இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 3





இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 2

இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 1

விஷயம் இப்படியிருந்திருக்கையில் விவசாயிகளின் ஜாதி இன்று பழங்குடியினரைவிட உயர்ந்ததாக இருக்கிறதே என்று ஒருவர் கேட்கலாம். பதிலை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல.முதலாவது , ஆரம்பக்கட்ட தடுமாற்றங்கள் எதுவாக இருந்திருந்தாலும் விவசாயத்தை சாதாரணமாக பழகியதில் விவசாயிகளுக்கு பழங்குடியினரை விட பலமான பொருளாதார தளம் அமைந்தது. இந்தியாவில் வேறெங்கும் இருப்பது போல சமூக மதிப்புத்தரம் பொருளாதார அளவை பொருத்தே இருக்கிறது.இரண்டாவது இவர்களின் ஒரளவு சுமாரான உணவளிப்பால் பழங்குடியினரை விட வேகமாக பெருக்கமடைந்து எண்ணிக்கையில் கடந்து அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தலாயினர்.

விவசாயிகளுக்கும் பழங்குடியினருக்கும் சாதி சமநிலையற்ற தன்மை இன்று நிலவினாலும் பரஸ்பர பண்பாட்டு பரிமாற்றத்திறகான சான்றுகள் நிறைய உள்ளன , குறிப்பாக சமயம் சார்ந்த துறையில். பெரும்பாலான இந்துக் கடவுள்கள் என்று சொல்லப்படுகிற பிராமண கோயில்களின் கடவுளின் தோற்றம் உண்மையில் பழங்குடி சடங்கு முறையிலிருந்து தோன்றியது. அதே சமயத்தில் பழங்குடி இன மக்கள் பழங்குடி வாழ்க்கைமுறையை விட்டுவிட்டு வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தை எடுக்கையில் தங்களின் தொன்மையான கடவுள்களை விட்டுவிட்டு இந்து சமய கடவுள்களின் பழக்கங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்து சமயத்தினதும் தொன்மரபுனதும் சடங்குகள் நாகரீக கண்களுக்கு விநோதமாக தெரிகிறது. சடங்குகளை வெறும் மூடநம்பிக்கை என்று நிராகரிப்பது ( அதை மனோதத்துவ முறையில் விளக்குவது மேலும் மோசமானது) என்பது இந்தியாவின் வரலாற்றையும் முன்வரலாற்றையும் ஒருங்கே படிப்பதற்கான உண்மையான வாய்ப்பை தூக்கியேறிவதாகும்.

என்னுடைய களப்பணி தக்காணத்து பகுதிகளையும் தீபகற்ப இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளையும் மட்டுமே உள்ளடக்கியது. இந்த பகுதியின் வட்டார வழக்கிலும் பழக்கவழக்கங்களிலும்
உள்ள பரிச்சயத்தால் தான் பழங்குடி மக்கள் மற்றும் கிராம வாழ்க்கையின் மீது விரிவான ஆய்வை மேற்கொள்ள முடிந்தது.நான் ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்த முதல் பழங்குடியினர் ராஸ் பேஸ் பார்தி(Ras Phase Pardhi).மகாரஷ்டராவில் தற்சமயம் இருக்கும் இந்த மக்கள் உண்மையில் குஜராத்திலிருந்து வடக்கு நோக்கி வந்தவர்கள்.இவர்கள் குஜராத்தியின் வட்டார வழக்கு ஒன்றை பேசுகிறார்கள்.பார்திகள் நாடோடிகள்.இவர்களின் பயணங்களில் மெலிந்த கால்நடைகளை உடன் அழைத்து செல்வர். ஆண்கள் சில நாட்கூலி வேலைகளை செய்வதோடு பறவைகளை ரகசியமாக பின்தொடர்ந்து சென்று பொறி வைத்து பிடிப்பதில் தேர்ந்தவர்கள்.மேலும் சிறிய வேட்டைகளிலும் ஈடுபடுகின்றனர்.எனினும் இன்று பார்திகளின் முதன்மை பணி பிச்சை எடுப்பதும் திருடுவதும் தான்.இது ஆண்களாலும் பெண்களாலும் ஒருங்கே செய்யப்படுகிறது.பார்திகள் திருடுவதை குற்றம் என்று கருதுவது பாதிக்கப்பட்டவரும் அதை பழங்குடியை சேர்ந்தவர் என்றால் தான்.

கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.




No comments: