இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 5




இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 4

இந்தக்குழுவை சேர்ந்த பெண்கள் சாலையில் ஒரு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட முகாமிலிருந்து மற்றொன்றுக்கு செல்வதும் உணவு தயாரிப்பிலும் ஈடுபடுவர். ஆண்கள் மந்தை ஆடுகளை ஊர்புறமாக மேய்த்து ஏதேனும் விவசாயியின் நிலத்தில் இரவு விட்டுவிடுவர்.ஆடுகளின் இரவு கழிவு மதிப்புள்ள உரம் என்பதால் விவசாயி அதற்கு பணமாகவோ வேளான் விளைபொருளாகவோ தருவர்.இந்த கட்டணங்களும் இதனுடன் கம்பளி போன்றவற்றை விற்பதில் கிடைக்கும் சிறுதொகை எப்போதாவது விலங்கு இவையே ஆயர்நாடோடிகளின் வாழ்வாதாரம்.

மழைக்காலத்திய நான்கு மாதங்களில் தாங்கர் மேய்ச்சல்காரர்கள் மேய்ச்சல் புல்வெளி நிலங்களிலிருந்து காய்ந்த சமவெளிகளில் உள்ள பாரம்பரிய முகாம்களுக்கு , ஆடுகளுக்கு சேற்றுநிலத்தில் தொற்றிக்கொள்ளக்கூடிய குளம்பு அழிவியிலிருந்து பாதுகாக்க இடம் பெயர்வர்.மழைக்காலங்கள் முகாம்கள் எல்லாமே உலர்கல் கட்டுமானத்தாலான ஆட்டுக்கிடைகள்.இவை முன்வரலாற்று காலத்தில் கட்டப்பட்டவை.நான் இந்தியாவில் கண்டுபிடித்த முன்வரலாற்று கல் கருவிகளின் வளமான படுவுகள் பலவும் தாங்கர்களின் மழைக்கால முகாம்களுக்கு அருகிலேயே இருக்கின்றன.முன்வரலாற்று காலத்தை சேர்ந்த செதுக்கப்பட்ட கல் விஷயத்திலும் இது உண்மையாக இருக்கிறது.

இந்த கல் கருவிகள் நுண்கற்கள் என்ற மெல்லிய தகடுகள்.இதிலுள்ள ஆர்வமூட்டும் விஷயம் தாங்கர்கள் நுண்கற்களை பார்க்கும் போது அவற்றை அடையாளம் கண்டுகொள்வதில்லை, ஆனால் அதே போன்ற கருவிகளை அவர்கள் உருவாக்கி கொள்கிறார்கள்.ஒரு ஆட்டுக்குட்டி நலந்தட்டல் செய்யப்படவேண்டும் என்கிற போது , தாங்கர் மேய்ப்பர் இருகற்களில் ஒன்றை சுத்தியலாகவும் மற்றதை அடைகல்லாகவும் வைத்து சற்கடோனியை உடைப்பர்.பின்னர் சற்கடோனியின் நுண் தகடை நலந்தட்டலுக்கான கத்தியாக பயன்படுத்துவர்.அந்த நுண்தகடு கல் பயண்படுத்தப்பட்ட பின் ஆட்டுக்குட்டியின் விரைகளோடு சேர்ந்து சடங்குப்படி கொதிக்க வைக்கப்பட்ட பின்னர் வீசப்பட்டுவிடும்.

மகாராஷ்டிராவில் தக்காணத்து பகுதியிலுள்ள ஒரு பாரம்பரிய சடங்கான பந்தர்பூர்க்கான புனித யாத்திரை — இன்றும் தாங்கர் மேய்ப்பர்களின் முறையாக இருக்கும் பருவகாலப் அலைதல்கள் போன்று எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு வகையில் உள்ளாகியிருந்த காலத்தில் தொடங்கியிருக்கக்கூடும் . ஒரே பகுதியில் நிலைத்த விவசாய முறையிலான வாழ்க்கையோடு இந்த புனித யாத்திரை பொருத்தமற்றதாக இருக்கிறது.பந்தர்பூருக்கான பயணம் அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்கள் எடுப்பதோடு பாரம்பரியமாக மழைக்காலத்தில் தொடங்கும் சடங்காகும். அத்தகைய ஒரு பழக்கம் விவசாய சமூகத்தில் தோன்றியிருக்க முடியும் என்பது நம்புவதற்கு கடினம் ஏனேனில் மழைக்காலங்களிலேயே அவர்கள் பெரும்பாலான உற்பத்தி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.



No comments: