இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 5




இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 4

இந்தக்குழுவை சேர்ந்த பெண்கள் சாலையில் ஒரு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட முகாமிலிருந்து மற்றொன்றுக்கு செல்வதும் உணவு தயாரிப்பிலும் ஈடுபடுவர். ஆண்கள் மந்தை ஆடுகளை ஊர்புறமாக மேய்த்து ஏதேனும் விவசாயியின் நிலத்தில் இரவு விட்டுவிடுவர்.ஆடுகளின் இரவு கழிவு மதிப்புள்ள உரம் என்பதால் விவசாயி அதற்கு பணமாகவோ வேளான் விளைபொருளாகவோ தருவர்.இந்த கட்டணங்களும் இதனுடன் கம்பளி போன்றவற்றை விற்பதில் கிடைக்கும் சிறுதொகை எப்போதாவது விலங்கு இவையே ஆயர்நாடோடிகளின் வாழ்வாதாரம்.

மழைக்காலத்திய நான்கு மாதங்களில் தாங்கர் மேய்ச்சல்காரர்கள் மேய்ச்சல் புல்வெளி நிலங்களிலிருந்து காய்ந்த சமவெளிகளில் உள்ள பாரம்பரிய முகாம்களுக்கு , ஆடுகளுக்கு சேற்றுநிலத்தில் தொற்றிக்கொள்ளக்கூடிய குளம்பு அழிவியிலிருந்து பாதுகாக்க இடம் பெயர்வர்.மழைக்காலங்கள் முகாம்கள் எல்லாமே உலர்கல் கட்டுமானத்தாலான ஆட்டுக்கிடைகள்.இவை முன்வரலாற்று காலத்தில் கட்டப்பட்டவை.நான் இந்தியாவில் கண்டுபிடித்த முன்வரலாற்று கல் கருவிகளின் வளமான படுவுகள் பலவும் தாங்கர்களின் மழைக்கால முகாம்களுக்கு அருகிலேயே இருக்கின்றன.முன்வரலாற்று காலத்தை சேர்ந்த செதுக்கப்பட்ட கல் விஷயத்திலும் இது உண்மையாக இருக்கிறது.

இந்த கல் கருவிகள் நுண்கற்கள் என்ற மெல்லிய தகடுகள்.இதிலுள்ள ஆர்வமூட்டும் விஷயம் தாங்கர்கள் நுண்கற்களை பார்க்கும் போது அவற்றை அடையாளம் கண்டுகொள்வதில்லை, ஆனால் அதே போன்ற கருவிகளை அவர்கள் உருவாக்கி கொள்கிறார்கள்.ஒரு ஆட்டுக்குட்டி நலந்தட்டல் செய்யப்படவேண்டும் என்கிற போது , தாங்கர் மேய்ப்பர் இருகற்களில் ஒன்றை சுத்தியலாகவும் மற்றதை அடைகல்லாகவும் வைத்து சற்கடோனியை உடைப்பர்.பின்னர் சற்கடோனியின் நுண் தகடை நலந்தட்டலுக்கான கத்தியாக பயன்படுத்துவர்.அந்த நுண்தகடு கல் பயண்படுத்தப்பட்ட பின் ஆட்டுக்குட்டியின் விரைகளோடு சேர்ந்து சடங்குப்படி கொதிக்க வைக்கப்பட்ட பின்னர் வீசப்பட்டுவிடும்.

மகாராஷ்டிராவில் தக்காணத்து பகுதியிலுள்ள ஒரு பாரம்பரிய சடங்கான பந்தர்பூர்க்கான புனித யாத்திரை — இன்றும் தாங்கர் மேய்ப்பர்களின் முறையாக இருக்கும் பருவகாலப் அலைதல்கள் போன்று எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு வகையில் உள்ளாகியிருந்த காலத்தில் தொடங்கியிருக்கக்கூடும் . ஒரே பகுதியில் நிலைத்த விவசாய முறையிலான வாழ்க்கையோடு இந்த புனித யாத்திரை பொருத்தமற்றதாக இருக்கிறது.பந்தர்பூருக்கான பயணம் அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்கள் எடுப்பதோடு பாரம்பரியமாக மழைக்காலத்தில் தொடங்கும் சடங்காகும். அத்தகைய ஒரு பழக்கம் விவசாய சமூகத்தில் தோன்றியிருக்க முடியும் என்பது நம்புவதற்கு கடினம் ஏனேனில் மழைக்காலங்களிலேயே அவர்கள் பெரும்பாலான உற்பத்தி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.



கடவுள் இறந்துவிட்டார்






கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இவான் சொல்வான் 'கடவுள் இல்லையென்றால் பின் எல்லாமே அனுமதிக்கப்பட்டவையே' என்று. கடவுளின் பெயரால் தான் அறமும் விழுமியங்களும் உருவாக்கப்பட்டன.ஆனால் விஞ்ஞானத்தின் ஊடாக கடவுள் இறந்துவிட்டார்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இது நடந்து நூற்றாண்டை கடந்துவிட்டாலும் அது நம்மால் கண்டுகொள்ளப்படவில்லை என்பது தான்!  கடவுள் இறந்துவிட்டார் என்கிற போது அந்த விழுமியங்களும் அறமும் இறக்கின்றன.அப்படியென்றால் இவான் சொல்வது போல எல்லாம் அனுமதிக்கப்பட்டவையே. இவான் மூத்த கரமசோவை சமேர்டகோவை தூண்டி கொலை செய்ய வைக்கிறான். இதை அவனால் மேல் சொன்ன வாக்கியத்தின் தத்துவ துனையாலேயே செய்ய முடிகிறது. கடவுள் இறந்துவிட்டார்.இனி இந்த கைகளை எந்த தண்ணீரால் கழுவப்போகிறீர்கள் என்று நீட்ஷே கேள்வி எழுப்புகிறார்.

இது ஒரு தீவிரமான பிரச்சனை. அறமும் விழுமியங்களும் இறந்து விடும் போது நாம் எதன் அடிப்படையில் நமது வாழ்வை மேற்கொள்வது. ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலில் ஜே.ஜே. ஒரு தொழுநோயாளனுக்கு காசு கொடுக்கலாமா வேண்டாமா என்று தீவிரமாக சிந்தித்துவிட்டு இறுதியில் அவனுக்கு சில்லறையை கொடுக்கிறான். பின்னர் தான் கொடுத்த காசு கீழே விழுந்து விடவே அதை சரியாக அவனுக்கு கொடுப்பதற்காக ஜே.ஜே. குனியும் போது தொழுநோயாளன் அந்த நாணயத்தை மண்ணில் புதைத்து இழுத்து கொள்கிறான். ஜே.ஜே.வை அது வெட்கப்பட செய்கிறது.இங்கே எந்த தத்துவ அடிப்படையில் ஜே.ஜே. காசு கொடுக்கிறான் என்பதுதான் முக்கியமான கேள்வி.அற மதிப்பீடுகள் இறந்துவிட்டன என்ற நிலையில் அவனுக்கு காசு கொடுக்க வேண்டும் என்ற ஜே.ஜே முடிவு செய்வது உண்மையில் ஜே.ஜே அந்த அறமதிப்பீடுகள் மீது நம்பிக்கை வைத்துள்ளவன் என்றே காண்பிக்கிறது.அப்படியாக கடவுள் மீதும் என்றும் சொல்லலாம். அப்படியென்றால் நாம் பிச்சைகாரனுக்கு உதவ கூடாதா என்ற அபத்த கேள்வி அல்ல நம் முன் எழ வேண்டியது.ஜே.ஜே. என்ற எழுத்துரு எந்த அடிப்படையில் அதைச்செய்தான் என்ற கேள்வியே முக்கியம்.நீட்ஷே ஜரதுஷ்டரா இவ்வாறு கூறினான் என்ற நூலில் பிச்சைகாரனுக்கு கொடுப்பதை விட எடுத்துக்கொள்ள செய்வது மேலானது ஏனேனில் அது குறைவாகவே வெட்கம் கொள்ள செய்கிறது என்கிறார்.

இருத்தலியவாதத்தின் எல்லா கேள்விகளும் இந்த கடவுள் இறந்துவிட்டார் என்பதிலிருந்தே ஆரம்பமாகிறது என்றே நான் புரிந்து கொள்கிறேன்.தஸ்தாவெய்ஸ்கி கரமசோவ் சகோதரர்கள் நாவலில் எழுப்பும் கேள்வி, அதில் The Grand Inquistor என்ற பகுதியில் கடவுள் பூமிக்கு வருவதை விரும்பாத பிஷப் அவரை திருப்பி அனுப்புகிறார். அதைப்போல ஆல்பெர் காம்யு அந்நியன் நாவலில் எழுப்பும் இருத்தலில் உள்ள அபத்தம் குறித்த கேள்வி ,காஃப்கா உருமாற்றம் கதையில் எழுப்பும் அபத்தம் எல்லாமே இந்த கேள்வியோடு சம்மந்தபட்டதாகவே தெரிகிறது.அப்படியென்றால் அறமதிப்பீடுகளும் விழுமியங்களும் இல்லாத போது மனிதன் எதன் அடிப்படையில் தன் வாழ்வை மேற்கொள்வான் என்கிற போது Freewill என்ற கருத்து முக்கியத்துவம் கொள்கிறது.நீட்ஷேவின் எல்லா புத்தகங்களுக்கும் இந்த வாக்கியமே திறவுகோல் என்று கூட கொள்ளலாம் .