இருப்பே சுவர்க்கம்





ஆலமரத்தின் இலைகள் சூரிய ஒளியை எகிற நோக்க அவை பச்சை வெள்ளி கண்களாயிரமாய் அந்த வெளிச்சத்தில் சுவர்க்கமாகிறது.இருப்பே திரிசங்கு சுவர்க்கமாகிறது. தபஸேற்றது ஆல் என்கிற வரியில் ஆலமரம் அப்படியே Freeze ஆகி நிற்கிறது.இதில் ஆலமரம் மட்டுமல்ல.அதை, அந்த நொடியில் இயற்கையின் இடைவெளிகள் அற்ற படைப்பாற்றலை பார்த்து வியந்து நிற்கும் அந்த கவிஞனுக்கும் அது சுவர்க்கம்.வாசித்து அதை அனுபவமாக கொள்கையில் வாசிப்பவர்க்கும். பிரமளின் கவிதை.

திரிசங்கு

தளராத ஏழுதூண்
வேரூன்றி
அணுவிதையில் விளைந்த
அடையாளம் தெரியாமல்
விஸ்வரூபம்
விரிந்து
பச்சை வெள்ளிக்
கண்களாயிரம்
அந்தரத்தில்
இறங்கும் ஒளியை
எகிறி நோக்க
தபஸேற்றது
ஆல்.
ஒவ்வொரு இலையிலும்
தெறித்தது சுவர்க்கம்.



No comments: