இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 4


இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 1

இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 2

இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 3


பார்தி சமய வழக்கங்கள் பெற்றுக்கொண்டதுவும் தொன்மை கூறுகளினதுவுமான கலவை.வழிபாட்டின் பிரதான பொருள் நவீன உற்பத்தியிலான வெள்ளியில் செய்த தட்டையான அலங்காரமான பொருள். அதில் ஒரு இந்து தாய்தெய்வத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.இருந்தும் மிக முக்கிய சடங்கு - வளம் ஆடல் - அதன் ஒவ்வொரு குறிகளுமே அது உண்மையில் தொன்மையானது என்பதை குறிக்கிறது.இதில் ஆடுபவர் ஒரு ஆண் -  சிறிய குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கும் பழங்குடிகளில் ஒரு குழுவின் தலைமையில் இருப்பவர் .அவர் தன்னை ஒரு பெண்ணாக ஆடைஅமைத்து கொள்கிறார்.அவர் சடங்கில் ஒரு பூசாரி மாத்திரம் அல்ல.அவர் தன்னை ' நான் தான் அம்மன்' என்று சொல்லிக் கொள்கிறார்.


இந்த வளமை சடங்கின் ஒரு பகுதி இந்துகளுக்கும் தொன்மரபினருக்குமான தலைகீழ் புதுபண்பாட்டை ஏற்றுக்கொண்டதற்கான சுவாரசியமான சான்றுகளை வழங்குகிறது. ஆடுபவர் ஒரு கட்டத்தில் தன் கையை எரியும் எண்ணை பாத்திரத்தில் மூழ்க்குகிறார் - ஆம் எந்த விதமான காயமும் இல்லாமல்.இது போன்ற கடுமையான சடங்கு பார்திகளின் பழைய வழக்கம். பார்திகளின் சோதனைகளில் தங்களின் அறியாமையை நிருபிப்பதற்காக ஒரு செந்நிற சூடான இரும்பை தூக்கிக்கொண்டு குறிப்பிட்ட அடிகள் நடக்க வேண்டும். இதற்கு இனையான இந்துக்களின் கடுமையான சடங்கு - சூடான நிலக்கரிமேல் நடப்பது - இதற்கு பிராமண வேத நூல்களில் எந்த வித ஒப்புதலும் இல்லை;சோதனைகள் குறித்து மிக முந்திய இந்து புனித புத்தகங்களில் எவ்வித குறிப்பும் இல்லை. சொல்லப்போனால் , நெருப்பில் நடக்கும் பழக்கம் கிறுஸ்துவ காலம் வரை இந்துக்களின் சடங்காக இல்லை.அதன் பின் இந்த சடங்கு தீவிர குற்றச் செயலுக்கான ஆதாரம் இருக்கும்போது பிரதானமாக அறியாமையை நிருப்பிப்தற்காக ஒரு வழிமுறையாக பெற்றுக்கொள்ளப்பட்டது.ஒருவர் இந்துக்களின் இந்த கடுமையான சடங்கு பார்திகளின் சோதனையின் போதான சடங்கை போல ஏதாவது ஒரு தொன்மையான இந்திய சடங்கிலிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் என்பதை எளிதில் ஊகிக்க முடியும்.


மற்றொரு தொன்மையான குழுவான தெக்கானத்து பகுதிகளில் வாழும் தாங்கர்கள் - ஒரு பழங்குடியினர் அல்லாது ஒரு சாதியினர்.இதில் சிலர் விவசாயிகள் ; மற்றவர்கள் கம்பளி போர்வை செய்வதில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.தாங்கர் குடும்பத்தில் - இருந்த ஹோல்கர்ஸ் - ராணுவ வாழ்வை பதினேட்டாம் நூற்றாண்டிலேயே மேற்கொண்டு இன்டோரின் மகாராஜாக்களாக உயர்ந்தார்கள்.தாங்கர் சாதியை சேர்ந்த ஒரு பிரிவினர் பழங்குடியின வாழ்வை மேற்கொண்டு நாடோடிகளாக மந்தை மேய்ப்பாளராக இருக்கிறார்கள்.ஒவ்வொரு தாங்கர் குழுவும் பண்ணிரெண்டு பேரை உள்ளடக்கியது. 300 செம்மறி ஆட்டு மந்தைகளை மேய்த்துகொண்டு, இந்த குழு வருடத்தின் எட்டு வரண்ட மாதங்களை பயணத்தில் செலவழிக்கிறது , இது மிகவும் ஆபுர்வமாக 200 மைல்களுக்குள்ளும் பெரும்பாலும் 400 மைல்கள் வரையும் வேறுபடலாம்.

கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.