இந்தியாவின் தொழில்மயம் - 2



இந்த பின்தங்கிய நாடுகளின் தொழில்மயம் சூன்யத்தில் நிகழவில்லை. முதற்கட்ட குவிப்புக்கான சமுதாய மூலதனத்தை வெளியிலிருந்தே பெற்றாக வேண்டிய வரலாற்று சூழலில் இது நிகழ்கிறது. இத்தகைய வெளி - முதலாளித்துவ அல்லது கம்யூனிச கூட்டமைப்பாகவோ அல்லது இவ்விரண்டுமாகவோ இருக்கும். மேலும் மிக வேகமான தொழில்மயம் மற்றும் குறிப்பிட்ட அளவுக்கான உற்பத்தியை எட்டுவது ஆகியவையால் பிறர் சார்பற்று நீடிக்கவும் , அதன் மூலம் ஓப்பிட்டளவில் இவ்விரு ஜாம்பவான்களிடமிருந்து சுயாதீனமாக இருக்கவும் இயலும் என்ற ஊகம் பரவலாக நிலவுகிறது.


இத்தகைய சூழலில் பின்தங்கிய சமூகத்திலிருந்து தொழில்மயமானதாக உருமாறுவதற்கு தொழில்நுட்பத்திற்கு முந்தைய வடிவங்களை எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக விலக்க வேண்டும்.எங்கு மக்களின் அத்தியாவசிய தேவைகள் கூட திருப்தி செய்யப்படாமல் இருக்கிறதோ, எங்கு கொடுமையான வாழ்க்கைத்தரம் முதன்மையாக —அளவில் எல்லோருக்குமானதாக இருக்கக்கூடிய வகையில் — இயந்திரமயப்பட்ட மற்றும் ஒழங்கமைக்கப்பட்ட பெரு உற்பத்தியையும் விநியோகத்தையும் கோருகின்றதோ அந்த மாதிரியான நாடுகளில் இவை மேலும் முக்கியமாகிறது. இதே நாடுகளில்தான் தொழில்நுட்பத்திற்கு முந்தைய மற்றும் நிலப்பிரப்புத்துவத்திற்கு முந்தைய பழக்கவழக்கங்களும் நிலைமைகளும் பாழ்சுமையாகி தன் மேல் திணிக்கப்படுகிற வளர்ச்சிக்கு தீவிர எதிர்ப்பை தெரிவிக்கின்றன.புனித தன்மைகளை முற்றாக நிராகரித்தும் சமூக அமைப்புகள் மற்றும் விழுமியங்களை நசுக்கியும் இயந்திர நடைமுறை ( சமூக நடைமுறையாக ) அடையாளமற்ற அதிகாரத்திற்கு கீழ்ப்படிகிற அமைப்பை கோருகிற நிலையில் இந்த நாடுகளில் அவைகளின் தூய்மைகளைதலே ஆரம்பமாகவில்லை.ஒட்டுமொத்த தொழில்நுட்ப நிர்வாகத்தை கொண்டுள்ள இரு பெரிய அமைப்புகளின் தாக்கத்தின் கீழ்யிருக்கையில் , இந்த எதிர்ப்பை மிதவாத மற்றும் ஜனநாயக வடிவங்களை கொண்டு நீர்மை படுத்தும் செயல்முறைகளில் இந்த நாடுகள் ஈடுபடும் என எவராலாவது நியாயமாக அனுமானிக்க இயலுமா? பின்தங்கிய நாடுகள் — தொழில்நுட்பத்திற்கு முந்தையதிலிருந்து தொழில்நுட்பத்திற்கு பிந்தைய சமூகமாகக்கூடிய வரலாற்று தாவுதலில் , தான் கற்று தேர்ந்த தொழில்நுட்ப சாதனத்தை கொண்டு உண்மையான ஜனநாயகத்திற்கு அடிதளம் அமைத்து தர இயலுமா? மாறாக , இத்தகைய நாடுகள் தன் மீது திணித்துக்கொள்ளும் இந்த வளர்ச்சியால் முன்னேறிய நாடுகளை காட்டிலும் ஒட்டுமொத்த நிர்வாகம் மிகவும் வன்முறையானதாகவும் மிகவும் இறுக்கமானதாகவும் இருக்கக்கூடிய காலத்தைத்தான் கொண்டு வரும் என்று தோன்றுகிறது. ஏனேனில் முன்னேறிய நாடுகள் தங்களுடைய சாதனைகளை தாராண்மைவாத யுகத்தின் வழி நிகழ்த்திக்கொள்ளும்.ஆக மொத்தம் : பின்தங்கிய பகுதிகள் ஏதாவது ஒரு வகை நவ-காலனிய வடிவமாக சரணடைந்து போகும், அல்லது முதற்கட்ட குவிப்பை மேற்கொள்ளும் கிட்டத்தட்ட தீவிரமானதொரு அமைப்பாக இருக்கும்.

(தொடரும்)

-- Herbert Marcuse - One Dimensional Man - Beacon Press - 1971



No comments: