.ஏதோ ஒரு கட்டத்தில் தன் தந்தையிலிருந்து தன்னை விலக்கி தான் தனி மனிதன் என்பதை அவன் அறிகிறான்.தஸ்தாயெவ்ஸ்கியின் மற்றொரு நாவலான இரட்டையில் கொல்யாட்கின் தன்னைப் போல ஒருவனை பார்த்து அவனது வெற்றியை பார்த்து புழுங்குவான்.இறுதியில் மனப்பிறழ்வு அடைவான்.உண்மையில் அப்படி ஒரு மற்ற கொல்யாட்கின் இருந்தானா அல்லது அது சீனியர் கொல்யாட்கினின் கற்பனையா என்று நாவலில் தெளிவில்லை.ஆனால் அவன் அந்த மற்ற கொல்யாட்கினால் தன்னில் குறுகுகிறான்.அவன் தன் மனப் புழுக்கத்திலிருந்து விடுபட அதிகாரத்தை நோக்கி செல்ல முடியும்.அல்லது மனப்பிறழ்வு கொள்ள முடியும்.அவன் மனப்பிறழ்வு அடைகிறான்.

பிறர் இல்லாத தனித்த சுயம் என்பது சாத்தியம் இல்லை என்பது போல பிறர் அல்லது மற்றமை என்று நாம் எண்ணுவதும் பாவனைதான்.மற்றமை உண்மையில் வெளியில் இல்லை.நமது பிரக்ஞையே அதுவாகத்தான் இருக்கிறது.அந்த உணர்தலே தன்னுணர்வு.

ஒரு அழகான , படித்த , பெருநகரத்தை சேர்ந்த பெண்ணை ஒருவன் திருமணம் செய்ய விரும்புகிறான்.அவன் படித்த , அழகான , பெருநகரத்தை சேர்ந்த பெண்னை திருமணம் செய்யும் போது அழகற்ற படிக்காத சிறுநகரத்து பெண்ணை திருமணம் செய்தவனை மனப்புழுக்கம் கொள்ளச் செய்கிறான்.அழகு , படிப்பு, பெருநகரம் இவை அதிகாரத்திற்கு அருகில் இருப்பவை.அதை அடைபவன் அதை அடையாதவனின் அகங்காரத்தை தகர்க்கிறான்.சமூக மதிப்பீடுகள் அதிகார கட்டமைப்பை உருவாக்குகிறது.அந்த அதிகார கட்டமைப்பு நமது அகங்காரத்தை கட்டமைக்கிறது.சிவப்பான , அழகான, படித்த , பெருநகரத்து பெண்னை திருமணம் செய்பவன் அடையும் நிறைவு அதிகாரத்தின் நிறைவு.அங்கே அவன் அடையும் காம இச்சையின் நிறைவு அவனின் அகங்காரத்தின் நிறைவு.

பிறர் என்பது பிறரில் இல்லை.மற்றமையின் பொருட்டே அதிகாரம்.மற்றமை குறித்த பிரக்ஞை தன்னுணர்வுக்கான முதல் வழி.அப்படியாக நமக்கு உண்மையில் என்ன வேண்டும் என்று யோசிக்கலாம்.வீழ்வேன் என்னு நினைத்தாயோ என்றெல்லாம் கவலைப்பட தேவையில்லை.


Kalignar Karunanidhi

Kalaignar Karunanidhi was very keen on two projects in his last term.One was the secretariat and the other was Anna Centenary Library.It was unfair that the building built for secretariat was converted to hospital.Anna Centenary Library survived.This library has became very helpful for people from various walks of life.It is very useful for people students involved in Research.Abilash Chandran  spent lot of his time during his Ph.D in this library.

If Chennai has grown now to what it is today it is because of him.Various Infrastructure Projects were done in Chennai during the Vajpayee Government of which DMK held lot of important portfolios.

Vaiko made biggest mistake of his life by creating People welfare front in 2016 assembly elections.I'm not sure what he had achieved by it now.Kalaignar Karunanidhi would have died as Tamilnadu Chief Minister.If there was a mistake Kalaignar Karunanidhi did it was expelling Vaiko for the benefit of his son.

I think Parasakthi was a fine movie.I liked the political statements in that movie.There has been various criticisms that the movie is too loud.Pather Panchali was made around the same time. Nevertheless, it is a good film.It gave a brief outline of what was Dravidian Politics.It was a political statement.

Writer Jeyakanthan had told in his interviews that more than Periyar or Anna Kalaignar Karunanidhi was a genius.He was always right on forming alliances for parliamentary elections.His introduction of 3% internal reservation for Arunthathiyars was an important one.It would take decades for Tamilnadu to witness a charismatic leader like him.It would be very difficult for Tamilnadu to see a leader who was very keen that a world class library was built for the benefit of general public.He had a wonderful life with various happenings.May his soul rest in peace.

Kalaignar Karunanidhi and Brahmins

From the recent article of Aravindan Kannaiyan on Kalaignar Karunanidhi we can understand that Aravindan Kannaiyan didn't get medical seat probably because his father was a doctor and 5 extra marks was granted for students from the families which never had a graduate.

The most important accusation of this article is the hatred Dravidian Politics spewed on Brahmins.Yes, Brahmins were called publicly as Paarpan , Pappathi.If one analyses the movies of Tamil cinema, if there is one community which has been always easily ridiculed it was Brahmin community.No other community had been ridiculed or criticised.Any movie which had to speak about caste system took Brahmins as the representative of Caste system.

In 1990s we had movies which had Gounder or Thevar or a Vanniyar as the protagonist. But in these movies they were not criticised or ridiculed. They were not even portrayed as being casteist,they were all champions of human cause. Only in the movies post 2000 , like that of Subramaniyapuram or Kadhal the caste of the antagonist were easily identifiable.I don't think there was a movie like Shankarabharanam in Tamil which had a Brahmin as the protagonist who is worried about the decline of culture and arts.JKB in Sindhubhairavi movie was not a Brahmin, which could have been portrayed so easily.

All this could be related to Dravidian Politics.Though Brahmins were never physically assaulted there were easier targets for making fun. Their language, dressing, rituals,food were all subjects to ridicule,they being the objects.Tamil Brahmins are migrating in large numbers to foreign countries or neighbouring states.This can't be related directly only with Dravidian politics.

Even first time graduates from families of backward castes or scheduled castes have gone abroad and are in a good positions in their career. But what was the percentage of insecurity which fuelled the migration of Brahmins to other states or foreign countries.Did they feel that they don't belong here anymore.When Tamil Nationalists say Vaduga Vandheri I do feel whether I don't really belong here anymore.Also i do think that then do i belong to some other place.If so where is that place.But the issue is, I don't know from where in Andhra Pradesh my ancestors came and settled down in south arcot districts of Tamilnadu.

Yes, It creates a sense of unbelonging.How can someone quantify what was the element of insecurity and unbelonging the Dravidian politics brought to Brahmins.It is not easier to quantify it.One has to use various sampling methods to come to an understanding of the Tamil Brahmin Migration.

I think Tamil Brahmins saw a breathing space in AIADMK.Of late, most of them have now become strong supporters of BJP. More importantly when Jayalalitha became the General Secretary of AIADMK ,she being an Iyengar they found their representative in her.Aravindan Kannaiyan writes that the last 25 years was ruled alternatively by both parties, so we can't credit Karunanidhi for everything.But what was the important projects of Jayalalitha other than the freebies and Amma Canteen.Tamilnadu government under Jayalalitha was instrumental(!) in creating the shortest possible distance between a common man and an alcohol shop.What was the need for government to run an alcohol shop.But this was not shutdown by Kalaignar in his tenure.Only Pattali Makkal Karachi leader Ramadoss has continuously criticised TASMAC.
Cho Ramaswamy once told in an interview that it is impossible to shut down TASMAC completely anymore.It can only be streamlined.Jayalalitha's regime is entirely responsible for TASMAC.

Can we compare Dravidian Politics to Nazism.Anyone would say no.Tamilnadu has progressed economically under Dravidian regimes.No one was physically assaulted.Comparing two things of varying proportions , just because there is some proportion is not right.

That Regional politics is very important for a state could be understood by the progress of Southern states with Hindi belt states.They had only National politics.A party which won majority of seats in Uttar Pradesh captured power in centre.But how much has Uttar Pradesh progressed.

State Autonomy, Regional identity,reservations for Depressed classes,Industrialization was much important things that Dravidian Politics should be remembered of and Kalaignar Karunanidhi implemented most of the above, started discussions on State Autonomy.Andhra Pradesh grew only after N.T.Ramarao came into politics.He created the element of Telugu pride.

It is a very broader subject and if someone really wants to write about the hatred for Brahmins in Dravidian politics and its impact it needs deeper studies and not just the popular sentiment.

சரிதான்


நீர்குமிழி உடைகிறது
சருகுகள் உதிர்கிறது
பனித்துளி மறைகிறது
கிளையிலிருந்து மேலெழுகிறது ஆகாயத்துப்பறவை
கரங்களின் அரவனைப்பை விலக்குகிறது குழந்தை
கருப்பையின் பாதுகாப்பிலிருந்து
மண்ணில் தோன்றுகிறான் தேவதூதன்
நாளின் முடிவை குறிப்புணர்த்த வருகிறது அந்தி

நீங்கள்

வேபர் பிஸ்கட்டை உடைத்து வாயில் குதப்பிக் கொள்கிறீர்கள்
இறந்த குழந்தையை மீட்க திருமணம் செய்து கொள்கிறீர்கள்
ஆசனத்துக்கு கழுமரத்தில் அமர்கிறீர்கள்

எல்லாம் முறிவுதான்
எல்லாம் தொடக்கம்தான்
எல்லாம் சரிதான்.

நீரின் சலனம்


ஒரு விவசாய குடும்பத்தை கொலை செய்து கொள்ளை அடித்த ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.அவனின் தலை கிலெட்டினால் துண்டிக்கப்படப் போவதை காண ஆல்பர் காம்யூவின் தந்தை வைகறையில் எழுந்து செல்கிறார்.அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது சரிதான் என்று முதலில் நினைக்கிறார்.ஆனால் மரண தண்டனை அரங்கேற்றப்பட்டதை பார்த்துவிட்டு வீடு திரும்புபவர் யாருடனும் பேசாமல் கட்டிலில் படுக்கிறார்.சட்டென்று குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுக்கிறார்.இன்று மரண தண்டனைகள் பொதுவில் கொடுக்கப்படுவதில்லை.அவை சிறைகளுக்கு எடுத்துச்  செல்லப் பட்டுவிட்டன.இந்த சம்பவத்துடன் ஆல்பர் காம்யூ தன் Reflections on Guillotine என்ற கட்டுரையை தொடங்குகிறார்.  தொடர்ந்து மரண தண்டனைக்கு எதிரான தன் தர்க்கத்தை முன்வைக்கிறார்.

தர்க்கம்:

மரண தண்டனை பொது சமூகத்திற்கு அச்சத்தை உருவாக்க வேண்டுமென்றால் அது ஏன் பொதுவில் நிகழ்த்தப்படாமல் தனி அறைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.அது பயத்தை உருவாக்க வேண்டுமென்றால் அது பொதுவில் நிகழ்த்தப்பட்டு அதைப்பற்றிய விவரங்கள் நிறைவாக பத்திரிக்கைகளில் வருவது தானே சரி.ஆனால் அரசுக்கு இதில் ஏதோ ஒரு தயக்கம் இருக்கிறது.இது அவசியமானது என்று கருதுகிறது.ஆனால் அதை பொதுவில் வைக்கத் தயங்குகிறது.அப்படியென்றால் அது முன்வைக்கும் வாதத்தின் மீது அதற்கே நம்பிக்கை இல்லை.இதை முன்பு நிகழ்ந்து கொண்டிருந்தவற்றின் தொடர்ச்சியாக நிகழ்த்துவதற்கு மேல் இதில் அரசு கொள்ளும் கொள்கை என்று எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
பொதுவாக இது போன்ற மரண தண்டனைகள் பற்றிய வாதங்களில் முக்கியாமனது அந்த தண்டனை இனி நிகழவிருக்கும் கொலைகளை தடுக்கும் என்பதுதான்.ஆனால் மேலும் மேலும் மரண தண்டனை அளிக்கப்படுகிறது.அப்படியென்றால் மேலும் மேலும் கொலைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆனால் பத்து கொலைகள் நிகழ்ந்திருக்க வேண்டிய இடத்தில் எட்டு கொலைகள்தான் நிகழ்ந்திருக்கிறது என்ற வாதம் முன்வைக்கப்படும்.அந்த இரண்டு கொலைகள் நிகழ்ந்திருக்கலாம் என்பது ஒரு ஊகம்.அந்த ஊகத்தின் அடிப்படையில் ஒரு நிச்சய மரணம் அரசால் நிகழ்த்தப்படுகிறது.

பெரும்பாலான கொலையாளிகள் காலை சவரம் செய்யும் போது கூட இன்று கொலை செய்யப்போகிறாம் என்று நினைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.அப்படியென்றால் அந்த தருணத்தில் அவர்களை இந்த மரண தண்டனை பயம் அந்த பெருங்குற்ற செயலை செய்ய தடுக்கவில்லை.மனிதனுக்கு உயிர் வாழ்வதற்கு இருக்கும் இச்சை போலவே தன்னையும் பிறரையும் அழித்துக்கொள்ளவும் இச்சை இருக்கிறது.மேலும் காதல், பயம்,வன்மம் இவை எல்லாம் மனிதனை எந்த மனத்தடையையும் உடைத்து தன் இலக்கை நோக்கி இழுத்துச்செல்பவை.அதனால் மரண தண்டனை பயத்தை உருவாக்கி பெருங்குற்றங்களை தடுக்கும் என்கிற வாதம் பிழையானது.அப்படி அது பயத்தை உருவாக்க வேண்டும் என்று அரசு நினைக்கும் என்றால் அதை அப்பட்டமாக செய்யலாம்.ஆனால் அதை செய்ய அரசு அவமானம் கொள்கிறது.

இன்று கொலைகளை பற்றி பேசும் போது மதுவின் விற்பனை குறித்தும் நாம் பேச வேண்டும்.திட்டமிட்ட கொலைகளில் மதுவின் தாக்கம் இருக்கிறது.சிறுவர்களை கொலை செய்தவர்களில் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமானோர் மதுவின் தாக்கத்தில் இருந்தனர் என்று புள்ளிவிவரங்கள் சொல்கிறது.அப்படியென்றால் இந்த மதுவகைகளை உற்பத்தி செய்து விற்கும்  சாராய வியாபாரிகளும் அவர்களை தடை செய்யாத அரசும் அந்த கொலைகளில் பங்கு வகிக்கின்றன.அப்படியென்றால் இந்த சமூகம் பழச்சாறை மட்டும் உட்கொள்ளும் வரை நாம் யாருக்கும் எந்த பொறுப்பும் இல்லை என்று விட்டுவிடலாமா.அப்படி இல்லை.நாம் இந்த பொறுப்புகளை அந்த கொலை செய்தவனின் தலையில் மட்டும் போட்டுவிட்டு தப்பித்துவிட வாய்ப்பில்லை.

ஒரு வகையில் மரண தண்டனை ஒரு பழிவாங்கும் செயல் என்று கொள்ளலாம்.ஆனால் பழிவாங்கும் போது ஒரு கண்ணுக்கு ஒரு கண்தான் வாங்கப்படுகிறது.இங்கு இரண்டு கண்களும் பறிக்கப்படுகிறது.அவனுக்கு மரணத்திற்கான நாள் நிர்ணயிக்கப்படுகிறது.அது நாள் வரை அவன் காத்திருக்க வேண்டும்.இதற்கிடையில் அவன் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படலாம்.ஆனால் அது வரலாம்.வராமல் போகலாம்.அந்த நிச்சயமின்மை அவனை மிகவும் பதறச்செய்கிறது.இறுதியில் அவனது உடல் இரண்டு துண்டுகளாகும் மரணம் அவனுக்கு வழங்கப்படுகிறது.இது அவன் செய்த கொலையை விட பெரிய தண்டனை.இந்தக் காலத்தில் அவன் ஒரு பொருள் போல இருக்கிறான்.அவனுக்கு என்று தேர்வுகள் இல்லை.அவன் உணவு உட்கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு நிச்சயமான மாற்ற சாத்தியமற்ற மரண தண்டனையை வழங்க அந்த சமூகத்திற்கு அரசுக்கு அந்த தார்மீகம் இருக்க வேண்டும்.ஆனால் அப்படியான தார்மீகம் நம் சமூகத்திற்கு இல்லை.ஒரு சமூகம் தன் தகுதிக்கு ஏற்ற குற்றவாளிகளை உருவாக்குகிறது.சமூகம் ஒன்றும் அறியாமை நிரம்பிய ஆட்டுக்குட்டி இல்லை.இந்த குற்றவாளியை நீக்கிவிட்டால் அது தூய்மை பெற்றுவிடாது. நாம் நிச்சயமான தூய்மையான அரசாகவும் சமூகமாகவும் இல்லாத போது இந்த மரண தண்டனை எதை தரப்போகிறது.ஒன்றுமில்லை.அதற்காக மனிதாபிமானம் என்ற பெயரில் தண்டனை வழங்கக்கூடாது என்றுமில்லை.வாழ்நாள் முழுக்க கடும் வேலை செய்ய வேண்டிய தண்டனையை வழங்கலாம்.ஒரு குற்றத்திற்கு சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் இந்த சமூகத்திற்கு இல்லை.ஏனேனில் இங்கு அப்படியான நீதிபதிகள் யாரும் இல்லை.

மரண தண்டனையின் முக்கிய சிக்கல் அது திருத்த சாத்தியமற்றது என்பதுதான்.விஞ்ஞானத்திற்கு முன்னான காலத்தில் மரண தண்டனை வழங்கப்பட்ட போது அது இறுதி தீர்ப்பாக இல்லை.அவனுக்கான இறுதி தீர்ப்பு இன்னும் இருந்தது.ஆனால் இன்று அப்படியான மேல் உலகங்கள் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை.அப்படி இருக்கையில் இதுவே இறுதி தீர்ப்பாகிறது.அப்படியான இறுதி தீர்ப்பு மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

மறுமலர்ச்சி காலத்தில் மனிதன் அடிப்படையில் நல்லவன் என்பதால் அவனுக்கு மரண தண்டனை தேவையில்லை என்ற வாதம் இருந்தது.ஆனால் மனிதன் அடிப்படையில் தீயவன்.அதனாலேயே அவனுக்கு மரண தண்டனை கூடாது என்கிறார்.தண்டனை கூடாது என்றல்ல.ஒரு சமூகம் பரிணாம வளர்ச்சி அடைய தேவையற்றவர்களை நீக்கலாம் என்ற நோக்கம் மேல் எழுந்துள்ளது.ஆனால் அவனை நீக்கிவிட்டால் சமூகம் தூய்மை அடைந்துவிடுவதில்லை.சமூகத்திலிருந்தே அந்த மனிதன் வந்திருக்கிறான்.நாம் எல்லோரும் ஒரளவு பொறுப்பற்று இருக்க வேண்டியிருக்கிறது.அதனால் இறுதியான தீர்மானமான முடிவுகளை எடுக்க நாம் தகுதியற்றவர்கள்.

மொத்த மானுட இனத்தின் இருப்பே மரணத்திற்கு எதிரானதுதான் என்கிறார் காம்யூ.இந்தக் கட்டுரையின் இன்னொரு வடிவம் தான் அவருடைய வீழ்ச்சி நாவல்.அறியாமையின் ஆட்டுக்குட்டி திருடப்பட்டுவிட்டதால் நாம் பிறரின் மீதி தீர்மானமான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அந்த நாவலில் சொல்கிறார்.