கடல்புரத்தில்





லாஞ்சிகள் இல்லாதிருந்து , எல்லோரும் வல்லங்களையும் , நாட்டுப்படகுகளையும் மட்டும் உபயோகபடுத்திக்கொண்டிருந்திருந்தால்:

* பிலோமி சாமிதாஸின் திருமணம் நடந்திருக்கும்.

* ஜசக்கிற்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்காது.

* ரொசாரியோ இறந்து போயிருக்கமாட்டான்.

* குருஸூ மனம் குழந்தைபோல ஆகியிருக்காது.

* கடல்புரத்து ஊர் திரிந்திருக்காது.

உற்பத்தி முறைகள் மாறும் போது உற்பத்தி மட்டும் பெருகவதில்லை.மனதிர்களின் மனமும் மாறுகிறது.லாஞ்சிகள் வந்த பின் கிறுஸ்துமஸ் அன்று கடலுக்கு போவதில்லை என்ற மரபு மீறப்பட்டு கடலுக்கு செல்ல நினைக்கிறார்கள் லாஞ்சிகாரர்கள்.கிட்டத்தட்ட கொலை வரை செல்லும் அந்த நிகழ்வு பவுலு பாட்டாவால் தடுத்து நிறுத்தப்படுகிறது.விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் எவ்வளவு மாற்றங்கள்.விஞ்ஞானத்தின் வளர்ச்சி உண்மையில் எதனால் மனிதனை கவர்கிறது.அதனால் உற்பத்தி பெருக்கலாம், எல்லா துறைகளிலிலும்.கோசாம்பி Indus Valley நாகரிகம் பற்றி எழுதுகையில் மாற்றங்களே இல்லாமல் தேக்க நிலையில் இருந்த அந்த நாகரிக்த்தை ஆரியர்கள் எளிதல் அழித்து ஆக்ரமித்தார்கள் என்று எழுதுகிறார்.உண்மை என்னவோ.
ஆனால் ஒரு ஊர் சிரான இயக்கம் கொண்ட நிலையில் இருக்கும் என்றால் அதற்கான ஆன்மிகம் அந்த சமூகத்திற்கு இருக்கும்யென்றால் அதுவே சிறந்த சமூகம் தான்.
குருஸூ தன வல்லத்தை இழந்ததை நினைத்து ஆன்மிக மரணம் அடைகிறான்.இனி அவன் எப்படி வாழ்வான்.இந்தியாவில் எத்தனை குருஸூகளை நாம் உருவாக்கி கொண்டிருக்கிறோம்.கவலைப்பட வேண்டிய விஷயம் லாஞ்சிகள் வருகைஅல்ல.அதை , அந்த மனசாட்சியை உலுக்கி குற்றவுணர்வு கொள்ள செய்யும் பவுலு பாட்டாக்கள் நம்மிடம் இல்லை என்பது தான்.

பரதவர்களின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்தது போல இருக்கிறது கடல்புரத்தில் நாவல்.யாரும் மகாத்மாக்கள் அல்ல.ஆனால் எல்லோரும் எவ்வளவு அற்புதமாக இருக்கிறார்கள்.பிலோமியின் மனம் எத்தனை நுட்பமாக வாழ்க்கையை புரிந்து கொள்கிறது.நிஜ வாழ்க்கையில் வெறும் உணர்ச்சிக்கு இடமில்லை என்கிற வரிதான் எத்தனை அழகானது..வண்ணநிலவன் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எழுதியிருக்கிறார்.இப்போதய எழுத்தாளர்கள் ஏன் இவ்வளவு ஆர்ப்பரிக்கிறார்கள் என்று நினைக்த் தோன்றுகிறது.வண்ணநிலவனுக்கு என் வணக்கங்கள்.


கடல்புரத்தில் நாவல் - எழுத்தாளர் வண்ணநிலவன் - கிழக்கு வெளியீடு.


1 comment:

ரைட்டர் நட்சத்திரா said...

பகிர்வுக்கு நன்றி