ஒற்றை பரிமாண மனிதன்


ஹெர்பர்ட் மார்க்யூஸா எழுதிய புத்தகம் ஒற்றை பரிமாண மனிதன். ந.முத்துமோகன் எழுதிய மார்க்சிய விவாதங்கள் என்ற புத்தகத்தில் இவரை பற்றிய அறிமுகம் கிடைத்தது. மார்க்யூஸா ஒரு நவமார்க்ஸியர்.ஆரம்ப காலங்களில் ஹைடக்கரிடம் பணிபுரிந்தவர்.அவரிடம் கருத்து வேறுபாடு முற்றவே அவரை பிரிந்து ஃப்ராங்பர்ட் பள்ளியில் சேர்ந்தார். இந்த பள்ளியின் நோக்கம் மார்க்ஸிய ஃப்ராய்டிய நோக்கில் முன்னேறிய தொழில்மய உலகை ஆராய்வது. அப்படி முன்னேறிய தொழில்மய நாடுகளை பற்றிய ஒரு ஆய்வு தான் ஒற்றை பரிமாண மனிதன். எல்லா தளங்களிலும் இன்று மறுதலிப்பது(Negation) இல்லாமல் ஆகிவிட்டது. மார்க்ஸ் முதலாளித்துவ சமூகம் முன்னேற முன்னேற தொழிலாளர்களுக்கும் முதலாளிக்களுக்குமான முரணியக்கம் முற்றி இறுதியில் புரட்சி வெடிக்கும் என்று நினைத்தார்.அதாவது முன்னேறிய முதலாளித்துவ சமூகத்தின் பரிணாம வளர்ச்சி சோஷியலிச சமூகம் தான் என்றார். ஆனால் முதலாளித்துவ சமூகம் வளர்ச்சியடையும் தோறும் அது தொழிலாளர்களையும் தனக்குள் இனைத்துக்கொண்டது. அதாவது இன்று ஒரு தொழிலாளியும் முதலாளி ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. ஆக தொழிலாளியையும் ஒரு நுகர்வோனாக மாற்றி விடுகிறது. ஆக புரட்சிக்கான சாத்தியம் இல்லாமல் செய்யப்படுகிறது. இன்று ஒரு அரசியல்தலைவர் புரட்சி வெடிக்கவேண்டும் என்று கர்ஜித்தால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளபோவதில்லை.மொழி தளத்தில் இந்த மறுதலிப்பு இல்லாமல் செய்யப்படுகிறது. ஒரு சமூகத்தில் கலை என்பது மறுதலிப்பது.இன்று ஜான் ஆப்ரகாமின் படைப்பைபும் நீங்கள் சந்தைபடுத்தலாம். அதற்கும் சந்தை மதிப்பு உண்டு. அப்படி முற்றிலும் கரடாக எடுக்கப்படும் சினிமாவோ அல்லது வேறு கலைப்படைப்போ சந்தை படுத்தபட முடியும் என்பதன் மூலம் அதன் மறுதலிப்பு இல்லாமல் செய்யப்படுகிறுது. எல்லா கலைஞர்களுக்கும் தான விரும்பும் இஷ்டலோகம் என்று ஒன்று உண்டு. இப்போதைய நிலையை துஷ்டலோகம் என்று கொண்டால் இந்த இரண்டுக்குமான முரணியக்கத்தில் உருவாவதுதான் ஒரு கலைஞனின் படைப்பு.ஆனால் ஒரு கலைஞனுக்குள் இப்போது இருப்பதே நன்றாகத்தான் இருக்கிறது என்று எண்ணம் உருவாக்கப்பட்டுவிட்டால் பின்பு அவனது படைப்பில் அந்த எதிர்ப்பு இல்லாமல் செய்யப்பட்டுவிடுகிறது.மொழியில் , சமூகத்தில், கலையில் மறுதலிப்பு இல்லாமல் செய்யப்படுகிறது.


சமூகவியல் ஆய்வுகளில் இருபோக்குகள் உண்டு. ஒன்று எமிலி டர்க்கெய்ம் என்ற பிரெஞ்சு சமூகவியலாளர் உருவாக்கிய வகை.மற்றது மாக்ஸ் வேபர் என்ற ஜெர்மானிய சமூகவியலாளர் உருவாக்கியது. முதலாவது சமூக அமைப்பை முன்வைத்து பேசுவது. இரண்டாவது தனிமனிதர்கள் சமூக நடத்தையை முன்வைத்து பேசுவது. ஒற்றை பரிமாண மனிதன் என்ற இந்த புத்தகம் இரண்டாவது வகையை சார்ந்தது. முதல் வகை நேர்க்காட்சி வாதத்தை முன்வைத்தது. அதாவது விஞ்ஞான பூர்வமாக சமூகத்தை ஆராய்வது. அதாவது இதில் தற்சார்பு முற்றிலும் இல்லை என்ற பாவனை உண்டு. முற்றிலும் புறவயமானது (objective). வேபர் வழி வந்த சமூகவியல் ஆய்வு நேர்க்காட்சி வாதத்தை மறுக்கிறது.அது தனிமனிதர்களின் சமூக நடத்தையை முதலில் எடுத்து அதன் மூலம் தன் ஆய்வுகளை மேல் எடுக்கிறது.


இன்றைய தொழில்மய சமூகத்தில் மனிதன் அந்நியப்படுகிறான். அப்படி அந்நியப்படும் மனிதன் தன்னை சூழ்ந்துள்ள சமூகத்தின் ஒடுக்குமுறையால் அ-உன்னதமாக்கலுக்குள் செல்கிறான்.அவனது மகிழ்ச்சி அற்ற பிரக்ஞை உன்னதமாக்கலற்ற செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது. உங்களின் வேலை நேரங்களை மட்டுமல்ல உங்களின் பொழுதுபோக்கும் நேரத்தையும் இந்த சமூகமே கவணித்துக்கொள்கிறது! மேலும் நம் சிந்தனை முறை மாற்றப்பட்டுவிட்டது.அதாவது தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் நல்ல சமூகமே என்ற எண்ணம் நம்முள் எழுகிறது , எழுப்பப்படுகிறது. சொல்லாடல்களின் உலகம் மூடப்படுகிறது.இதற்கு அவர் முன்வைக்கும் முக்கிய காரணம் தொழில்நுட்ப பகுத்திறவு.மேலும் விட்கென்ஸ்டீன் போன்றோர் முன்வைத்த நேர்க்காட்சி வாத தர்க்க முறை ஒற்றை பரிமாண தத்துவத்திற்கு வழி வகுத்தது என்கிறார்.


இந்த ஒற்றை பரிமாண உலகில் இருந்து விடுதலையை இல்லையா என்றால் அது இந்த ஒற்றை பரிமாண உலகிற்கு வெளியே இருப்பவர்களுக்கும் இந்த மிக முன்னேறிய தொழில்மய சமூகத்தை ஆழப்புரிந்து கொண்ட அறிவுஜீவிகளும் சந்தித்து கொள்ளும் வாய்ப்பின் மூலம் இந்த விளையாட்டுக்கு எதிராக செயல்பட முடியும் என முடிக்கிறார் மார்க்யூஸா.

என்னை மிகவும் பாதித்த நூல். நமது இன்றைய சமூகச்சுழல் குறித்து அக்கறை உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.இந்த நூலின் இரு பக்கங்களை மொழிபெயர்ப்பு செய்து பார்த்தேன்.


இந்தியாவின் தொழில்மயம் - 4




இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 3





இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 2

இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 1

விஷயம் இப்படியிருந்திருக்கையில் விவசாயிகளின் ஜாதி இன்று பழங்குடியினரைவிட உயர்ந்ததாக இருக்கிறதே என்று ஒருவர் கேட்கலாம். பதிலை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல.முதலாவது , ஆரம்பக்கட்ட தடுமாற்றங்கள் எதுவாக இருந்திருந்தாலும் விவசாயத்தை சாதாரணமாக பழகியதில் விவசாயிகளுக்கு பழங்குடியினரை விட பலமான பொருளாதார தளம் அமைந்தது. இந்தியாவில் வேறெங்கும் இருப்பது போல சமூக மதிப்புத்தரம் பொருளாதார அளவை பொருத்தே இருக்கிறது.இரண்டாவது இவர்களின் ஒரளவு சுமாரான உணவளிப்பால் பழங்குடியினரை விட வேகமாக பெருக்கமடைந்து எண்ணிக்கையில் கடந்து அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தலாயினர்.

விவசாயிகளுக்கும் பழங்குடியினருக்கும் சாதி சமநிலையற்ற தன்மை இன்று நிலவினாலும் பரஸ்பர பண்பாட்டு பரிமாற்றத்திறகான சான்றுகள் நிறைய உள்ளன , குறிப்பாக சமயம் சார்ந்த துறையில். பெரும்பாலான இந்துக் கடவுள்கள் என்று சொல்லப்படுகிற பிராமண கோயில்களின் கடவுளின் தோற்றம் உண்மையில் பழங்குடி சடங்கு முறையிலிருந்து தோன்றியது. அதே சமயத்தில் பழங்குடி இன மக்கள் பழங்குடி வாழ்க்கைமுறையை விட்டுவிட்டு வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தை எடுக்கையில் தங்களின் தொன்மையான கடவுள்களை விட்டுவிட்டு இந்து சமய கடவுள்களின் பழக்கங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்து சமயத்தினதும் தொன்மரபுனதும் சடங்குகள் நாகரீக கண்களுக்கு விநோதமாக தெரிகிறது. சடங்குகளை வெறும் மூடநம்பிக்கை என்று நிராகரிப்பது ( அதை மனோதத்துவ முறையில் விளக்குவது மேலும் மோசமானது) என்பது இந்தியாவின் வரலாற்றையும் முன்வரலாற்றையும் ஒருங்கே படிப்பதற்கான உண்மையான வாய்ப்பை தூக்கியேறிவதாகும்.

என்னுடைய களப்பணி தக்காணத்து பகுதிகளையும் தீபகற்ப இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளையும் மட்டுமே உள்ளடக்கியது. இந்த பகுதியின் வட்டார வழக்கிலும் பழக்கவழக்கங்களிலும்
உள்ள பரிச்சயத்தால் தான் பழங்குடி மக்கள் மற்றும் கிராம வாழ்க்கையின் மீது விரிவான ஆய்வை மேற்கொள்ள முடிந்தது.நான் ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்த முதல் பழங்குடியினர் ராஸ் பேஸ் பார்தி(Ras Phase Pardhi).மகாரஷ்டராவில் தற்சமயம் இருக்கும் இந்த மக்கள் உண்மையில் குஜராத்திலிருந்து வடக்கு நோக்கி வந்தவர்கள்.இவர்கள் குஜராத்தியின் வட்டார வழக்கு ஒன்றை பேசுகிறார்கள்.பார்திகள் நாடோடிகள்.இவர்களின் பயணங்களில் மெலிந்த கால்நடைகளை உடன் அழைத்து செல்வர். ஆண்கள் சில நாட்கூலி வேலைகளை செய்வதோடு பறவைகளை ரகசியமாக பின்தொடர்ந்து சென்று பொறி வைத்து பிடிப்பதில் தேர்ந்தவர்கள்.மேலும் சிறிய வேட்டைகளிலும் ஈடுபடுகின்றனர்.எனினும் இன்று பார்திகளின் முதன்மை பணி பிச்சை எடுப்பதும் திருடுவதும் தான்.இது ஆண்களாலும் பெண்களாலும் ஒருங்கே செய்யப்படுகிறது.பார்திகள் திருடுவதை குற்றம் என்று கருதுவது பாதிக்கப்பட்டவரும் அதை பழங்குடியை சேர்ந்தவர் என்றால் தான்.

கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.