தஸ்தாயெவ்ஸ்கியின் கிறுஸ்து




கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் அல்யோஷா.தி இடியட் நாவலில் வரும் மிஸ்கின்.
அல்யோஷாவின் தந்தை கொலை செய்யப்படுகிறார்.மூத்த சகோதரன் திமித்ரி தன்டனை பெறுகிறான்.அடுத்த சகோதரன் இவான் மனநிலை பாதிக்கப்படுகிறான்.கேத்ரீனா நிரந்திற குற்றவுணர்வுக்கு ஆளாகிறாள்.சிறுவன் இல்யூஷா இறந்துபோகிறான்.அல்யோஷாவால் ஏதுவும் நிகழாமல் தடுக்கவோ, அல்லது நிகழ்த்தவோ முடியவில்லை.ஆனால் அவன் முன் அனைவரையும் தங்களை அம்மனமாக்கி கொள்கின்றனர்.ராத்திகனிடம் அல்யோஷாவை எப்படியாவது அழைத்துவர சொல்லும் குருஷன்கா அவன் வந்தபின் கிட்டத்தட்ட அவனிடம் சரனாகதி என்பது போல ஆகிறாள்.அவன் மானுட அறத்தின் குறியீடு போல இருக்கிறான்.லெளகீகமாக அவன் ஒரு செல்லாக் காசு.இவானால் அல்யோஷாவின் இருப்பை பொறுத்துக்கொள்ள முடிவதேயில்லை.திமித்ரி சிறையில் அல்யோஷாவிடம் பேசும்போது வாழ்க்கை எல்லா இடங்களிலும் வாழ்க்கையே.அங்கும் என்னை சுற்றி மனிதர்கள் இருப்பார்கள் என்கிறான்.அவனது தந்தை திமித்ரியை விடவும் இவானை கண்டே தான் அஞ்சுவதாக கூறுகிறார்.ஆனால் அவன் அவர்களுக்காக ஆறுதலாகவோ, லெளகீகமான சில யோசனைகளையோ கூற முடியவதில்லை.மாறாக அவன் தோளில் சாய்ந்து எல்லோரும் மனம் உருகி அழுகிறார்கள்.மானுடர்கள் எல்லோரும் தங்கள் கீழ்மையையும், தீமையும் அவன் முன் திறந்து வைத்து அவன் முன்னால் மானுட மேண்மையை நோக்கி முன் செல்கிறார்கள்.அவனே தஸ்தாவெய்ஸ்கியின் கிறுஸ்து.


தரிசனம்.





வித்யாசமான நாடகங்கள்.சில மேலை நாடுகளின் கலாச்சார மையத்தின் உதவியால், சில கார்ப்பரேட் நிறுவனங்களின் அறக்கட்டளைகள் மூலமாக என்று எப்படிஎப்படியோ நாடகங்கள் நிறைய நடக்கின்றன சென்னையில்.வித்யாசமான திரைப்படங்கள்.கார்ப்பரேட்கள் தயாரிக்கின்றன.
பல பதிப்பகங்கள் தீவிர இலக்கிய , தத்துவ , பண்பாட்டு புத்தகங்களை வெளியீடுகின்றன, வெளியீடுபவர் பிரபல அதிகாரிகள், அமைச்சர்கள்.எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

சுற்றுச்சுழல் ஆர்வலர்: உங்களால் சுற்றுச்சுழல் பாதிப்படைந்துவிட்டது.

கார்ப்பரேட்:ஆம், நம்மால் சுற்றுச்சுழல் பாதிப்படைந்துவிட்டது.

சுற்றுச்சுழல் ஆர்வலர்: ஆனால் உங்களால்.

கார்ப்பரேட்: ஆம், நம்மால்.

சுற்றுச்சுழல் ஆர்வலர்:!!!!!

கார்ப்பரேட்:சுற்றுச்சுழலை பாதுக்காக்க நூறு மரக்கன்றுகளை நடவிருக்கிறோம்.நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

சுற்றுச்சுழல் ஆர்வலர்:!!!!!

கார்ப்பரேட்: சுற்றுச்சழலை பாதுகாப்போம்.

சுற்றுச்சுழல் ஆர்வலர்:!!!!!

கார்ப்பரேட்: சுற்றுச்சழலை பாதுக்காப்போம்.சொல்லுங்கள்.....

சுற்றுச்சுழல் ஆர்வலர்:சுற்றுச்சழலை பாதுக்காப்போம்.!!!!

நாடகங்கள் இயக்குவோரின்,நடிப்போரின், மாற்று திரைப்படங்களை இயக்குவோரின் , பல இலக்கியவாதிகளின் , பதிப்பாளர்களின் தரிசனம் என்ன.மாசனோபு, காந்தி , லாரி பேக்கர் இவர்களின் வாழ்க்கையை பார்க்கும் போது ஒரு விஷயம் தெரிகிறது.மாசனோபு நூறு சதவிகித மக்களும் விவசாயம் செய்யலாமே , ஏன் வேறு விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என கருதுகிறார்.காந்தியின் கிராம ராஜ்யம் கனவுதான் அவரை இறுதிவரை பயணம் செய்ய வைத்திருக்கிறது.லாரி பேக்கரிடம் எளிமையாக எதையும் செய்ய முடியும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது.அவர்களின் கனவுகள் அவர்களை வழிநடத்தியிருக்கிறது.இதில் ஒன்றை கவனிக்கலாம்.இவற்றில் குழந்தையின் அறியாமை இருக்கிறது.லாப நஷ்ட கணக்கு பார்க்காத குழந்தையின் அறியாமை.ஜம்பது வருடங்களாக மாசனோபு தொடர்ந்து இயற்கை விவசாய முறையை செய்திருக்கிறார்.சலிக்கவேயில்லை.லாரி பேக்கரிடம் அதையையே நாம் பார்க்கிறோம்.காந்தியிடமும்.அதுவே அவர்களை வழிநடத்தியிருக்கிறது.அந்த கனவு.மானுட தரிசனம்.அது இன்று யாரிடம் இருக்கிறது.எந்த இலக்கியவாதியிடம் இருக்கிறது.எந்த தலைவனிடம் இருக்கிறது.

உலக சந்தையில் ஒரு மனிதன் போனால் இன்னொருவன்.
உனக்கென்ன ஒரு லாப நஷ்ட கணக்கிருந்தால் விஷயம் வேறு.
-நகுலன்.




காந்தியின் கைகளில் ரத்தம் இல்லை





எல்லா புனித நூல்களின் ஏடுகளிலும் ரத்தம்.மார்க்ஸின் கைகளில் ரத்தம்.மனித ரத்தம்.நான் என் துணிகளை துவைத்துகொள்வதில்லை.வெளியில் நல்ல மழை.கவலையில்லை.மேலே கூரை இருக்கிறது.குளிர்.நல்ல கனமான உடைகள் இருக்கிறது.வாஷிங் மேஷினின் சத்தம் தொந்தரவு தருகிறது.அக்குள் முடி சிராய்பதற்கு பார்பர் ஷாப் செல்ல வேண்டும்.தட்டச்சு செய்ய சிறந்த மடிக்கணினி.மழையால் மின்சாரம் போய்விட்டால் கவலைவேண்டாம்.இன்வர்ட்டர் இருக்கிறது.செளகரியமாக இருக்கிறேன்.எதற்கும் கவலையில்லை.நான் காந்தியையும் விமர்சனம் செய்வதில்லை.ஆனால் நான் கண்டுகொண்டேன்.காந்தியின் கைகளில் ரத்தம் இல்லை.



வடபழனி



சிமெண்ட் நிறத்திலான சட்டை அனிந்த பெண். ஸ்தனங்கள் கச்சிதமாக இருந்தன.புகைப்படம் எடுத்து கணினிக்குள் ஊட்டி காட்டினான்.அவள் ஒன்றும் சொல்லவில்லை.புகைப்படத்தை அச்சிட்டு வெளியே எடுத்த போது தான் அவளது பகுஅறிவு கீரிச்சிட்டது.அவளது சட்டை சிமெண்ட் நிறம்.பின்பக்கத்து தீரைச்சீலை சிமெண்ட் நிறம்.அவள் வெளிர் நிறம்.பார்க்கையில் அவளது முகம் தீரைச்சீலையில் ஒட்டப்பட்டுயிருந்த்து போலயிருந்த்து.சொல்லியிருக்க வேண்டும் என்றாள்.அச்சிடவதுற்கு முன்பாகவேனும் சொல்லியிருக்க வேண்டும் என்றான்.முடியாது எனறாள்.மின்சாரம், கணினி, புகைப்பட கருவிகள் , வாடகை.வயது வேறு முப்பத்தி எட்டு.யாரும் பெண் தரவில்லை.நிரந்தர வேலையில்லையாம்.கத்தினான்.அவளுக்கு சிரிக்க வேண்டும் போல இருந்தது.காசை கொடுத்துவிட்டு புகைப்படம் வேண்டாமென சொல்லி கிளம்பினாள்.தீரைச்சீலையை ரத்த நிறத்திற்கு மாற்றினான்.அவள் புகைப்படம் எடுக்க நின்றாள்.

பொக்கை பல் தெரிய சிரித்தார் கிழவர். செயற்கை வெளிச்சம் பளீரென்று அறையை நிறைத்தது.'கீளிக்' சத்தம்.பழனிக்கு வடக்கே தமிழ் கூறும் நல்லுலகத்தின் கருத்துலகம் உருவாகும் வடபழனி கோயிலின் தெற்கு கோபுரம் இருக்கும் தெருவில் ஒரு புகைப்பட ஸ்டுடியோவில்.கணினியில் அவரது புகைப்படத்தை பார்த்தார்.அவர் அதுவரை தனியாருக்காக புகைப்படம் எடுத்துக்கொண்டதில்லை.புகைப்படத்தில் படக்காரன் சில மாற்றங்கள் செய்தான்.தாடியை பிடுங்கினான்.பொக்கை பல்லை மறைத்தான்.சற்று செவப்பு சாயம் பூசினான்.மீசையை டீரிம் செய்தான்.பார்த்தாவாறு நின்றார் கிழவர்.அழகுபடுத்துகிறேன் என்றான் புகைப்படக்காரன்.வேண்டாம்.என் முகம் அல்ல இது.இது நிழல்.நிழல் என்னுடையது.அப்படியே இருக்கட்டும்.அவர் நின்ற நிலையில் அவன் உட்கார்ந்திருக்க அவன் தலைமூடி சீவப்பட்ட ஆனால் இன்னும் ஒட்டை போடாத இளநீர் போல் காட்சி தந்தது.சிரித்தார்.ஏன்.சொன்னார்.இந்த வயதிலும் இவ்வளவு மூடி இருக்கிறதல்லவா அந்த கொழுப்பு என்றான். இரண்டு போதும் புகைப்படம். என்றார்.ஏன் திடீரென்று புகைப்படம் எடுத்து கொள்கீறிர்கள்.தெரியவில்லை.

அன்றைய இரவில் அவருக்கு நல்ல வியாபாரம்.கடை சாத்தி வண்டி எடுத்தான் புகைப்படகாரன்.பளம் சாப்படறது.இரண்டு பழங்கள் தின்று தோள்களை அருகில் கிடாசினான்.இருட்டில் உங்கள் புகைப்பட கருவி என்னை படம் பிடிக்குமா.முடியாது.எப்போதும் அதற்கு வெளிச்சம் தேவை,எந்த வகையிலெனும்.சூரியன் இருந்தால் நிழல் சரியா.சரி.பள வியாபாரம் பலே.ஆம் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஒரு கிரவுண்ட் வாங்கியாகிவிட்டது.கோபிக்காதீர்கள்.உங்க வியாபாரம் எப்படி.புகைப்படக் கடைகளின் காலம் முடிவுக்கு வருகிறது.நான் கடைசி தலைமுறை.விஞ்ஞானத்தின் வளர்ச்சி எங்களை தேவையற்றவர்களாக்கி விடும்.வடவேங்கிடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம், தெரியுமா உங்களுக்கு.தொல்காப்பியம்லா தெரியுதே உனக்கு ஆனா மாத்தனும்.வடவேங்கிடம்ன்னு இனி சொல்லமுடயுமா.வேன்னா வடபளனின்னு மாத்திக்கலாம்.இப்படி இல்லாவிட்டால் நாம் எவ்வளவு நன்றாக இருக்கலாம்.எப்படி இருக்காவிட்டால்.தமிழ்நாடு தமிழ்ர்களுக்காக தனித்து இருந்தால்.சிரித்தார்.நம் வரி அவனுக்கு செலுத்தி அவன் நமக்கு ஏன் நன்மை செய்ய வேண்டும். நாம் உருவாக்குவோம் நமக்கான சமூகத்தை.நம்மவர்கள் செத்துக்கொண்டிருக்கையில் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அவர்களை நோக்கி நிற்கிறோம்.அரசின் பிரதிநிதி , இவர் மாநில அரசு தான், ஆனால் சமயங்களில் மத்திக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் வந்தார்.காகித நோட்டை கொடுத்தார்.அவர் சென்று விட்டார்.இவர்கள் ஏன் மாவோயிஸ்ட்கள் மேல் அவ்வளவு கோபம் கொள்கிறார்கள் தெரியுமா.ஏன்.அவர்கள் வந்தால் இவர்கள் இல்லாமலாகி விடுவார்கள்.சரி.எல்லாம் சரி தான்.கிளம்பினான்.மறுநாள் நேற்றைய உரையாடல் பற்றி பேச்சு கொடுத்தான்.அவர் ஒன்றும் சொல்லவில்லை.கருத்து கூற மறுத்துவிட்டார் செய்தி போடலாம் இதோ புகைப்படம் செய்தி அருகே போட.கொடுத்தார்.கோபித்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான்.

பல மாதங்கள் பிறகு அவரை காணவில்லை.யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.மத்திய இந்தியாவில் பயணம் செய்து கொண்டிருந்தார் கிழவர்.வெயில் பெய்துகொண்டிருந்தது.தேங்காய் நாறை போன்ற தாடியில் பொதிந்த முகம்.கூரிய நாசி.வறுமை இறுக்கிய உடல்.இந்தியாவின் கிராமங்களும் அதன் பிரச்சனைகளும் ஒன்று தானோ என்று எண்ணியவாறு சென்றுகொண்டிருந்தார்.அரசு அலுவலகம்.அவன் பெயர் சொல்லி பார்க்க வேண்டும் என்றார்.அவனை அங்கு அனைவருக்கும் தெரியும்.இந்தியாவுக்கே தெரியும்.அடுத்து எந்த பகடைக்காரன் தன்னை உருட்ட வந்திருக்கிறான், ஆராய்ச்சியாளன் பரிசோதனை கூடத்தில் எலியாக்கி பார்க்க போகிறான் என நினைத்தவாறு அவன் வந்தான்.கிழவர்.ஒரிரு வார்த்தைகளில் தென்னாட்டுக்காரர் என தெரிந்தது.அநேக பரதேசி.கிழவருக்கு அவன் அத்தனை சரியாக சவரம் செய்த முகத்தை கொண்டிருப்பது ஆச்சிரியம் அளித்தது.வெளிர் நிற உடை.பியூன் வேலை.விஷயம் கேட்டான்.அவர் சொன்னார்.ஊடகங்கள் சொன்னவை எல்லாம் உண்மையா, அன்றே எப்படி புகார் கொடுக்க முடிந்தது , கேட்க நினைத்து கேட்கவில்லை.பயம் அல்ல.கேட்டு என்னவாக போகிறது.கேட்டார்.மனிதர்கள் இருக்கீறார்களா.அவன் அவரை பார்த்தான்.பழுப்பேறிய கண்கள்.புரியவில்லை என்றான்.மனிதர்கள் இருக்கீறார்களா.அவன் தெரியவில்லை என்றான்.இந்தியா இருக்கிறதா.தெரியவில்லை.பின்.நான் இருக்கிறேன்.நான் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்.அது மட்டும் தெரிகிறது என்றான்.அவன் மேலே ஏதுவம் சொல்லவில்லை.ஆழ்மனம் திறந்து குழந்தை போல பேசிவிட்டோமே என எண்ணியவாறு நின்றான்.அவர் கிளம்பினார்.அவன் அவரை பார்த்தவாறு நின்றார்.

ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டினான்.கிழவர் பார்த்தார்.தென் ஆற்காடு மாவட்டம்.பண்ருட்டி.அக்காள் திருமணமாகி கனவனை இழுந்தவள்.இவள் கடைசி.தந்தை முந்திரி மொத்த வியாபாரம்.திருமணம் செய்யலாமா.பெண் பி.எஸ்.சி முடித்து பி.எட் படித்திருந்தாள்.வயது மூப்பது.அக்காளுக்கு இப்படி ஆனதால் யாரும் கட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.கீழவர் ஒன்றும் சொல்லவில்லை.அக்காளுக்கு குழந்தை உண்டா என்று கேட்டார்.உண்டு.பெண்.பிரச்சனையில்லை.அப்படியென்றால் திருமணம் செய்யலாம் என்றார்.ஏப்படி என்றான்.கிழவர் சிரித்தார்.அவ்வளவுதான் என்று பொருள்.

சில மாதங்களில் நல்ல எடை போட்டு விட்டான் புகைப்படக்காரன்.ஒரு நாள் கிழவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.கிழவர் கேட்டார்.மனிதர்கள் இருக்கிறார்களா.அவன் முழித்தான்.கிழவர் தொடர்ந்து இந்தியா இருக்கிறதா என்று கேட்டார்.அவன் கிழவர் முகத்தை பார்த்தான்.தனி தமிழ்நாடு குறித்த உங்கள் கருத்து என்ன.தொடர்ந்து கேட்டார்.அவரது முகத்தில் சூட்சம்ம் தெரிந்த்து.பலமாக சிரித்தான்.அவரும் சிரித்தார்.



சாதாரண வாழ்க்கை






கலைஞர்களாகவும் , எழுத்தாளர்களாகவும் , இன்னும் பலவாகவும் ஆக ஆசைப்படும் இளைஞர்களை பார்க்க முடிகிறது. உண்மையில் எதற்காக இவையெல்லாம்.அங்கீகாரத்திற்காகவா. எதன் பொருட்டோ. சாதாரணமானவர்களாக வாழ்வது எத்தனை கடினமானது.இன்றும் நம் நாட்டின் பல கோடி மக்கள் விவசாயிகளே.அடையாளமற்று கரைந்து போகிறவர்களே.பல வேடிக்கை மனிதரை போல வீழ்வதில் ஒன்றும் குறைந்துபோய் விடபோவதில்லை. பாதசாரியின் காசி சிறுகதையில் 'காரியங்களை காரியங்களுக்காகவே மட்டுமே செய்வதில் ஒரு விடுதலை உணர்வும் , பரபரப்பற்ற பேரார்வமும் இருப்பதைக் கண்டுகொண்டுவிட்டதால் , எந்தக் காரியுமுமே தனக்குப் பேரானந்தமாக இருக்கிறது' என்ற வரி என்னை மீட்டது. உண்மையில் இது பெரிய விஷயம் இல்லை.நம் மரபு இதை கூறுகிறது.நம் தினசரி வாழ்க்கையில் நம் அண்னையர் , பல தொழிலாளிகள், என பலரும் இப்படி வாழ்வதை பார்க்கிறோம்.ஆனால் இதை கூர்ந்து கவனிக்க வாழ்வின் மற்றொரு பக்கத்தை எனக்குக் காட்ட இந்த சிறுகதை பெரிதும் உதவியது.தற்கொலை பற்றி தீவிரமாக சிந்தித்த நாட்கள் அவை.தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் என்னை போன்ற மனிதர்களே பிற எந்த மனிதரும் என்ற எண்ணத்தை மிக தீவரமாக உண்டாக்கியது.தாழ்வு மனப்பான்மை எண்ணிலிருந்து நீங்கியது.அந்நியன் நாவலும் , மாசனோபுவின் ஒற்றை வைக்கோல் புரட்சியும் இரு வேறு உலகங்களை எனக்கு காட்டின.பல்வேறு மனித நிலைகள் உண்டு என்ற புரிதல் ஏற்பட்டது.அந்நியன் நாவலில் 'எல்லா வாழ்கையும் மதிக்கதக்கதே' என்ற வரி நான் என் வாழ் நாளில் என்றும் மறக்க மாட்டேன்.வாழ்கை சார்ந்தே என் வாசிப்பு.நான் பெரிய வாசகனும் அல்ல.


ஜெயகாந்தனின் 'ஒரு இலக்கியவாதியின் அரசியல் கட்டுரைகள்' எனக்குள் பெரிய மன எழுச்சியை ஏற்படுத்தியது. தன் மக்கள் மக்களோடு மக்களாக கரைந்து போய் தொழிலாளிகளாக வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுவதாக எழுதியிருப்பார்.மிக முக்கியமான வரிகள்.பாரீஸின் குடோன் தெருவில் முட்டை தூக்கி வாழவேண்டும் என்று ஆசைப்படவது இல்லை யாரும்.அதுவம் ஒரு வாழ்க்கை முறைதான்.அவர்களும் மனிதர்கள்தான்.நானும் மனிதன்தான்.வேறுபாடு இல்லை எவ்வகையிலும். வாழ்க்கை சுவாரசியமாக மாற ஆரம்பித்திருக்கிறது. மனிதர்கள் மீதும் , என் மீதும் , காதல் கொள்கிறேன். மனதிர்களோடு வாழ ஆசைப்படுகிறேன்.என் நுண்ணுர்வை எரிச்சல் அடைய செய்யாத எதையும் செய்யலாம் என்று புரிதல் கொள்கிறேன்.சில விஷயங்களை நாம் செய்தாக வேண்டும். அவற்றில் நம்மை கரைத்து கொள்வதே சரி.அதுவே யோகம்.அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். அதுவே நமக்கான மகிழ்ச்சி.ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ள நாம் செய்ய வேண்டியது நம்மை நம் செயலில் கரைத்து கொள்வது.நம் அண்ணையர்களை பார்ப்போம், நம்மை சுற்றி இருக்கும் பெரும்பாலான மனிதர்களை பார்ப்போம்.அங்கீகரிக்க படுவதனால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பதை அறிவோம்.

எந்தக் கலையும் ஒருவனிலிருந்து பீறிட்டு எழுவதே சரி.அப்போது மட்டேம அது பதிவு செய்ய பட வேண்டும்.மற்றபடி தொழிலாளிகளாக இருப்பதே , மக்களில் ஒருவனாக இருப்பதே மகிழ்ச்சியான வாழ்க்கை.


வாழ்வோம் நமக்கான வாழ்க்கையை.

மனித மனம்

மனித மனம் உண்மையில் எதற்காக அவாவுகிறது.காமம், பணம், கீழ்மையும் தீமையும்...... இன்பத்திற்காக அவாவுகிறது.


மனித மனத்தின் அவாவுதல்.அற்புதமான குறும்படம்.


இன்பத்திற்கான அவாவுதல்






கவிஞர் சுகுமாரன்



அழகன். இதழ்களிலும் , பிற ஊடகங்கிளிலும் இவரின் கட்டுரைகளை வாசிக்கும் போது எனக்கு மிகவும் விருப்பத்திற்குரிய ஆளுமையாக ஆனார் சுகுமாரன்.அவரின் கட்டுரைகள் நெகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக எழுதப்படுவது அல்ல. அந்த கட்டுரையின் எதோ ஒரு கட்டத்தில் தன் கருத்தை மிகவும் தீவிரமான ஒரு தொனியில் முன்வைப்பவர்.சுயம்புலிங்கம் கவிதைகள் பற்றி எழுதும் போது ஒரு விபத்து சம்பவத்தை குறிப்பிட்டு அப்படியாக அவரின் கவிதைகளில் தெரிக்கும் ஒரு அவஸ்தை , ஏளனம் , இவற்றை சுட்டிக்காட்டுவார்.பஷீர் பற்றி ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணன் , எம்.டி.வாசுதேவன் நாயர், அடூர் கோபாலகிருஷ்ணன் என பலர் எழுதியதை வாசித்திருக்கிறேன்.இது அனைத்தையும் விட சுகுமாரன் , காலச்சுவடு அவரது நூற்றாண்டை முன்னிட்டு வெளியிட்ட இதழில் எழுதிய கட்டுரையை சிறந்த கட்டுரையேன சொல்வேன். தீமையும் கீழ்மையும் மனிதனின் ஆதார குணங்கள் என்பதை அவர் உணர்ந்திருந்தார் என்று வரிகளில் சுகுமாரன் தனித்து நிற்கிறார். வேறொரு இடத்தில் நானே பூங்காவனம் , பூவும் , காயில்லையா , காயும் என்று மதில்கள் நாவலில் பஷீர் சொல்லும் இடத்தை குறிப்பிட்டு அதுவே பஷீரின் ஆன்மிகம் என்கிறார். நிச்சயமாக சுகுமாரன்தான் பஷீரின் முதன்மை வாசகனாக எனக்குத் தெரிகிறார்.

அவரின் கவிதைகளை பற்றி கருத்து கூறும் அளவுக்கு கவிதைகளை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.ஆனால் அதில் அவரின் இருப்பு சார்ந்த தத்தளிப்பு தொடர்ந்து இருப்பதை கவனிக்கிறேன். சமீபத்தில் ஞாநி வீட்டில் கேணி என்ற இலக்கிய கூட்டம் நடந்தது.பிரபஞ்சன் பேசினார். அப்போது சுகுமாரன் அங்கு வந்திருந்தார். தன் இருப்பை எக்காரணத்தை கொண்டும் கூட்டம் முடியும்வரை யாரும் அறிந்துகொள்ள கூடாது என்பது போல இருந்தார். இயல்பிலேயே கூச்ச சுபாவம் உடையவராக இருப்பார் என்று நினைக்கிறேன். கையில் சுஜாதாவின் புத்தகமொன்றை வைத்திருந்தார். எதையோ யோசிப்பதும் , பிரபஞ்சன் முக்கியமானதொரு கருத்தை கூறுகிறார் என்கிற போது அருகில் வந்து கவணிப்பதுமாக நின்றார். அவரின் கவிதை வரி ஒன்று எப்போதும் என் நினைவில் இருக்கும்.ஒவ்வொரு வார்த்தையும் மௌனத்தின் மிச்சம். அதனால் தானோ என்னவோ அவரிடம் பேசவில்லை.


கர்ம ஞானி


நான் நினைத்துகொண்டிருந்தேன் வசந்த காலத்தில் விதைக்கப்படும் நெல் , பின்பு விளைந்து அறுவடையின் போது இறந்துவிடுகிறதென்று. ஆனால் உண்மை என்னவென்றால் இந்த செயல் ஒவ்வொரு ஆண்டும் மறுபடி மறுபடி நிகழ்ந்தேபடியே இருக்கிறது. அப்படியென்றால் இந்த நிலத்தில் உயிர் இருந்துகொண்டேயிருக்கிறது. ஆக அந்த ஆண்டின் மரணமே அந்த ஆண்டின் பிறப்பும் ஆகும். ஆதலால் நாம் அறுவடை செய்யும் நெல் எப்போழுதும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

தன் கர்மத்தின் மூலமாக மட்டும் பிரபஞ்ச தரிசணம் கிடைக்கபெற்ற கர்ம ஞானி. ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற புத்தகத்தில் அவர் யாரையேனும் மேற்கொள் காட்டுகிறாரென்றால் அது புத்தர் மட்டுமே.யின்-யாங் உணவுமுறையிலிருந்து , ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் வரை எல்லாவற்றையும் நிராகரிக்கிறார்.

மாசானோபுவின் "ஒற்றை வைக்கோல் புரட்சி" நூலை சென்ற வருடம் அவர் இறந்தபின் அதைப்பற்றிய ஜெயமோகனின் அஞ்சலி கட்டுரை வழியாக அறிந்து கொண்டேன்.

விவசாய விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் அடிக்கடி சோதனைகூடத்திலேயே சுயநினைவு இழந்துவிடுகிறார். மருத்தவமனையில் சிறிது காலம் சிகிச்சை பெற்றபின் ஒரு நாள் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் மலையில் ஏறுகிறார்.அங்கே மரத்துக்கு அடியிலேயே இரவு முழுவதும் தூக்கமும் அல்லாத விழிப்பும் அல்லாத நிலையில் துறைமுகத்தை பார்த்தபடியே இருக்கிறார். சூரியோதத்தின் போது நேய்ட் ஹிரான் என்ற பறவை அவரை கடந்து செல்கிறது. அதன் சிறகடிப்பை கேட்கிறார். மனிதருக்கு எல்லாம் புரிந்துவிடுகிறது. தர்க்க அறிவுக்கு எல்லை உண்டு என்று அறிகிறார். வேலையை ராஜினாமா செய்கிறார். இயற்கையை விவசாயம் செய்கிறார். செயற்கை விவசாயத்தை விடவும் இயற்கை முறையே சிறந்தது என்று உறுதி செய்கிறார்.தொண்ணூற்றி ஐந்து வயதில் சென்ற வருடம் இறந்தார். One Straw Revolution என்பதை தவிர The Natural Way of Farming , The Road back to Nature ஆகிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.காந்தி விவசாயம் செய்திருந்தால் இயற்கை விவசாயமே செய்திருப்பார் என்று சொல்கிறார்.

அந்த புத்தகம் விவசாயத்தை மையப்படுத்தி பேசும் போதும் அது ஒரு தத்துவ நூல் தான். தர்க்க அறிவுக்கு மீறிய ஒரு நிலை உண்டு , அது மனிதனுக்கு சாத்தியப்படும் என்பதை நடைமுறையில் கண்டுகொள்கிறார். இந்த புத்தகம் ஏற்படுத்திய மனஎழுச்சி நிறைய மாதங்களுக்கு இருந்தன. இப்போது மனம் சற்று சமன் அடைந்துள்ள நிலையில் என்னால் சொல்லமுடிந்ததெல்லாம் இதுதான். மனிதனின் தர்க்க அறிவுக்கு மீறிய ஒரு நிலை மனிதனுக்கு சாத்தியமே. அதை அவன் தன் கர்மத்தின் மூலமும் அடைய முடியும். அந்த நிலையை தியான நிலை என்று சொல்லாமா தெரியவில்லை. அந்த நிலையில் இந்த முடிவற்ற பிரபஞ்சத்தின் துளிதான் தான் என்றும் , கடலே அலை, ஆக தானே பிரபஞ்சம் என்பதும் , பிறப்பும் இறப்பும் அதன் உண்மையான அர்த்தத்தில் இல்லை என்ற உணர்தலும் சாத்தியமே.

இந்த கர்ம ஞானிக்கு என் அஞ்சலி.




நாட்டாரியல் வரலாறு




குறிஞ்சிப்பாடி அருகே கஞ்மநாதம்பேட்டை என்கிற கிராமத்தில் எனது தாத்தா காலத்தில் இருந்திருக்கிறார்கள். தெலுங்கு பேசும் கம்மவார்களான இவர்கள் எப்படி அங்கே சென்றார்கள், விவசாயம் செய்தார்கள்.இதை அறிந்து கொள்ள முயற்சி செய்தால் அது ஒரு வரலாறை நமக்கு கொடுக்கும். அந்த வரலாற்றின் மூலம் நமக்கு கிடைக்கும் தரிசனம் பல வாசல்களை திறக்கும்.அந்த வரலாறு, நாட்டாரியல் வரலாறாகத்தான் இருக்கமுடியும்.

நாட்டாரியல் என்ற பெயரை சொல்லிக்கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது.

கி.ராஜநாரயணனின் கோபல்ல கிராமம் என்ற நாட்டாரியல் நாவல் 1976ல் முதல் பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

கம்மவார்கள் தெலுங்கு பேசும் நாட்டிலிருந்து தெற்கே பல மைல் தூரம் சிறு சிறு குழுக்களாக ஏதேதோ காரணங்களுக்காக வெவ்வேறு காலக்கட்டங்களில் தமிழ் பேசும் மண்ணின் பல இடங்களுக்கு புலம்பெயர்ந்திருக்கின்றனர்.அப்படிப்பட்ட ஒரு குழுவைப்பற்றிய நாட்டாரியல் வரலாறு இந்த நாவல்.நூற்றி மூப்பத்தி ஏழு வயது நிரம்பிய மங்கத்தாயாரு அம்மாள் தன் நினைவாக சொல்லும் நாட்டாரியல் வரலாறு. அதில் வரும் யதார்தத்திற்கு மீறிய காட்சிகளே நம்மை வசீகரிக்கிறது.யதார்தத்தின் ஆழ்மன உணர்வுதான் கற்பனை என்று எம்.என்.விஜயன் பஷீர் பற்றிய பஷீர் எனும் தனிமரம் கட்டுரையில் சொல்கிறார். அது உண்மை.

சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை நாவலில் முதல் பகுதியில் ஆசான் மூலமாக விவரிக்கப்படும் வரலாற்றை படிக்கும் போது ஏற்படும் உணர்வு , பின்பு விவரிக்கப்படும் நாவலின் சமகாலத்திய வரலாற்றில் இல்லை. அதற்கு காரணம் அந்த ஆசானின் மொழியில் இயல்பாக வெளியாகும் யதார்த்திற்கு மீறிய சொல் முறையே. இதை பொய் என்று ஒதுக்க முடியாது. நாம் சொல்வது நம் மனதில் இருக்கும் காட்சி பிம்பங்களையே.உண்மைகளை அல்ல.

அதே நேரத்தில் இதுபோன்ற கற்பனைகளை,கவித்துவங்களை ஒரு எழுத்தாளன் மிகவும் சிரத்தை கொண்டு செயற்கையாக உருவாக்கினால் அது திகட்ட கூடும்.எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் நாவலில் வரும் கவித்துவம் வாசகனை கிறுகிறுக்க செய்யக்கூடியது. படித்த சில நாட்களுக்குப்பின் அந்த கிறுகிறுப்பு மறைந்தபின் எஞ்சுபவை என்ன என்பது தான் முக்கியம். நெடுங்குருதி நாவலின் மூலமே இன்று நான் வெயிலை ரசிக்கிறேன். ஒளிக்கற்றைகளை பார்க்கும்போது மனம் கொள்ளும் எழுச்சி ஆச்சர்யம் அளிக்கிறது.யாமத்தில் அது செயற்கையாக மிகைபடுத்தபட்டுவிட்டதால் அந்த வசீகரம் இப்போது மறைந்துவிட்டது.

கோபல்ல கிராமம் நாவலில் வரும் , நாவலின் சமகாலத்திய பதிவுகளும் , கழுமரம் பற்றிய குறிப்புகளும் மிக முக்கியமான ஆவணங்கள்.ஒரு கலைஞன் என்பவன் யார்? எல்லா மனிதர்களையும் மனிதர்கள் என்று உளப்பூர்வமாக ஏற்றவன். அதை தன் மொழியில் நிரூபிப்பவன். கி.ரா. நம் காலத்து மூத்த கலைஞன்.அவருக்கு என் வணக்கங்கள்.


என் வாழ்க்கையில் என் மூதாதையர்களின் கதையை ஒரளவுக்கேனும் தெரிந்து கொள்ள முயற்சி செய்வேன்.சாதிய நோக்கத்தில் இதை தெரிந்து கொள்ளவோ , ஆர்வம் கொள்வதோ கூடாது என்ற பூச்சுகளையெல்லாம் ஏற்கவே தேவையில்லை. அவை நம்மை எங்கும் ஈட்டுச் செல்லாது , வெறும் மண் மேல் நிற்கும் மனிதர்களாக்கி விடும். அது ஏற்படுத்தும் வெறுமை நம்மை தனிமனிதனாக உலகை நோக்க செய்யும். பிறகென்ன தனிமனிதர்களாகி இருப்பு சார்ந்த துயர் பேசுவோம்.

கோபல்ல கிராமம் - அன்னம் வெளியீடு



நான்தான் நீ என்பது ஒரு உண்மை: தேவதேவன்




குறிப்பு-வடபழனியிலுள்ள ஒரு பழைய புத்தக கடையில், நெய்வேலியிலிருந்து வெளிவந்த வேர்கள் சிற்றிதழின் 1999 ஆம் ஆண்டு இதழ் கிடைத்தது.

அந்த ஆண்டு சிற்பி இலக்கிய விருது கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அப்போது அவரிடம் வேர்கள் அமைப்பினரால் எடுக்கப்பட்ட நேர்காணல் இது.

வேர்கள் இதழுக்கு நன்றி.

---------------------------

இவ்வான்டின் 'சிற்பி இலக்கிய விருது' பெற்றுள்ள தேவதேவனின் இயற்பெயர் பிச்சுமணி கைவல்யம்.வயது 51.ஆசிரியராக பணிபுரிகின்றார்.அம்ருதா , அரவிந்தன் என்று இரண்டு குழந்தைகள். பள்ளியிறுதிவரை படித்தபின் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார்.வேலை கிடைக்காத்தினால் தன் வீட்டின் ஒரு பகுதியிலே அச்சகம் வைத்து நடத்தினார்.அதிகமான அறிமுகம் இல்லாத நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் வீட்டை பிணையாக்கினார். கடன் வாங்கிய நண்பர் ஒடிப்போனபின் வங்கி அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு , நீதி மன்றத்திற்கு அலைந்து இறுதியாக பெருந்தொகை கொடுத்து தன் வீட்டை பிணையிலிருந்து மீட்டார். இது போன்ற சம்பவ அடுக்குகளால் பின்னப்பட்டது தேவதேவனின் வாழ்க்கை.

கலை, இலக்கியம் , சமூகம் , வாழ்க்கை என்று பேசும்போது தன்னை ஒரு பெரும் கலாச்சார சக்தியாக , அசாதாரண மனிதனாக உணர்பவராகவும் , உணர்த்துபவராகவும் காணப்படும் தேவதேவன் , தன் இளமைக் காலத்தில் அரசியல் மற்றும் புரட்சி பேசும் தன்னையொத்த இளைஞர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுவரும் , ஆகர்ஸிக்கப்படுபவருமான ஆளுமையை உடையவர். 70களில் தூத்துக்குடியில் உள்ள சில ஆர்வமுள்ள இளைஞர்களால் நிறுவப்பட்ட 'தர்சனா' திரைப்படக் கழகத்தின் பிதாமகர்.மிகப் பிரம்மாண்டமான அளவில் நடந்த புத்தகத் திருவிழா நிகழ்வின் மிக முக்கிய சக்தியாக இருந்தவர்.கலாச்சாரம் குறித்த பல கனவுகளை உடைய இவர் ஒரு கவிஞனாக எஞ்சியது ஒர் இயற்கை நிகழ்வு என்றுதான் கூறவேண்டும்.

இன்று கவிதையை மூச்சுக்காற்றாய் கொண்டிருக்கும் தேவதேவன் இதுவரை பத்து கவிதை தொகுதிகள் வெளியிட்டிருக்கின்றார்.

1.குளித்துக்கரையேறாத கோபியர்கள்(1976)
2.மின்ன்ற்பொழுதே தூரம் (1981)
3.மாற்றப்படாத வீடு (1984)
4.பூமியை உதறியெழுந்த மேகங்கள் (1990)
5.நுழைவாயிலிலே நின்றுவிட்ட கோலம் (1991)
6.சின்னஞ்சிறிய சோகம் (1992)
7.நக்ஷ்த்திர மீன் (1994)
8.அந்தரத்திலே ஒர் இருக்கை (1995)
9.நார்சிசஸ் வனம் (1996)
10.புல்வெளியின் ஒரு கல் (1998)

'கவிதை பற்றி' என்னும் (உரையாடல்) தொகுப்பு வெளியிட்டிருக்கிறார்.

கவிதைகள் தவிர சிறுகதைகள் , நாடகம் , திறனாய்வு கட்டுரைகள் , மற்றும் மொழிபெயர்களும் செய்திருக்கிறார்.

கவிதைகள் மீது கொண்ட தாகத்திற்கு சற்றும் தணியாத தாகத்துடன் தன் வீட்டைச் சுற்றிலும் , பள்ளி வளாகம் முழுவதிலும் மரம் வளர்த்து வருகிறார்.

உணவு மற்றும் உடை விஷயங்களில் எளிமையாகவே வாழ்கிறார்.ஆர்வத்துடன் உரையாடலில் ஈடுபடுகிறார். தன் கருத்துகளை வற்புறுத்திச் சொல்லி தயங்கிவதில்லை.மழுப்பலற்ற நேரடியான பதில்களையே தருகிறார்.

வேர்கள் சார்பாக தேவதேவனை பேட்டி கண்டவர் எழுத்தாளர் மோகனன். அப்பேட்டியினை ஒட்டி சில
துனைக்கேள்விகள் : பா. சத்தியமோகன்.

'கவிஞனாக' உருவெடுத்த இளமைக் காலம் பற்றி....

வறுமையும் அறியாமையும் நிறைந்த ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய இளமைக்காலம் ரொம்பத் துக்கம் நிறைஞ்சதா இருந்தது. பிறந்த்திலிருந்தே நான் அப்படித்தான் இருந்திருக்கேன். காரணம் புரியாத ஒரு துக்கம். பிறகு பொருளாதார ரீதியில் உள்ள கஷ்டங்கள். படிப்பைத் தொடரமுடியாத நிலை.இந்த நிலைமையிலேயே கலைகள் மீது எனக்கு ஏற்பட்ட ஆர்வமும் மோக பங்கமும்... இதுதான் சுருக்கமான எனது இளமைக்காலம்.

'காரணம் புரியாத துக்கம்' என்கீறிர்கள், உங்கள் பெரும்பாலான கவிதைகளில் அதை உணர முடியாது.அந்த இனம் புரியாத துக்கத்தின் தொடர்பாகவோ, வேறு வடிவமாகவோ உங்கள் கவிதைப் படைப்புகளைக் கருத இடம் இருக்கிறதா?

எனது துக்கத்தை அவதானிக்கும் விதமாகவும் அதிலிருந்து விடுதலை பெறுமவிதமாகவும் அந்தக் கவிதைகள் உருவாகியுள்ளன. விடுதலையடைந்த மனிதனின் உற்சாகமும் பரவசமும் என்னுடைய கவிதைகளில் உண்டு . வில்லியம் பிளேக் தன்னுடைய கவிதைகளை வகைப்படுத்தும் போது கண்டைந்த ஆனந்தமும் துக்கமும்("Songs of Innocence & Songs of Experience) என்னுடைய கவிதைகளில் உள்ளன.


தமிழின் நீண்ட கவிதை மரபு, சங்கக் கவிதை, மரபுக் கவிதை பற்றி...

தமிழுக்கு நீண்டதும் தனித்துவமானதுமான ஒரு கவிதை மரபு இருக்கிறது. இயற்கையோடு நெருங்கி வாழ்ந்த காலத்தைக் காட்டுகின்ற சங்க காலப் பாடல்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவை. தாங்கள் வெளிப்படுத்த வேண்டிய விஷயங்களுக்கு அவர்கள் இயற்கையப் பயன்படுத்திய விதம் இன்றைய நவீன , பின் நவீனத்துவக் காலத்திலும் மறுக்க முடியாத சில கூறுகளைக் கொண்டுதான் இருக்கிறது. திருக்குறள் தோன்றுகிற சமயத்தில் உலகத்தின் எந்த மூலையிலும் இவ்வளவு உயர்வான - கவிதைச் செறிவிலும் கூட - இவ்வளவு உயர்வான ஒரு நீதி நூல் தோன்றியதில்லை என்று அறிகிறோம். கவித்துவ உத்தேசமில்லாமலேயே எழுதப்பட்ட நீதிநூலில் கவிதையின் முக்கிய கூறான மனவெழுச்சி எவ்வளவு தூரம் வெளிப்பட்டிருக்கிறது என்பதுதான் நாம் வியந்து கவனிக்க வேண்டிய விஷயம். நீதியுணர்வுக்கு அடிப்படையானது இந்த மனவெழுச்சி என்பதுதான் காரணம் என்று தோன்றுகிறது . அடிப்படைகளைத் தொட்டுள்ள படைப்பு திருக்குறள்.

தானாடுகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்தம் மாலும் என்நெஞ்சு....


இது மாதிரி நிறைய குறள்களில் காணப்படுகிற உணர்வெழுச்சிகளை "ரொமாண்டிக்" தனமானது என்று தள்ளிவிடக் கூடியது நவீனக் கவிதைக் கோட்பாடு. ஆனால் அது வள்ளுவருக்குத் தெரியாது. அவருக்குத் தெரிஞ்சது அவரது ஆர்வமும் மனவெழுச்சியும் மட்டுத்தானே. இன்றைக்கு இதுபோன்ற ஒரு "ரொமான்டிக்" கான மனவெழுச்சியில்தான் மிக உயர்ந்த ஒரு யதார்த்த நிலையை நாம் அறியமுடியும் என்று நான் என்னுடைய உரையாடல்களிலும் , கவிதைகளிலும் எழுதி உணர்த்தி உள்ளேன். இன்றைக்கு பின் நவீனத்துவம் கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும், இருக்கமுடியும் என்கிறது. மறைந்த "குரு" நித்ய சைதன்ய யதி போன்றோர்கள் பேட்டி (காலச்சுவடு) மூலமும் உறுதிப்படுத்தப்படுகிறது . ஜெயமோகன் தனது ஆழ்ந்த படிப்பு மற்றும் அவதானங்கள் மூலமாக இதை ஒரு நூலாக எழுதியுள்ளதையும் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இது முக்கியமான ஒரு பாய்ச்சல்.

உணர்ச்சி மிகையைத் தவிர்க்க வேண்டும் என்பது நவீனத்துவக் கோட்பாடு. அதை (உணர்ச்சியை) அறிவுத்தளத்தில் நாம் யோசிக்கவேண்டும் அல்லவா?

எழுத்தில் உணர்ச்சி மிகையைத் தவிர்க்க வேண்டும்தான். நாம் தர்க்கத்திற்கு அடிப்படையாய் உள்ள "உணர்ச்சி மிகை" யை இப்பொழுது வற்புறுத்துகிறோம். சொற்களிலும் அது ஒரு இசையாக வெளிப்பட்டால் நல்லது என நினைக்கிறோம்.

ஒரு நுண்பொருள் உருவத்தை உருப்பெருக்கிக் காட்டுற மைக்ராஸ் கோப்பாலத்தான் காணுதல் , புரிதல் சாத்தியமாகிறது மாதிரி .காவிய இலட்சனங்கள்ல ஒன்றுதானே அதீதக் கற்பனை. அதற்கு எத்தகைய மனவெழுச்சி வேனும்னு நாம் யோசித்துப் பார்க்கணும்.நாம கவிதை மூலமா கவிஞன் மூலமா அடைய வேண்டியது அந்த மனவெழுச்சிதான்.அதை வடிகட்டி நாம கண்டமைகிற அறிவு எல்லாம் கவிதையில் இரண்டாவது விஷயம்தான் .அந்த அறிவிலும் அழகும் அற்புதமும் உண்டுங்கிறதையும் மறுக்க முடியாது .

இன்றைய கவிஞன் பிரஞ்சு மற்றும் ஐரோப்பியக் கவிதை மரபுகளை அறிந்தவன். நமது சங்க இலக்கியம் , பக்தி இலக்கியம் , காவியங்களை அறியும் போது ஆச்சிரியப்பட பல விஷயங்கள் இருக்கின்றன, என்றாலும் கவிதையில் உலக இலக்கிய வாரிசாகத்தான் அவன் வெளிப்பட வேண்டும்.அப்படி வெளிப்படும் போதுதான் அவன் இன்றைய கவிஞனாக இருக்க முடியும். இதையும் மீறி அவன் கவிதையில் ஒரு கலாச்சாரம் , மரபு , இனத் தனிமை , தவிர்க்கப்பட முடியாமல் இடம்பெற்றிருக்குமானால் - அப்போதுதான் அதை யாரும் குறை சொல்ல முடியாது.

கவிதையில் உலக இலக்கியத்தின் வாரிசாகத்தான் இன்றைய கவிஞன் வெளிப்பட வேண்டுமென நீங்கள் கூறுவது எதன் பொருட்டு? பரந்துபட்ட வாசிப்பு மற்றும் உள்வாங்குதல் , உணர்தலின் அடிப்படையிலா?

கவிதை அத்தகைய ஒரு கலை என்று நான் கருதுவதால்.

புதுக்கவிதைக்கு , 60 களில் இருந்த உத்வேகம் இப்போதும் உள்ளதா?

பாரதியும் , பாரதிதாசனும் இலகுவான யாப்புகளைப் பயன்படுத்தினார்களே ஒழிய யாப்பைத் துறக்கவில்லை. புதிய விஷயங்களுக்கு வந்தாங்க.ஆனாலும் முற்றிலும் புதிய விஷயங்களை யாப்பிலே சொல்ல முடியுமாங்கிற சந்தேகம் இருந்தது. இவர்களால நவீனக்காலக் கவிஞர்களா ஆக முடியாம இருந்தது. இந்தச் சமயத்துல நவீனக் கவிதையை ஒரு இயக்கமா சி.சு.செல்லப்பா ஆரம்பிக்கவும் தமிழ்க் கவிதையுலகில ஒரு எழுச்சி , சுறுசுறுப்பு பிறந்தது. எல்லா எழுத்தாளர்களும் ஒரு திருவிழாக் கொண்டாட்டம் மாதிரி புதுக்கவிதைகள் எழுத ஆரம்பிச்சாங்க, அதேதான் இன்னைக்கும் தொடருது. அதில எந்த மாற்றமுமில்ல.60கள்ல இருந்த அதே மாதிரி உத்வேகம் இன்னமும் இருக்கவே செய்யுது.


ஒரு கவிதை உங்களுக்குள் எவ்வாறு உருவெடுக்கிறது?

ஒளி வீசுகிற ஒரு காட்சி என்னை வசீகரிச்சு ஒரு படிமமா எழுதத் தூண்டியிருக்கு.

நெஞ்சு கனத்து கண்ணீரை வர வைக்கிற தனிமையில் அப்போ காணுற காட்சி, என்னை மொழி பெயர்க்க உதவுற படிமமா உதிவியிருக்கு.

துக்கம் நிறைந்துவிட்ட மனநிலையோட அந்த் வேதனையின் துக்க காரணத்தை ஆராய்கிற விதமா நான் உட்கார்ந்திருவேன்

அப்போ ஒரு தாளம் இசையோடு கூடிய ஒரு வாக்கியம் , எனக்கு நானே பேசிக்கொள்ள உதவுவது போல வரும். அந்தச் சொல்லே அதற்கான அடுத்த அடுத்த சொல், படிமம் எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு வந்து , எப்படி எழுதி முடித்தேன் என்று பின்னால் வியக்கும்படியான , என்னை மீறிய ஒன்றாக அது எழுதப்பட்டிருக்கும்.

என் மனதில் திரும்பத் திரும்ப வந்து மோதும் தீவிரமான படிமங்களை நான் தியானித்துக் கோர்த்தும் எழுதுவதுண்டு.நெடுங்கவிதை முயற்சிகளுக்கு இந்த்த் தியானம் அவசியம்.

உங்களது கவிதை அனுபவம் மிகவும் சிகரத்தில் இருக்கிறதா தோணுது. அதாவது எழுத உட்காருதல் என்கிற ஒரு புறச்செயலைத் தவிர , துக்கம் நிறைந்த அந்த மனோவேளை உங்களை எழுத வைப்பது உன்னதம்தான். அப்படியெனில் அந்தப் பொழுதிற்காகக் காத்திருப்பதும் நிகழ்கிறதா? நீங்கள் விரும்பி எழுத முற்படுவது என்ற நிலையை நீங்கள் மறுப்பதாக எடுத்துக் கொள்ளலாமா? இந்தக் கேள்வியைக் கவிதை மனோபாவ ஆளுமை குறித்த கேள்வியாகக் கூடக் கருதலாம்.

'அந்த இடத்தை' - அதுதான் எனது 'மூட்' , எனது 'யதாஸ்தானம்' என்று கருதுகிறேன். எல்லா வேலைகளையும் மளமளவென்று முடித்துவிட்டு அந்த இடத்திற்கு ஒவ்வொரு நாளும் தவறாமல் போய் இருக்கவே விரும்புகிறேன். மற்றப் பொழுதுகளில் குழந்தைகளுடனும் , நண்பர்களுடனும் , ஆர்வத்துடன் ஈடுபடமுடிகிற பிற தொழில்களிலும் இருக்க விரும்புகிறேன். நான் காத்திருக்கலை. ஆனா நான் எப்போதும் என்னுடைய இருப்பிடத்திற்கும் போக விரும்புகிறேன். அங்கிருந்துதான் நான் கவிதை எழுதறேன். அங்கிருப்பது தண்ணீரில் இருப்பது மாதிரி.கவிதை எழுதுவது நீர்ப்பூவைப் பறிப்பது மாதிரி.

நீங்கள் எழுத ஒன்றுமில்லாத வெறுமையை உணரும் போது என்ன செய்கிறீர்கள்?
பெரும் படைப்புகளைத் திட்டமிட்டிருப்பவர்களிடம் நீங்கள் இக்கேள்வியைக் கேட்க முடியாது. நான் கவிஞன் என்பதால் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். எழுத ஒன்றுமில்லாமல் இருக்கும் வெறுமையை நான் துக்கமாக ஆக்கிக் கொள்வதில்லை."கதே" யைப் போல , வாசிப்பிலும் , மானுடப் பிரச்சனைகளை அன்றாட நிகழ்வுகளில் சிந்திப்பதிலும் செலவிடுவேன்.


பாரதி பாரதிதாசனுக்குப் பின் அவர்கள் அளவுக்குச் சொல்லக்கூடிய கவிஞர்கள் உருவாகாதது ஏன்?


இருவருமே தங்களது தார்மீக ஆவேசத்தை சமகாலத்தோடு பிணையும்படி விட்டார்கள்.இன்றைய கவிஞர்களுக்கு அத்தகைய ஆவேசமோ சமர்ப்பணமோ இல்லை. ஆனாலும் ஒன்று சொல்வேன்: முதல்ல கவிதையோட தளம் என்ன? எல்லாக் கலைகளோட உச்சத்தைத்தான் கவிதைன்னு சொல்றோம்கையில கவிதைங்கிற கலை தன்னியல்பாகவே எதற்காகத் தோன்றியிருக்குன்னு நாம யோசிக்கணும். பாரதி, பாரதிதாசன் இரண்டுபேருமே தங்களுடைய தார்மீக ஆவேசத்தை முறையே தேசீயத்திலும் , தமிழ்த் தேசியம் மற்றும் சமூகச் சீர்திருத்தம் ஆகியவற்றிலும் பெரும்பாலும் செலவிட்டார்கள்.பாரதிதாசன் அழகின் ரகசியம் , குடும்பம் என்று நுணுகிச் சென்றது போலவே , பாரதியும் ஆன்மிகத்திற்குள் நுழைந்தார் , அவை நமது வேதங்கள் , உபநிஷத்துக்கள் ஆகியவற்றின் எதிரொலியாக அமைந்ததே அன்றி, ஜீரணித்தமையால் ஏற்பட்ட வாழ்வனுபவங்களாக வரவில்லை. தாகூருக்கு அவரது ஆளுமையின் வெளிப்பாடாகவே அவை வெளிவந்தன. பாரதி , பாரதிதாசன் இருவருமே குறிப்படத்தக்க நம் கவிஞர்கள் என்பதோடு அவர்களது தார்மீக ஆவேசத்தை நாம் சந்தேகப்படுவதன் மூலமே , அதாவது துருவுவதன் மூலமே நம்மிலும் வளர்ச்சி சாத்தியமாகும் . இன்று பின் நவீனத்துக் கவிதை பிரமளில் தொடக்கம் கொள்கிறது என ஜெயமோகன் நிறுவுகிறார் . பிரமளின் மொத்தப் படைப்புகளையும் கொண்டு பார்த்தால் தமிழுக்குக் கிடைத்த அடுத்த கவிஞர் அவர் என்று நாம் காண முடியும் முந்தைய கவிஞர்களை நாம் சந்தேகப்படுவது- துருவுவது போலவே நாம் பிரமிளையும் ஆராய வேண்டும். புறங்காரணங்களான அரசியல் மற்றும் பண்பாட்டு நெருக்கடிகள் ஒருவனை வெகுதூரம் வழி நடத்துவதில்லை.மழைக்காக அண்ணாந்தவன் எல்லையற்ற வானத்தைக் கண்டடைவதற்கு அவனுக்குள் ஏற்கனவே தார்மீக எழுச்சி பதுங்கியிருந்திருக்க வேண்டும் அதுவும் போதிய வீரியத்துடன்.


கவிதைகளில் நீங்கள் குறிப்பிடும் தார்மீக எழுச்சி ஒரு கவிஞனுக்கு இயற்கையிலேயே இருக்க வேண்டுமென்கிறீர்கள்?அதை ஒரு முக்கியமான கூறுபாடாகக் கருதுகீறிர்களா?

ஆமாம்.இல்லாவிட்டால் அவன் யார்? அவன் எதற்காக எழுதனும்? அவன் தன் கட்சிக்காகவும் , சாதிக்காகவும் கூச்சலிடுவது எழுத்தாகிவிடுமா?


கவிதை என்பதற்கு அடிப்படையான அழகியல் , உள்ளடக்கக் கோட்பாடு வடிவம், உத்தி பற்றி.

அழகியல் அடிப்படை.ஏதாவது ஒரு உணர்வுதான் உள்ளடக்கம். அந்த அழகும் உணர்வும் ஒவ்வொரு கவிதையிலும் தனக்கே ஆன ஒரு முழுமையைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.அதுதான் அந்தக் கவிதையோட வடிவமாயிடுது.ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். உணர்வு என்பதே தன்னளவில் மிகத் தீவிரமான ஒன்றுதான்.அந்தத் தீவிரத்தின் மூலமே எதையாவது ஒன்னை வெளிபடுத்துகிறோம். அல்லது கண்டடைகிறோம்.அதைக் கவிதை என்கிறோம். கவிஞனோட போதமும் தீவிரமும் தாங்கள் வெளிப்படத் தோதான உத்திகளைத் தாங்களே தேடி எடுத்துக் கொள்கின்றன.



உங்களது 'நக்ஷ்த்ரமீன்' தொகுப்பில் 'உள்ளும் புறமுமாய்ச் சில படிமங்கள்' கவிதையில்


நிலா ஒளிபோல அகண்டது என் இதயச்சதை
சின்னஞ் சிறு இடையூறுக்கும் சிலந்தி வலைப்போல அது துடிக்கிறது.
சின்னஞ் சிறு தூண்டலுக்கும் நிலாவினைப் போல் அது பாடுகிறது
எப்போதும் எனக்கு ஒரே வேலை
இந்த இதயத்தை பழுதுபார்க்கும் வேலை


என்கிறீர்கள். கவிதையில் நீங்கள் குறிக்கும் 'நான்' 'எனது' அனுபவங்கள் வாசிக்கும் போது வாசகனுக்காகிறது. சமூகத்தைச் சென்றடைய உங்களது உத்திமுறையாக இதுபோன்ற கவிதைகளை எடுத்துக்கலாம்னு நினைக்கிறேன்.
ஏனேனில் அறியப்பட வேண்டிய கவிஞர்கள் மத்தியில் நீங்கள் உணரப்பட வேண்டிய கவிஞரா இருக்கிறதால இப்படி கேட்கிறேன்?


அது உத்திமுறை என்பதல்ல. நான்தான் நீ என்பது ஒரு உண்மை.ஆகவே நாம் நாம அனுபவத்தைச் துணிந்து சொல்லலாம்.அது ஆழமான அனுபவமாக இருப்பின் எல்லோரது அனுபவமாகவும் விரிவுகொள்வது இயற்கை.


தமிழ்க் கவிதையின் எதிர்காலம் பற்றி...

நான் யோசிக்கலை. நடந்துகிட்டிருக்கிறது பற்றி யோசிச்சிருக்கேன்.
கவிஞனோட சக்தி காலத்தை அழிச்சு புதுப்பிக்குது சொற்கள்ல புதுப்படிமங்களை உருவாக்குது. நம்ம கவிஞர்கள் தங்கள் கவிதை மீதே நம்பிக்கையில்லாதவர்கள் தாங்கள் கவிஞர்கள் என்பதன் மீதும் நம்பிக்கை கிடையாது. திராணி இல்லாதவர்கள் "கவிதை என்பது காகிதத்தில் எழுதப்படும் எழுத்துக்களே " என்று ஒரு அமைப்பியல்வாதி சொல்லிவிட்டால் உதறலெடுக்கக் கூடியவர்கள்.


சுற்றுச் சுழல் அக்கறை பற்றிய உங்கள் பின்ணணி என்ன?

சுற்றுச் சூழல் அக்கறைங்கிற மாதிரியான எந்த ஒரு பிரக்ஞையோடயும் நான் எதையும் எழுதியதில்லை. மனம் பெரியதாய் வேதனை கொண்ட ஒரு நிலையில், கையறுநிலை போன்ற ஒரு நிலையில் நெஞ்சப் பொருமலாய் வெளிவந்த ஒரு வரிதான் "ஒரு மரத்தை கூடக் காணமுடியவில்லை" என்ற வரி.அதைத் தலைப்பாக வைத்து அந்த மனநிலையோட நான் எழுதிமுடித்த அந்தக் கவிதையில இருக்கிறது, என் மனசோட ஒரு நிலச்சித்திரம்தான்.அதே மாதிரிதான் "அகழி" நெடுங்கவிதையும்."அகழி" யோட படிமங்கள் என் மனதில் உதித்திருந்த போது உலகில் ஓசோன் பிரச்சனை எழுந்திருக்கவில்லை.மேலும் இயற்கையின் முன்பு என் மனம் கொள்கிற பரவசத்திலிருந்து என்னோட பல கவிதைகள் பிறந்திருக்கு."அகழி" ஒரு துஷ்டலோகம்(Dystopia)

திராவட இயக்கம் இடதுசாரி இயக்கம் தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சியில் போதுமான தாக்கம் செலுத்தி உள்ளதா?

நாம பரிசீலித்தாக வேண்டிய நிலையில மறைமுகமான அதனோட தாக்கம் தமிழ் நவீன இலக்கியத்தை நன்றாக பாதிச்சிருக்கவே செய்யுது. அழகியலோடு முற்போக்கான அம்சம் மற்றும் அறச் சீற்றத்திற்கு முதன்மை கொடுத்து ஒரு தேர்வுடன் இலக்கியம் அதாவது முற்போக்கு இலக்கியம் தன் பங்கை அளித்திருக்கவே செய்யுது. அதே போலதான் திராவிட இயக்கத்தின் உள்ளார்ந்த பலத்தை அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களாலும் கூடச் சீரழிக்க முடியாததற்கு அதன் அறம் தான் காரணம்.

ஓரளவுக்கு படிக்கும் போக்குடைய வாசகர்களைத் தன்வயப்படுத்தி இதற்குமேல் போகாதே என அணைகட்டுவது போல் சட்டாம்பிள்ளைத்தனம் செய்யும் "போக்குகள்" பற்றி...

காலத்தை யாராலும் அணைபோட முடியாது. உள்ளேயிருந்து கொண்டே அவர்களைக் கேள்வி கேட்கிற இளைஞர்கள் அங்கேயும் தோன்றுவார்கள். ஒரு அமைப்பில் இருந்து கொண்டு , 'தலைவர்கள்' பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிற இளைஞர்கள் மிகவும் பலவீனமானவர்கள்தான். ஒருவன் பொதுவான ஒரு சமூகச் செயல்பாட்டுக்காகவே ஒரு குழுவை நாட வேண்டும்.கருத்துலக மனப் பாதுக்காப்புக்காக நாடுவது பெரிய அவலம். அத்தகைய சுகந்திரமற்ற இளைஞர்கள் சுயவாசிப்பு மூலம் நல்ல இலக்கியங்களை அடையாளங்காணமுடியாத ஊனத்தை அடைந்துவிடுகிறார்கள்.அவர்கள் விடுதலை பெற வேண்டும். அதற்கு படைப்புகள் பற்றிய ஆழ்ந்த விரிவான விமிர்சனங்களும், ஆய்வுகளும் நமக்குத் தேவை.

திராவிட இயக்கப் போக்கினால்தான் தமிழின் நவீன இலக்கியத்திற்குப் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை`என்பது பற்றி...

அப்படியா? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அமைப்பியல் , பின் அமைப்பியல் நோக்கிலான விமர்சனங்கள் பற்றி.

அது எழுப்பிய பரபரப்பு இப்போது ஓய்ந்துவிட்டதென நினைக்கிறேன். உண்மையைக் கண்டடைவதற்கான வழிகளை வித்தியாசப்படுத்தவது அந்த்த் தத்துவங்களோடு உள்ள கலைச் கலைச் சொற்கள்தான்.இந்தக் கலைச் சொற்களை ஒருவன் ஜீரணித்த பிறகு உண்மையைக் கண்டடையும் முறையில் ஒரு சுலபம் ஏற்பட்டிருக்க வேண்டும்.அந்தக் கலைச் சொற்களை உபயோகிக்காமலேயே வேகமாகத் தன் தொழிலில் இறங்க வேண்டும்.முடிவைத் தவறின்றிக் காண முடிய வேண்டும். தவறுகள் நேர வாய்ப்புகள் வைத்திருக்க கூடாது அந்தத் தத்துவம். ஆனால் பின் அமைப்பியல் இன்றும் வளர்ந்து கொண்டு வருவது தெரிகிறது.


அமைப்பியல் , பின் அமைப்பியல் பூர்வமா உங்களது ஒரு நல்ல கவிதை தீவிரமா விமர்சிக்கப்பட்டு நிராகரிக்கப்படும்போது உங்களது எதிர்வினை என்னவாக இருக்கும்?

சிரிப்பேன்.

எழுத்தாளன் பணி எழுதுவதோடு நின்றுவிடுகிறதா? உங்கள் எழுத்து மூலம் நீங்க தெரிவிக்க விரும்புவது?

எழுத்தாளன் , அவன் எழுதும் எழுத்தோடு தொடர்புடையதாகத்தான் அவன் செயல்பாடும் இருக்கும். பெரிய போராட்டங்களிலோ, தீவிரமான ஒரு இயக்கத்திலோ அவன் இல்லாம இருக்கலாம். " பாவனை" தான் பொல்லாதது. Fancy ஆக ஒன்றைச் செய்யாமலிருப்பது நல்லது.என் எழுத்து இன்றைக்கு வாழ்ற ஒரு மனுஷனோட ஜீவனை வெளிப்படுத்துற நோக்கங் கொண்டதாக நினைக்கிறேன்.

தமிழ் இலக்கியச் சூழல் அதன் குழு மனோபாவம் பற்றி...

"கெட்டதைப் பார்க்காதே, கெட்டதைப் பேசாதே , கெட்டதைக் கேளாதே " ங்கிற அறிவுரைக்குச் செவிசாய்த்தவர்கள் மாதிரி இருக்கிறோம்.தமிழ் இலக்கியச் சூழல்ல குழு மனோபாவம் இருக்கிறதுங்கிறதுக்கான சான்றாக உங்க கேள்வியை எடுத்துக்கிடறேன். அடுத்தது நீங்க இந்தச் குழு மனோபாவத்தை ஒரு எதிர்மறை அம்சமா அதாவது ஒரு அவலமாக் கண்டுதான் கேக்கிறீங்க இல்லையா? சரி . அப்புறம் இந்த குழு மனோபாவம் எங்ககிட்ட இருக்குங்கிறதை யாராவது ஒத்துக்கிடாறாங்களா? இல்லை. அப்படின்னா நீங்க நெனைக்கிற குழுமனோபாவம் உங்கள் மனப் பிராந்தி தானா? இல்லை. அப்படீன்னா அந்தக் குழு மனப்பான்மையினால நிலவுற தீமைகள் என்னன்னும் உங்களுக்குத் தெரியும் . அதனாலதான் கேக்கறீங்க ? இந்தக் குழுமனப்பான்மைக்கு யார் காரணம்? எது காரணம் ? எத்தனை மனிதர்களுக்கு இது பற்றி அக்கறை இருக்கு? எந்த , யாருடைய சவுகரியத்தின் பொருட்டு இந்தக் குழுமனோபாவம்? இந்தக் கேள்விகளுக்குப் பின்னணியில் இருப்பது மிகவும் அருவருப்பான மனிதர்களாலான ஒரு சூழலின்றி வேறு என்ன? ஆனால் இதைப் பற்றிப் "பேசக் கூடாது, கேட்கக் கூடாது, பார்க்கக் கூடாது" ஆகவே திருட்டுத் தனமாக அவைகள் பேசப்படுகின்றன.அறியாத மனிதர்கள் ஒருத்தரும் இல்லை.

மலையாளத்தில் , கன்னடத்தில் உள்ளது போல தமிழில் வெகு ஜன இதழ்கள் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் போனது ஏன்?

நம்ம வெகுஜன இதழ்கள் தரத்தில் பின் தங்கியிருப்பதுதானே காரணம்.நம்முடைய கலாச்சாரச் சக்திகள் சிதறுண்டு கிடக்கு. அவற்றை ஒன்று சேர்க்கிறது பற்றியும் வாசகத்தரத்தை உயர்த்துகிறது பற்றியும் நாம் சிந்திக்கணும்.

நல்ல படைப்புகள் கண்டுகொள்ளப் படாமல்போவது , தமிழில் இலக்கிய உணர்வு போதிய அளவு இல்லாமல் போனது குறித்து...

திரும்பவும் நம்ம சூழல் குறித்தே கவலை தெரிவிக்கிறீங்க. நானும் உங்களோட இந்தக் கவலையைக் பகிர்ந்துகிடறேன்.

கவிஞனாக இருப்பதற்காக வருத்தப்பட்டது உண்டா?

இல்லை. இது மகத்தான பேறு. கலைஞர்களிலேயே பெரிதும் கவுரவிக்கப்படத் தகுந்தவன் கவிஞனே என்னும் பெருமிதமும் உண்டு.


குடும்பச் சூழல் எழுதுவதற்கு ஊக்கம் அளிக்கிறதா?

"குடும்பச் சூழல் தவிர்க்க முடியாதது. நான் எழுதுவதும் தவிர்க்க முடியாதது" என்ற நிலை மாறி இன்று எனது நண்பர்களும் குடும்பமும் மிகவும் ஊக்கமளிப்பதான சூழல் நிலவுகிறது. நான் தான் எழுதிக் குவிக்கவில்லை.

படைப்பாளியே பதிப்பாளராகவும் இருந்ததால் ஏற்பட்ட நன்மைகள் - பாதங்கள்.

என்னைப் பற்றிதானே கேட்கிறீங்க. என்னோட இரண்டு புத்தகங்கள் தவிர மற்ற ஒன்பதையும் நானே வெளியிட்டிருக்கிறேன். காரணம் பதிப்பாளர் கிடைக்காததாலதான்.
உரிய நேரத்தில் புத்தகம் வெளிவருகிறதுங்கறதுதான் நன்மை.ரொம்ப நட்டத்திற்குப் பிறகாவது இன்றைக்கு எனக்கு நல்ல விற்பனையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். இந்தத் தொழில் எனக்கு இடைஞ்சலாகத்தான் இருக்கு.


நிதிச் சுமையை மீறி இத்தனை தொகுப்புகள் வெளியாக உதவியது லெளகீக நெருக்கடியைப் புறக்கணிப்பதில் வெற்றிபெற்றதாலா? அதாவது.... நிதிச்சுமைக்கு எதிர்த்தட்டுல இருக்கிற குடும்பம் இரண்டையும் சமமா பிடிக்கிற தராசு மனோநிலை பற்றி.......

எனது முதல் இரண்டு தொகுப்புகளும் எனது குடும்பம் ஆரம்பிப்பதற்கு முன்னே வெளிவந்துவிட்டன. அவை வெளிவர ஒரு நண்பரின் உதவி இருந்தது. அந்த முதலீட்டைத் தொடர்ந்து வருகிறோம். ஒவ்வொரு புத்தக வெளியீட்டின் போதும் கணிசமான தொகை போட்டுத் தொடர வேண்டியுள்ள அவலமே இன்னும் உள்ளது.புத்தக வெளியீடு - குடும்பம் இரண்டும் ஒன்றையொன்று எந்தவிதத்திலும் பாதிக்காத ஓர் ஒழுங்கை நான் கடைப்பிடித்துவருவதுதான் நான் செய்யும் மிகப்பெரிய ஒரு தீரச் செயல்.

சமகால எழுத்தாளர்களில் நம்பிக்கையூட்டுபவர்கள் யார் யார்?

பெரிய சாதனைகளை நிகழ்த்தக்கூடியவராக இப்போதைக்கு ஜெயமோகன் தெரிகிறார்.மற்றவர்கள் இவ்வளவு திடமாகக் கூறமுடியாததால் பெயர்களைத் தவிர்க்கிறேன். "விஷ்ணுபுரம்" நாவலைப் பற்றி பேர் பெற்ற எழுத்தாளர்கள் பலர் கூறிய அபிப்பிராயங்களை வைத்துப் பார்க்கும்போது தமிழ்ப் படைப்பாளிகளின் வாசிப்புத்தரம் மிக மட்டமாக உள்ளது என்பதைத்தான் அறிய முடிந்தது. இப்படி இருக்கையில் சிறந்த இலக்கிய படைப்புகள் இவர்களிடமிருந்து வருவதும் இவர்களால் தமிழர்களின் வாசிப்புத்தரம் உயர்வதும் எவ்வாறு ஆகும்? திடீரென்று இந்த விஷயம் இப்போதுதான் உறைப்பது போல் இருக்கிறது. தமிழில் பிரஞ்கையுள்ள படைப்பாளிகள் ரொம்பக் குறைவாகவே இருக்கிறார்கள். தங்கள் 'சுய அனுபவத்திலிருந்து திராணியான கலையைப் படைத்தலை' சு.ராவும் கூட தவறவிட்டுள்ளார்.தன்னோட புதிய நாவலில் Text ஐ மட்டும் முன்வைத்தல் போதும் என்கிற நவநாகரிக மோஸ்தர் வலையில் சிக்கி, Text ஒரு மெட்டபெர் அல்லது படிமம் ஆகையில்தான் கலையாகிறது என்பதையே தவறவிட்டிருக்கிறார். அது பத்தாம்பசலித்தனமான கருத்தாகிவிட்டிருக்கிறது அவருக்கு. நமது படைப்பாளிகளிடம் அவர்களையும் மீறி சிறந்த படைப்புகள் தானாக வந்தால்தான் உண்டு என்கிற நிலைதான் உள்ளது. சிறுகதைகளில் , கவிதைகளில் கூட அது சாத்தியமாகலாமேயன்றி நாவல், காவியம் போன்ற செவ்வியல்கலைகளில் இதுவரை சாத்தியப்படவில்லை. கலைபற்றிய ஞானமும் பிரஞ்கையும் ரொம்ப அவசியம் .இன்று நம்ம நிலைமையைப் பார்த்தால், இது கோட்பாடுகளின் காலம்னு சொல்லும்படியா இருக்கு. கோட்பாடுகளோட ஆதிக்கத்திற்கு அகப்படாத வீர்யத்துடன் ஒருவனுக்குச் சிந்திக்க தெரியணும்.


உங்களது கவனத்தில் சிறப்பாக எழுதும் தமிழ்க் கவிஞர்கள் எவரும் இல்லையா?

பெயர் உதிர்ப்பைத் தவிர்க்க விரும்புகிறேன். காரணம் நம்முடைய தமிழ்ச் சுழல். கவிஞனாக இருப்பவனின் மனவெழுச்சியும் ஊக்கமும் விசேஷமானது. அவனுக்கே அது தெரியும். நல்ல படைப்புகளின் மூலம் அவன் தனக்குத் தானே உத்வேக மூட்டிக் கொள்ள வல்லவன். அவனுக்குத்தான் காத்துக்கொள்ள வேண்டிய உணர்வுகள் எவை என்பதும் தெரியும்.


தமிழனின் வாழ்வும் பண்பாடும் தமிழ்ப் புதுக் கவிதையில் போதுமான அளவு பதிவாகி உள்ளதா?

நான் இப்படிச் சிந்திக்கிறதே இல்லை.தமிழனின் தனிவாழ்வு , தனிப் பண்பாடு குறித்து எனக்கு அக்கறையே இல்லைன்னுதான்படுது. மனித வாழ்வு மனிதப் பண்பாட்டுக்கான துடிப்பு , தவிப்பு நமது கவிதைகள்ல பதிவாகியிருக்கான்னுதான் நாம பார்க்கணும். அந்த மாதிரி இனவரைவுகளுக்கு முக்கியம் கொடுத்து எழுதற கவிஞர்கள் இருக்கிறார்கள். ஒரு கோட்பாடு அளிக்கிற சலுகை அவங்களுக்கு கிடைக்குது. சாதி, மதம், இனம், நாடு ஆகியவற்றால் பிளவுண்ட ஒரு மனம் கூட அத்தகைய கவிதைகளை எழுதிவிட முடியும்.

மனித வாழ்வு , மனிதப் பண்பாடுன்னு கவிதையைப் பொதுமைப் படுத்துவது பரந்த மனோபாவம். இருந்தாலும் இயற்கைச் சூழலையும் , பண்பாடு வாழ்வியல் முறைகள் இவற்றிலிருந்து விடுபட்டுப் படைக்கப்படுகிற தமிழ்க் கவிதைகள் - எதிர்கால தமிழ்ச் சமூகம் வாசிக்கிறபோது - எந்த அடையாளத்தை அந்தக் கவிதையில் தேடி அடைய முடியும்? அப்படி ஒரு சிக்கல் இருக்கே? இப்போ புறநானூற்றுக் காலச் சூழல் எப்பேர்ப்பட்ட தொன்மையை நாம் பெற்றிருந்தோம்னு சொல்லுதோ........அதுபோல.........

நம்மீது சுமத்தப்பட்டிருக்கும் அடையாளங்களை உதறுவது தான் முக்கியமானது . அடையாளங்களைப் பற்றி ஏன் கவலைப்படுகிறோம்? அடையாளங்கள் - இயற்கையானவை - இருக்கவே செய்யும், மனிதன் புற அடையாளம் கூட அழிந்து அமானுஷ்யத்தைக் தரிசிக்கிற வேளை கூட உண்டல்லவா? தாம் அடையாளங்களைக் குறித்து சிந்திக்கிறது ஏன்?..... இப்படி நாம் சிந்திக்கிறது அடையாள அழிப்பு, கலாச்சார அழிவு ஆகியவற்றை ஆதிரிக்கிறதும் , கண்டுகொள்ளாமலிருக்கிறதுமான செயலாப்படுது போலிருக்கு, அழிய வேண்டியவைகளை அழிப்பதும் , காக்க வேண்டியவைகளை காப்பதுமாய் நடக்கிற ஒரு சுதந்திர இயக்கத் தோடதான் கவிஞன் இருக்கிறான். சுதந்திரப் போர் அது. 'நாம்' கிறதை மையமாகக் கொண்டது அது.

பள்ளி ஆசிரியப்பணி நிறைவு தருகிறதா?

எழுத்தாளனுக்கு இதைவிட உகந்த வசதியான தொழில் வேறு என்ன இருக்க முடியும்?


சிறுபத்திரிக்கைச் சூழல் , செயல்பாடுகள் பற்றி.......

நிறைய புத்தகங்கள் வருகின்றன. பத்திரிக்கைகள் வருகின்றன. வாசகர்கள்தான் யாருன்னு தெரியல.ஒரு வேளை எத்தனை எழுத்தாளர்களோ அத்தனை பேருந்தான் வாசகர்களோன்னு தோனுது. எழுத்தாளனல்லாத சில வாசகர்களைப் பார்க்க முடிஞ்சபோது அவங்கமட்டும்தான் ஆரோக்கியமான வாசகர்களாக இருக்கிறதும் தெரியுது. அவங்களைக் கண்டு பிடிச்சு பரிசு கொடுத்து கவுரவிக்கலாம்.


இனிவரும் கணிணி யுகத்தில் இலக்கியத்தின் தேவை கரைந்து போய்விடுமா?


இலக்கியத்தின் தேவை அதிகரிக்கும். குறிப்பாக கவிதையின் தேவை.மானுடச் செயல்பாடுகளை வேகப்படுத்துவதுதானே கணிணி.
எதன் முன்னும் சளைக்காத மூளை, கவிதையின் முன் மட்டும் வியந்து நிற்கும். புத்துணர்வு கொள்ளும். கணிணிகளால் மூளையைக் களைப்படையச் செய்யவே முடியும்.


கணினியுகம் வந்தால்கூட கவிதைச் சிகரம் எட்டப்பட முடியாமலே இருக்கும்னு அழகாச் சொன்னீங்க. கவிதையின் முழுப்பொருளும் பரிமாறப்பட்ட ஒரு வாசனையேனும் இப்போதெல்லாம் காணமுடிகிறதா? இந்த இடைவெளிபற்றி உங்கள் கருத்து என்னவாக இருக்கிறது.

நிச்சயமாக நல்லகவிதைகள் அதன் வாசகர்களைச் சென்றடையவே செய்யும். செய்கிறது. இடைவெளிகளைப் பற்றி நாம் கவலைகொள்ளாமல் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். எல்லோரும் புரிந்து கொண்டு கொண்டாட வேண்டும் என்ற எண்ணமும் , கவலையும் வெகுஜனப் புகழ் மீது கொண்ட ஆர்வமாக இருப்பின் அது சரியாகதல்லவா? அதே சமயம் சமூகத்தில் கவிதா உணர்வு இல்லாமையை உணர்கிற துக்கம் - தனிமை - கவிஞனுக்கு உண்டு என்பது வேறு விஷயம். நம்முடைய கஷ்டம் எந்த மாதிரியானது என்பதை நாமேதான் அறிந்து கொள்ள வேண்டும்.


காட்சி ஊடகம் அச்சு ஊடகத்தை வெற்றி கொள்ளுமா?

காட்சி ஊடகம் அச்சு ஊடகத்திலுள்ள வெறுங் காட்சிகளை அகற்றும். வெறும் நிகழ்வுகளை அகற்றும். தத்ரூபமாகக் காட்சிப்படுத்த முயலும் வெறும் விவரணை வர்ண்ணை வரிகளை அகற்றும். மொழியால் மட்டுமே இயலக்கூடியவற்றில் சிந்தனையைச் செலுத்தி உயரிய இலக்கியத்தை மட்டுமே ஊக்குவிக்கும்.

"தேவதேவன்" - பெயர்க்காரணம் ஏதும் உண்டா?

எனது புனைப் பெயரே நான் எழுதிய எனது முதல் கவிதை என்று சொல்லலாம். வேறு காரணம் ஏதுமில்லை.

இசை மற்றும் பிற துறைகளில் ஈடுபாடு உண்டா?

இசை , நடனம் இரண்டும் என்னை ரொம்பக் கவர்ந்திருக்கு. என்னோட இளமைக் காலம் முழுக்க அதிலேயே தோய்ந்துதுன்னு கூடச் சொல்லலாம். அதுக்கான சூழல் இருந்தது. ஆனால் நான் ஒவியனாகனும்னுதான் ரொம்ப ஆசைப்பட்டேன். அது நிறைவேறல்ல.

கி.ரா. வை நான் முதல்ல அவரோட இடைசெவல்ல வைத்து சந்திக்கிறேன். அவருக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு தெரியும்.கர்னாடக இசையின் ராகங்களை எப்படி
சுலபமாகக் கண்டுபிடிக்கிறதுன்னு சொல்லிக்கிட்டிருந்தார். எங்களோட பேச்சு நெருக்கமான முறையில் போய்க்கிட்டிருந்தது. அப்போ, "இசை ஒரு போகப் பொருள் மாதிரி தெரியுது" ன்னு நான் சொல்லிட்டேன்."அடடா , இசையில மனிதன் தன் ஆத்மாவே அப்படியே கரைஞ்சு போயிடறதைத்தான் பார்க்கிறான். நீங்க எப்படி இப்படி சொல்லப் போச்சு. யாருமே இப்படி சொல்றதில்ல " ன்னார்.தியானம் என்னை ரொம்பக் கவர்ந்தது. அதுக்கும் பிறகு இசையை எப்பவாவது ஒரு சமயத்தில மாத்திரமே கேட்க விரும்பினேன். சிலர் தங்களோட அன்றாட வாழ்க்கையில இசையை ஒரு பின்னணி மாதிரி கொள்றது எனக்குச் சம்பதமில்லாதது மாதிரி தோணுது.

பின்னால கர்நாடக இசையை விட இந்துஸ்தானி இசை என்னை ரொம்பக் கவர்ந்தது; இந்திய இசைகள்ல கர்நாடக இசைதான் சுத்தமானது. இந்திய இசையும் பெர்சியனும் கலந்த இந்துஸ்தானியில கர்நாடக இசையைக் காட்டிலும் ஸ்பிரிட்சுவலான தொனி கூடுதலாக இருக்கிற மாதிரிபட்டது.

குழந்தைகளை வைத்தும் இதைப் பரிசீலித்தேன். அவங்களுக்கும் கூட சுபாவமா இந்துஸ்தானி இசை ரொம்பப் பிடிக்குது.

நண்பர் ராஜ சுந்தர ராஜன் , திருமறைப்பணிநிலையம் சவுண்ட் என்ஜினியர் பங்காரு , டேவிட் சந்திரசேகர் , பிரமிள் போன்றவர்கள் தொடர்பினால் எனக்கு மேற்கத்திய இசையில் ஏற்பட்ட அபிரிமிதமான அனுபவம் முக்கியமானது. பிரமிள் நம்முடைய இசையைவிட மேலை இசை எவ்வளவு தூரம் உயர்ந்த தரத்தில் உள்ளதுங்கிறதுக்கு எடுத்துச் சொன்ன முறையும் உதாரணமும் , ஒரு உரையாடலின் போது குரு நித்ய சைதன்ய யதி சொன்னதும் ஒன்றாக இருந்ததைப் பார்க்கும் போது உலகளாவிய இசை விமர்சன உலகில் பரவலாக நிறுவப்பட்ட ஒரு கருத்தாகத்தான் இது இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றியது. இதையெல்லாம் நான் இப்போ ஞாபகம் கொள்றதுக்கு ஒரு உள்நோக்கமும் இருக்கலாம். நம்ம கலைஞர்களுக்கு , எழுத்தாளர்களுக்கு இது மாதிரி உண்மைகள் அதிர்ச்சி தர்றதா இருக்கும். "நாம்" , "நமது" ன்னே நாம வளர்ந்திட்டோம்...திறந்த மனதுக்கான ஒரு கலாச்சாரச் சூழலுக்குத்தான் நாம இனி உழைக்கணும்.


பிற மொழிகளிலிருந்து ஆங்கிலம்வழி தமிழுக்கு நிறையக் கவிதைகள் வந்துள்ளன. தமிழ்க் கவிதைகள் எவ்வளவு தூரம் பிறமொழிக்குச் சென்றிருக்கு ? இதுபற்றி என்ன நீனைக்கிறீர்கள்?

தமிழ்க் கவிதைகள் இந்திய , ஆங்கில மொழிப் பத்திரிக்கைகளில் மொழிபெயர்ப்புகளில் வந்துள்ளதைப் பார்த்திருக்கிறேன். "இண்டியன் லிட்டரேச்சர்" மற்றும் "கல்கத்தா எழுத்தாளர் பட்டறை" தமிழுக்கெனவே தனித் தொகுப்புகள் போட்டிருக்கின்றன . மலையாளத்தில் "சமகாலின கவிதை" இதழ் தமிழ்க் கவிதைகளை நன்கு புரிந்து கொள்ளப்படும் அளவுக்கு முக்கியமான எல்லோருடைய கவிதைகளையும் நிறைய மொழிபெயர்த்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பிற இந்திய மொழிகள் குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் சச்சிதானந்தன் கவிதைகள் ஆங்கிலத்திலும் அநேக இந்திய மொழிகளிலும் தொகுப்பாக மொழிபெயர்க்கப்பட்டது மாதிரி எந்தத் தமிழ்க் கவிஞனுக்கும் வாய்க்கவில்லை. அத்தகைய ஒரு கவிஞன் தமிழில் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

ஒரு படைப்பாளியோட இயக்கம் அவன் புழங்குகிற மொழியுடன் நின்றுவிடுகிறதா? சமூகத்துடன் கலக்காத தன்மை தமிழ்ப் படைப்பாளிகளிடம் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே. கன்னடத்தில் சிவராமகரந்த் மாதிரியோ, அல்லது நர்மதா அணைத்திட்டம் பிரச்சனையில் ஈடுபடுகிற அருந்ததிராய் போன்றவர்கள் மாதிரியோ இங்கே யாரும் இல்லையா. ஏன் இந்த ஒதுங்கும் தன்மை?

உள்ளூரமிக்க ஆளுமை உள்ள எந்தக் கலைஞனுமே தன்னை ஒரு பெரிய கலாச்சார சக்தியாகத்தான் உணர்கிறான். சூழல் , சந்தர்ப்பமின்மைகள்தான் காரணம். தமிழ்நாட்டில் ஊழல் மிகுந்து அரசியல்வாதிகளும் , மூன்றாந்தரப் படைப்பாளிகளும் சினிமாகாரர்களும்தான் மக்களின் நாயகர்கள். அதுதான் காரணம் என நினைக்கிறேன்.


தங்களது படைப்புகளில் உச்சநிலையை அடைந்தபிறகே டால்ஸ்டாய் போன்ற படைப்பாளிகள் குழந்தைகளுக்காக எழுத ஆரம்பித்தாக சொல்லப்படுது. அதுபோல உங்களுக்கான அடுத்த கட்டம்பற்றிய திட்டம் ஏதேனும் வைத்திருக்கிறீர்களா? உங்களது முழுக்கவனமும் பாசமும் கவிதைச் செயல்பாட்டில் மட்டுமே அமைதி பெறுகிறதா? அது போதுமானதா இருக்கா? வேறு வேறு வடிவம் பற்றி யோசிக்கதுண்டா? உதாரணத்துக்கு 'உள்முகம்' இதழில் உங்கள் கட்டுரை மிகச் சிறப்பாய் இருந்தது.

குழந்தைகளுக்கு எழுத வேண்டுமென்ற ஆசை இருந்தது. இப்போது அதுபற்றி யோசிக்கவில்லை. என்னால் சிறப்பாக எழுதி முடிக்கக்கூடிய காவியங்கள் , நாடகங்கள் மீது கவனத்தைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். வேறு தீர்மானங்கள் ஏதுமில்லை. நான் செய்வதெல்லாம் திடீர் திடீரென்று தோன்றி எழுதிமுடிக்கப் படக்கூடியதாகவே இருக்கும். இப்போது ஒரு நாடகம் முடிந்து வெளிவரும் நிலையில் உள்ளது. இதன் பிறகு இனி எழுத்தையே துறந்துவிடலாமென்று நினைத்தேன். என்னிடம் திட்டங்கள் பற்றிக் கேட்கிறீர்கள். கவிதை ததும்பும் ஒர் மனோநிலையில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பதே இஷ்டமானதாக இருக்கிறது.

கவிதையின் வெளிப்பாட்டுச் சாத்தியத்தில் அடுத்த தலைமுறை எந்தவிதமாக இயங்குமெனக் கருதுவீர்கள்?

வெளிப்பாட்டுச் சாத்தியம். அவனது வாழ்க்கை , சமூகச் செயல்பாடு, அவனது அனுபவ உலகம் சார்ந்து உருவம் கொள்ளும்.இன்று வெளிப்பாட்டுச் சாதனங்கள் மலிந்து கிடக்கிற சூழலில் இனி கவிதை அந்தஸ்தை அடைந்த ஒன்றே இலக்கிய அந்தஸ்தைப் பெறும். மற்றவைகள் மிக எளிதில் தயாரிக்கப்பட்டுவிடக்கூடிய நவீன உலகில் இருக்கிறோம். சற்று தேர்ந்துவிடக் கூடிய ஒரு தொழில் நுட்பத்தை தாண்டிய ஒன்றுக்காக நாம் அவாவிக் கொண்டிருப்போம்.

புதிதாக எழுதத் தொடங்கும் இளம் கவிஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இளம் கவிஞர்களுக்கு...இந்த உலகில் உங்கள் பிரச்சனை என்ன?
குழப்பம், தேடல் மற்றும் நீங்கள் வெளிப்படுத்த என உங்களுக்குள் ஏதேதோ கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அப்படித்தானா? அது ஒருநாளும் அடங்கிவிடக் கூடியதில்லையா? அப்படியென்றால் மட்டுமே நீங்கள் கவிஞர்களாக வாழ்வைத் தொடங்குகிறீர்கள்.

இளம் கவிஞன் தன்னை ஒரு மாணவனாகக் கருதியபடி தமிழ் , இந்திய ஆங்கில மற்றும் உலகின் பல மரபு இலக்கியங்களையும் படிக்க வேண்டும். எல்லா மொழிகளிலுமுள்ள பெருங் கவி ஆளுமைகளை ரசித்துப் படித்து தன் கவி ஆளுமையைக் கண்டடைய வேண்டும். சம காலத்தில் பேர்பேற்ற கவிஞர்களின் கவிதைகளையும் அதே கண்ணோட்டத்தில் படித்துப் பார்த்துக் கொண்டால் தன்னோட இடம் ஒன்று அவனுக்குள் உருவாகலாம்.ஒரு சுயமான குரல் அதுவே உண்மையான ஒரு குரல். நீங்கள் குறிப்பாகச் சில புத்தகங்கள் , சில கவிஞர்கள் , சில இயக்கங்கள் என்று தேடாதீர்கள். அது குறுக்கு வழியைத் தேடுவதற்குச் சமமாகும். அது சுயமான குரலை ஒலிப்பவர்களாக இன்றி எதிரொலிப்பவர்களாக உங்களை ஆக்கிவிடவும் கூடும். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு இயக்கத்திடமிருந்தும் நாம் கிரகித்துக் கொண்டவை எவை எவை என்பதுதான் முக்கியம். வெளிப்படுதலுக்கான போதம் உள்ளவனுக்கு மேலான பிற படைப்புகள் வெளிப்படுத்தலுக்குத் தேவையான எழுச்சியையும் வழிமுறைகளையும் அளிக்கும். அப்படைப்புகள் இன்னவை என்று கூறமுடியாது. தொன்மங்கள் கண்டிப்பாய் அறிந்திருப்பது அவசியம்.வாய்மொழி இலக்கியம் அவன் அகத்திற்குச் செழுமை சேர்க்கும். இதெல்லாமே மரபை அறிதல் என்பதில் அடக்கம் என்பதால் விரித்துச் சொல்லவேண்டியதுமில்லைதான்.

இந்தப் பேட்டியை நிறைவுசெய்யுமுன் உங்கள் நெஞ்சை ஒரு கணமும் விடாமல் வதைக்கும் ஒரு கவிதையைக் கூறுவீர்களா? படித்த்தாகவோ அல்லது நீங்களே எழுதியதாகவே இருக்கலாம்.

எங்கும் நிறைந்துள்ள ஒளியை
அள்ளி வழங்க நீண்ட கைகள்
கவினிப்பாரற்ற தனிமையில் முழ்கியும்
தன் புறங்கைகள் வழியால் வழங்கிக் கொண்டிருக்கிறது
எல்லோரும் விரும்பும் நிழலை.

(புல்வெளியில் ஒரு கல்- தொகுப்பிலிருந்து)


-முற்றும்



கவிஞனின் செயலிழந்த அந்த நா




குறிப்பு-வடபழனியிலுள்ள ஒரு பழைய புத்தக கடையில், நெய்வேலியிலிருந்து வெளிவந்த வேர்கள் சிற்றிதழின் 1999 ஆம் ஆண்டு இதழ் கிடைத்தது.

அந்த இதழில் வெளிவந்த - "சிற்பி இலக்கிய விருது" தேவதேவனின் ஏற்புரை.

வேர்கள் இதழுக்கு நன்றி.
-------------------------------
ஒரு விருதின் தகுதியினை நாம் எவ்விதம் மதிப்பீடு செய்கிறோம்?அதன் அளவுகோல் என்ன?.... இதுபோன்ற சந்தர்ப்பங்களைக் குறித்து நான் சிந்தித்தையும் பேசியதையுமே இங்கு மீண்டும் நினைவு கூர்கிறேன்...அந்த விருதானது ஒரே சமயத்தில் அதை வழங்குவோர்க்கும் , அதைப் பெறுவோர்க்கும் , அவர்கள் வாழும் மொத்த சமுதாயத்திற்குமே பெருமைதரக்கூடியதாக இருக்க வேண்டும்,யார் யாருக்கு நன்றி சொல்வது என்ற கேள்வியே அழிந்துபோய் விடுகிற ஒரு கொண்டாட்டம் அது.

கவிஞர்கள் தாம் வாழும்காலத்தில் கண்டுகொள்ளப் படாமலேயே புறக்கணிக்கப் பட்டிருக்கிறார்கள்.அது அறிவார்ந்த தளத்தில் அந்தச் சமூகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தமையை நமக்குக் காட்டுகிறது.ஒரு கவிஞன் தான் வாழுங்காலத்தில் கொடுந் தண்டனைக்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறான்.அரசு அதிகாரத்தின் வன்முறையை அப்போது நாம் அடையாளம் கண்டிருக்கிறோம்.ஒரு கவிஞன் தன் வாழுங்காலத்தில் அடையாளம் காணப்பெறுவதும் , கொண்டாடப்பெறுவதும் , அந்தச் சமூகத்தின் ஒரு பகுதியெனும் ஆரோக்கியமாய் இருக்கிறது என்று நாம் ஆசுவாசிக்க முடிகிறதற்கான அடையாளம்தான்;முழு வெற்றி அல்ல.முழு வெற்ற அவன் வாழும் சமூகத்தின் வளர்ச்சியில்தான் இருக்கிறது.


கவிஞனை மொத்த சமூகமும் முழுமையாய்ப் புரிந்துகொண்டது என்பது மனித வரலாற்றில் இல்லாத ஒன்று.கவிஞனும் தான் கண்டவற்றை வெற்றிகரமாய்க் கூறி முடித்துவிட்டான் என்ற நிலைமையும் இதுவரை இல்லாத ஒன்று.இந்த்த் தோல்விக்குக் காரணம் அவனது ஊடகமான மொழி .அவன் தன் வாழ்க்கையையே ஒரு ஊடகமாகக் கொண்டால்தான் என்ன? தோல்வியையே தழுவுகிறான்.கருணையைத் தன் இதயத்தால் துய்த்து அறிந்தவனும் சொல்லால் சாதிக்க முடிந்தது என்ன, கருணை என்ற சொல் போதாமல் போய் அதற்கு மேலும் இரண்டு முன் ஒட்டுப்(Prefix) பண்புச் சொற்களை(Adjectives) அழுத்தி அவன் தன் மனவெழுச்சியை மட்டும்தான் பதிவு செய்ய முடிந்தது தவிர மற்ற எல்லாமும் எளிதில் சாதிக்கப்படக்கூடிய அற்பங்கள்தாம் என்ற முடிவுக்கு வந்தவைகள்தாம்.


கவிஞனின் இத்தகைய மனவெழுச்சியால் கோர்க்கப்படாத படைப்புகளைத் துச்சமென மதித்துத் தூர ஏறிந்துவிடுவது மிகச் சிறந்த ஒரு மதிப்பீட்டுச் செயல் என்று கூற முடியும் .இலக்கியத் திறனாய்வு என்பது இதைக் கண்டடைவதற்கான ஒரு உளவு வேலையாகவும் சிக்கலான வேளைகளில் ஆகி விடுகின்றது.கவிஞனோ மிக எளியவனாகவும் மிகு உறுதிமிக்கவனாகவும் காட்சியளிக்கிறான்.ஏதோ ஒரு மையத்தினின்று பெறப்படும் அறமதீப்பீடுகளை வலியுறுத்தும் ஒரு அறவீனமுள்ள மூர்க்கனாக அடையாளம் காட்டப்படுகிறான்.அவனோ "ஆம்.அதை மையம் என்று கொள்வோமானால் பெருவியப்பு ஒன்றின் உன்னத நிகழ்வேதான்" என்னும் உணர்வுதான் அது என்று அவன் தனக்குத்தானே கூறிக் கொள்கிறான்.அவனிடமிருந்து வரும் அறமதிப்பீடுகளின் கருப்பையே அது.


தண்டனைகளைப் போலவே பாராட்டுகளாலும் சிதைந்துவிடாதவனாக இருக்கவே அவன் விதிக்கப்பட்டிருக்கிறான்.காரணம் அவனது பொறுப்பு தானும் சமூகமும் வேறுவேறு அல்லாத ஒன்றேயான ஒர் பொருள் மீது ஊன்றப்பட்டிருக்கிறது என்பதுதான.இன்று நாம் மிக நெருக்கடியான ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் உலகின் மிகச் சிறந்த கவிதைகள் எல்லாமே மரணப்படுக்கையிலிருக்கும் ஒரு மனிதனின் அன்புக்கான கதறலே என்றும் அவன் அறுதியற்ற சொற்றொடர்களை உருவாக்கிய வண்ணமாய் இருக்கிறான்.அவன் கவிதைகளில் சமூகத்தின் சுரணையின்மைக்கு எதிரான சூடும் , அடுக்குமுறை , அதிகாரம் வன்முறை ஆகியவைகளுக்கு எதிரான அச்சமின்மையும் , கொண்டாடங்களின் சந்தோஷத்தில் தோய்ந்துவிடாத விழிப்பும் காணக் கிடைக்கிறது.எல்லாமாகவும் இருக்கிற ஒரு தனிமை அவனுடையது .அந்த்த் தனிமைத் துக்கத்தின் இன்னொரு பக்கமே 'சொல்லொணாத அமைதி' என்பதையும் அறித்திருக்கிறான்.

இவைகளெல்லாமே ஒரிடத்தில் படித்துவிட்டு இன்னோரிடத்தில் வந்து ஓதுகிற தத்துவங்கள் அல்ல.அப்படியானால்? நாம் சுட்டிக்காட்ட விரும்புவதும் , இயற்ற விரும்புவதும் ஒர் பிரக்ஞை நிலையைத்தான் என்பதே.அந்தப் பிரக்ஞை நிலையைத்தான் ஒவ்வொரு கவிதையும் ஆதர்சிக்க வேண்டும்.


நம் தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுத் தொன்மையுடையது என்பதிலும் ஒரு வளமான பாரம்பரியத்தின் வாரிசுகள் நாம் என்பதிலும் சந்தேகம் இல்லை.ஆனால் இந்தப் பெருமைகளால் நாம் சாதித்தது ஒன்றுமில்லை. அவலமான ஒரு தற்பெருமைக்குச் சமமானதுதான், ஒருவன் தன் நாட்டின் பெருமையைச் சார்ந்திருப்பதும்.கவிதை ஒரு மனிதனின் உள்ளார்ந்த சுகந்திரத்தையே அவாவுகிறது.ஒரு நாட்டின் நலமும் , அதன் சுற்றுச்சுழுலும் , பண்பாடும் அந்நாட்டு மக்களின் நெஞ்சிலே சுடர்கிற கவிதையைப் பொருத்துத்தான் அமையும் என்பதையே இந்த விழாவின் சந்தர்ப்பத்தில் பெரிதான ஒரு செய்தியாக சொல்ல விழைகிறேன்.... கவிஞன் என்றாலே பெருங்கணவுகளைக் காண்பவன் என்பது ஒரு பழைய மதிப்பீடு.மனித நல்வாழ்வுக்கான இஷ்ட லோகக் (Utopian) கனவுகளைக் காண்பவன் அவன் கனவு பங்கம் ஏற்பட்டு துஷ்டலோகக் (Dystopian) கனவுகளில் துடித்து தன் ஆழ்மன அலறலை சிறுசிறு துடிப்புகளாக எழுதிக் கொண்டிருந்தவனும் அவனே.

II


கலைகள் மீதும் கவிதை மீதும் ஆர்வம் முகிழ்த்திருந்த எனது தொடக்க காலத்தில் - 30 , 35 ஆண்டுகளுக்கு முன்பு - செய்தித் தாளின் மூலம் வடக்கே ஒரு கவிஞர் - அவர் பெயர் , ஆண்டு ஆகியவை நினைவில்லாத்தற்கு வருந்துகிறேன் - தீடீரென்று வாய் பேச இயலாது போய்விட்ட செய்தி என் மனதில் அழியாது பதிந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது.பின்னாளின் வாசிப்பில் ஃபிரெஞ்சுக் கவிஞர் போதெலோருக்கும் அந்த விபத்து நடந்துள்ளது என்பதை அறிந்தேன்.

சமூகத்தின் ஆரோக்கியத்திற்கான ஒரு விசேஷ நரம்பு மண்டலத்தை அவாவுகிற வேகத்தில் இஷ்டலோகத்திற்கும் (Utopian) துஷ்ட லோகத்திற்குமாய் (Dystopian) அதிர்கிற ஒரு நரம்பு நெறித்து அறுபட்டுவிட்ட நிலைதான் கவிஞனின் செயவிழந்த அந்த நா என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

அரசியல்வாதிகளால் சிதைக்கப் பட்டிருக்கும் இந்த உலகை உடல்நோய் மருத்தவர்களைக் கொண்டும், உளவியல் அறிஞர்களைக் கொண்டும் , சீர்திருத்திவிடப் பார்க்கிறோம். கவிதை மட்டுமே நமக்கு நம்பிக்கை தரும் என்பதற்கு கவிஞனே ஒரு சாட்சிப் பொருள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.தன்னைக் கவிஞன் என உணர்ந்து கொண்டுவிட்ட ஒரு உள்ளம்தான் இந்த பிரபஞ்சத்தின் மிக உறுதியான ஒரு பொருள். மற்றும் மனித விடுதலை அரசியல்வாதிகளின் கையில் இல்லை என்பதையும் மனிதனை உய்விக்க எழுந்த எல்லாச் சமயங்களும் ஏன் தோற்றுவிட்டன என்பதையும் இன்னும் அறியாதவனை நாம் எந்த சொல்லால் அழைப்பது?... கவிஞனிடம் திட்டவட்டமான சமயம் ஒன்று உள்ளது.அதை ஒருக்காலும் சாகடிக்க முடியாத சொற்களில் அவன் எழுதிக் கொண்டேயிருக்கிறான்.

கவிதை இல்லாத இடத்தில்தான் கவிதை ஒரு அலங்காரப் பொருளாகவும் , கவிதை ஒரு தொழிற்சாலையாகவும் , கவிஞர்கள் சாதாரண மனிதர்களாகவும் கருதப்படுவதும் தர்க்கத்திற்கு உட்பட்டதும் இயல்பானதுமான ஒன்று.நான் பேச விரும்புவது கவிதையை உணர்ந்து கொண்ட ஒரு சமூகம் அல்லது தான் கவிஞன் என்பதை உணர்ந்துகொண்ட ஒரு உள்ளம் பற்றி மட்டுமே.

நன்றி!!

தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை



-1-


கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் கேத்ரீனா போல் தன் வாழ்விலும் ஒரு சம்பவம் நிகழுமென பார்வதி எதிர்பார்த்ததிருக்கமாட்டாள்.ஏனேனில் அவளுக்கு கேத்ரீனாவை தெரியாது.கரமசோவ் சகோதரர்கள் நாவலையும் வாசித்ததில்லை.பார்வதி பேரழகி என்று சொல்ல முடியாது. கண்டிப்பாக அழகி. சிரிப்பதை விடவும் சிரிக்க முற்படும் தருணங்கள் அற்புதமானவை. தீமையின் நிழல்கூட விழாத தேவதையின் முகம், உண்மை அதுவல்ல என்றபோதும்.தன் சகாக்கள் போலன்றி ஸ்தனங்களை கச்சிதமாக துப்பட்டாவால் மறைக்ககூடியவள். அவளை பிறர் அநேகம் பார்ப்பதில் அவளுக்கு கர்வமோ, அகங்காரமோ இல்லை.மகிழ்ச்சி உண்டு.அலைபாய்ந்திடும் கண்கள்.அவளும் சிறுபெண் தானே.இதன் காரணங்களாலேயோ என்னவோ அவளை அதிகம் ரசிப்பான் ஸ்ரீனிவாசராவ்.

-2-


சுப்பையா பிள்ளையின் காதல்கள் என்ற புதுமைபித்தனின் கதையில் சுப்பையா பிள்ளைக்கு தினமும் தாம்பரத்திலிருந்து பீச் நோக்கி பயணம்.இன்று நிலைமை வெகு ஜோராக மாறிவிட்டது.ஸ்ரீனிவாசராவுக்கு திருவல்லிக்கேணியிலிருந்து தாம்பரம்.ஜீவிதம் பெரும்பாலான இளைஞர்கள் போல் திருவல்லிகேணியின் மேன்சன்களில் அல்லாமல் பார்த்தசாரதி கோவிலின் தேரடி வீதியில்.செகந்தரபாத்தில் அவனது தந்தையுடன் வேலை செய்த சிநேகிதர் வீடு.அவர்களுக்கு ஒரே மகன்.மகனுக்கு கூர்ஹானில் வேலை.இவர்களுக்கு வீட்டை விற்க மனமில்லை.ஆக ஸ்ரீனிவாசராவ் இருக்கிறான்.பழைய வீடு.திண்ணை வைத்த பழைய வீடு! அவன்,வீடு அவ்வளவுதான். தினசரி பயணம் 21ஜியில்.

அதுவொரு எலக்டாரினிக்ஸ் நிறுவனம்.செல்போனுக்கான உபகரணங்கள் தயாரிப்பு பிரதானம்.அங்கே பார்வதியை பார்த்த மறுமுறை பார்க்காதவர் சகாய இருதய ராஜ்.உற்பத்தி துறையையும் , எலக்கிடிரிக்கல் துறையையும் கவனித்துக்கொள்பவர்.தொழில்நுட்பக்காரனின் மூளை.உதிரிகளை வைத்தே புதிய இயந்திரம் உருவாக்ககூடியவர்.அந்த நிறுவனத்தில் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை இருக்கும் ஐந்தாறு தமிழர்களில் ஒருவர்!ஸ்ரீனிவாசராவ் இருப்பதால் உற்பத்தி துறையை பற்றி இருதய ராஜ் அதிகம் கவலைகொள்வதில்லை.பார்வதி அங்கே புதிதாக தொடங்கப்பட்ட ஒரு யூனிட்டுக்காக எடுக்கப்பட்ட ஐந்து எலக்டிரிக்கல் இன்ஜினியர்களில் ஒருத்தி.டிரெயினிங் முடிந்து வேலை நிரந்தரப்படும் தருணம்.


-3-


மார்கழி மாதத்தின் மாலையில் பார்த்தசாரதி கோவிலின் தேரடி வீதி , பைகராப்ட்ஸ் ரோட்டின் பாதைசாலையில் பழைய புத்தகங்களின் குவிப்பு, தனியாக நின்றுகொண்டு ஏதேனும் பழச்சாறை பருகும் இளம் பெண்கள்,மதிய வெயிலின் காக்கை கரைப்பும் - சைக்கிள் பயணியும், இப்படியாக ஸ்ரீனிவாசராவுக்கு சில ரசனைகள்,பிரியங்கள் உண்டு.அதில் மோட்டார் சைக்கிள் ஒட்டுவதும் அடங்கும். ஜனசந்தடி அற்ற சாலையில் கீயர் மாற்றாமல் சீரான வேகத்தில் வண்டியை செலுத்தும்போது அவனும் வண்டியும் ஒர் உடல் ஆகும் நிகழ்வு அவனுக்கு அமைவதுண்டு. அப்படி ஒரு நிகழ்த்தலில் ஏதிரே எதோ ஒன்று பாய்ந்தது. மனிதன்!ரத்தம்.சலசலப்பு.ஆஸ்பத்திரி.லேசான சீராய்ப்புகள் இருவருக்கும்.சிகிச்சை முடிந்து அவனை வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலருகேயிருந்த அவன் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டான்.பெயர் ரிஷி.கண்களில் கனவுகள்.ஆங்கில மருத்துவம் படித்தவன்.நவீன நாடகத்தின் மீதான ஈர்ப்பு காரணமாக மருத்தவ பயிற்சியோ, மேற்கொண்டு படிப்போ இல்லை. ஒரிரு நாடகங்கள் மேடையேறி இருக்கின்றன என்றான்.அதை சொல்லும்போதுதான் அவனில் எத்தனை மகிழ்ச்சி.கிளம்பும்போது தெருவில் எதிரில் அவள் வருவதை பார்த்தான்.அவளே தான்.அவள் வீடும் அங்கே இருக்கலாம்.சிரித்துவிட்டு வண்டியை கிளப்பினான்.

மறுநாள் அவள் அலுவலகத்தில் இவனை சந்தித்து நன்றி தெரிவித்தாள்.ஏன் என்றான். தன் சகோதரனை சிகிச்சை அளித்து விட்டில் வந்து விட்டதற்காக என்றாள். "சகோதரன்,அவன்,ஓஹோ" ஸ்ரீனிவாசராவின் வாய் திறந்த நிலையில் சில நொடிகள் இருந்தன.மேற்கொண்டு அவன் எதுவும் கேட்கவில்லை.அவளுக்கு பேசவேண்டும் போலிருந்தது.எதிர்வினையில்லாமல் என்ன பேசுவது. சென்றுவிட்டாள்.

-4-


உலக பொருளாதார நெருக்கடி காரணமாகவோ என்னவோ புதிதாக தொடங்கப்பட்ட யூனிட் முடப்படபோகிறது என்ற வதந்தி சில மாதங்களாக இருந்து வந்தது.வதந்திக்கு முற்றுப்புள்ளி.புதிதாக தொடங்கப்பட்ட யூனிட்டை சேர்ந்த அத்தனை பேரும் வேலையிலிருந்து நீக்கப்பட போகிறார்கள்.ஐந்து எலக்டிரிக்கல் இன்ஜினியர்கள், ஐம்பது டிப்ளமோ ஹோல்டர்கள் எல்லோருக்கும் வேலை போகப் போகிறது. இதனால் சில அடித்தட்டு வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வேலை போகும்.வேலை போய்விடும் என்றால் யாரும் மகிழ்ச்சிகொள்வதில்லை.பார்வதியும் தான். சில நிமிடங்களில் ஸ்ரீனிவாசராவை சென்று பார்த்தாள்.எதாவது செய்ய முடியுமா என்று கேட்டாள்.ஸ்ரீனிவாசராவுக்கு ஆறுதலாகவோ,வேடிக்கையாகவோ பேச தெரியாது. அவளிடம் பேசலாமேன்று நினைத்து பிறகென்ன திருமணம்தானே என்றான்.அவளது முகம் சுனங்கி போயிற்று.யார் திருமணம் செய்து வைப்பார்கள் என்று கேட்டவள் தொடர்ந்து பேசினாள்.அவளது தந்தை விசாகப்பட்டணித்தில் கண் மருத்துவர். அவளுக்கு சிறு வயதுயிருக்குபோதே அவளது தாயை விடுத்து வேறோரு பெண்னோடு தொடர்பு வைத்துக்கொண்டார்.பின்பு திருமணமும் செய்து கொண்டார்.தங்களின் பொருளாதார தேவைகளுக்கு தன் மாமாதான் பெரிதும் உதவினாரென்றும், இப்போது தன் தாய் அவர் வீட்டில்தான் வசிக்கிறாரென்றும் சொன்னாள்.மாமா வீட்டில் எல்லோரும் அன்போடுதான் பழகுகிறார்கள், ஆனால் இனி எப்போதும் அவர்களை அனுகமுடியாத அளவுக்கு தன் சகோதரன் நடந்து கொள்வதாகவும் சொன்னவள், இந்த எரிச்சலை அவர்கள் கொஞ்ச காலமாக தங்கள் மீதும் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள் என்றாள்.அதனால் அவளது ஒரே குறிக்கோள் தாயை அவளோடு அழைத்து வரவேண்டும். அதற்கு அவள் வேலையில் இருக்க வேண்டும். அவளது சகோதரன் இது ஏதுவும் புரியாமல் நிழல்களில் வாழ்கிறான் என்று வருந்தினாள்.சாதாரணமாக ஸ்ரீனிவாசராவ் முசடன்.இது போன்ற ஒரு சந்தர்பத்தில் அவன் பேசியிருக்க்கூடியது 'பார்க்கலாம், என்னால் முடிந்தது செய்கிறேன்' இதுதான்.ஆனால் அன்று அவன் வேறு விதமாக பேசினான்.பார்த்தசாரதி கோவிலின் தேரடி வீதியில் தன் அறையிருக்கிறது என்றான்.அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.என்ன என்றாள்.நாளை தன் அறைக்கு வந்து சென்றால் வேலை சம்பந்தமாக முயற்சிப்பதாக சொன்னான்.அவனை பார்த்த கண்கள் அப்படியே தாழ்ந்துபோயின.சென்றுவிட்டாள்.

மனிதர்களுக்கு பதற்றமான நேரங்களில் மூளை செயலிழந்து விடுகிறது.பார்வதிக்கு இப்போதுள்ள வேலையில் பதினையந்தியாரம் கிடைக்கிறது. இது இல்லாவிட்டால் மூனாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் வரை ஏதாவது கிடைக்கும்.அவளது கஷ்டத்தை பார்த்து ரிஷி கூட வேலைக்கு செல்ல ஆரம்பிக்கலாம்.விரைவில் அவளுக்கு நல்ல வேலை கிடைக்கவும் செய்யலாம்.எல்லாவற்றையும் விட தன் சகோதரினிடம் பேசலாம்.ஆனால் மனம் அப்படி சிந்திக்கவில்லை.வேலை போய்விட்டால் அவ்வளவுதான்.வீட்டு வாடகை, சகோதரன், தாய், வேறு வழியில்லை.வீட்டு வாடகை, சகோதரன், தாய், வேறு வழியில்லை.வேறு வழியேயில்லை.எல்லாம் சுவரில் சென்று முட்டிக்கொண்டது.

-5-



அவள் சென்றாள்.பித்தளையில் சங்கு சக்கரம் பொருத்தப்பட்டுயிருந்த அரையடிக்குமேல் கணமான மரக்கதவை தள்ளினாள்.திறந்தது.உள்ளே தாவாரத்தில் வெயிலின் நிழலாடியது.அவன் லுங்கியும் டீசர்ட் அனிந்தவாறு படுக்கையில் சாய்ந்து கிடந்தான்.இருட்டறை.ஈரத்துணிகளின் நாற்றம்.அவள் வரக்கூடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.சற்று அதிர்ச்சிதான்.காட்டிக்கொள்ளவில்லை.எழுந்து விளக்கை போட்டான்.அறையினுள் சென்றாள்.வெள்ளை நிறத்திலான சுடிதார் அனிந்திருந்தாள்.இரவு முழுக்க அழுதிருப்பாலோ,தெரியவில்லை.அங்கேயிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமரச்சொன்னான். ரெடாக்ஸின் தரை தண்னென்றுயிருந்தது.அமர்ந்தவாறு அவளின் முகத்தையே பார்த்தான்.என்ன வயசு என்று கேட்டான்.இரவைரெண்டு என்றாள் சன்னமான குரலில்.மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.அவளை பரிகாசத்தோடு பார்த்தான்.சொன்னவுடனே வந்துவிட்டாயே வெட்கமே இல்லையா என்று கேட்டு பரிகாசம் செய்தான்.அவள் அழவில்லை.அவனை பார்க்கவுமில்லை.பரிகாசம் வெறுப்பாகி அவள் மீது காறி உமிழ வேண்டும் போல தோன்றியது.வெறுப்பு,வெறுப்பு, அதன் உச்சம்.சட்டென்று ஏனோ அவனுக்கு அன்பு பீறிட்டு எழுந்தது.பைத்தியக்காரி,எழுந்து ஓடு என்று கத்தினான்.பார்த்தாள்.நின்றால் அடித்துவிடுவேன் ஓடு என்று பயங்கரமாக கத்தினான்.சிறுமி.நிஜமாகவே ஓடினாள்.

-6-


அவன் அதன் பிறகு அலுவலகத்திற்க்கு சில நாட்கள் செல்லவில்லை.அவள் வீட்டுக்கு அவள் இல்லாத சமயத்தில் ரிஷியை கான சென்றான். உங்களை பார்க்கத்தான் வந்தேன் என்றான்.சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசினார்கள்.ஏன் மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்க்கூடாது , அல்லது பயிற்சி செய்யக்கூடாது என்று பட்டென்று கேட்டுவிட்டான். உனக்கென்ன என்று ரிஷி கேட்கவில்லை.நாடகம் தனக்கு உயிரென்றும் ,வேறெதிலும் தன்னால் ஈடுபாடு காட்டமுடியவில்லை என்றும் சொன்னான்.ஆனால் அது ஆத்மார்த்தமான பதிலாக தெரியவில்லை.அதை சொல்லும்போதே அவன் மண்டையில் எதிர்வினைகள் ஒடிக்கொண்டிருந்தது போலும்.அவனோடு தர்க்கம் செய்ய வரவில்லையென்றும் , ஒரு யோசனை இருக்கிறது கேட்கமுடியுமா என்றும் கேட்டான்.தனக்கு தெரிந்த ஒரு உளவியல் மருத்துவர் அவரிடம் சிகிச்சை பெறும் மனநோயாளிகளுக்கு என்றே பிரத்தேயகமாக நாடகம் நடத்துகிறாரென்றும், அவரிடம் சென்று சிறிது காலம் நாடகம் சம்பந்தமாக வேலை செய்தால் பின்னர் மருத்துவ துறையில் கூட அவனுக்கு ஆர்வம் எற்படலாம், முயற்சித்து பார்கலாமே என்றான். அவரின் பெயரை கேட்டான்.சொன்னான்.ஆச்சரியத்துடன் அவர் மிகவும் புகழ் பெற்ற மருத்துவர் ஆயிற்றே, நாடகத்தில் அவருக்கு ஈடுபாடு உள்ளதென்று தனக்கு இதுவரை தெரியாதென்றும் , அவசியம் சென்று பார்பதாகவும் சொன்னான்.

ஸ்ரீனிவாசராவ் கிளம்பினான்.வாசல் வரை வந்தவனிடம் ஏன் குற்றவுணர்ச்சியா என்று கேட்டான். இல்லை. அப்படியென்றால் தன் சகோதரி மீது காதலா என்றான்.அவன் முகத்தில் பரிகாசம் தெரியவில்லை.அது ராவை ஆசுவாசப்படுத்தியது.இல்லை தனக்கு அது போன்ற உணர்வுகளை புரிந்து கொள்ளவே முடிந்த்தில்லை என்றவன் தயங்கியவாறு தன் மீது கோபம் இல்லையா என்று கேட்டான்.இல்லை.மாறாக உன்னிடம் நெருக்கமாகவே உணர்கிறேன்.கீழ்மையின் உச்சத்தில் மேண்மை , நீ தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரம் , அவரை வாசித்திருக்கிறானா என்று கேட்டான். தான் ஏதையும் வாசித்த்தில்லையென்றும் , ஆனால் தான் சொன்ன உளவியல் மருத்துவர் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி பேசுவதை கேட்டிருப்பதாகவும் சொன்னான்.மிக முக்கியமாக , அங்கே வரும் மனநோயாளிகள் பலருக்கு பிரச்சனை வேறேதோ.அவர்கள் பாவனை செய்வார்கள்.விஷயம் என்னவென்றால் அவர்கள் பாவனை செய்கிறார்களென்று அவர்களுக்கே தெரியாது. கண்டுபிடிப்பதும் கஷ்டம்.அது போன்ற சந்தர்ப்பங்களில் உரையாடல் மட்டுமே தீர்வு.அப்போது தஸ்தாயெவ்ஸ்கியை படித்ததும்,படிப்பதும் மிகவும் உதவுவதாக சொல்வார் என்றான்.
ஆம் அவர் அமரர் என்றான் ரிஷி.ஸ்ரீனிவாசராவுக்கு வேறு சில விஷயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.மறுபடியும் சந்தர்ப்பம் அமையுமா என்று தெரியாது. பார்வதி மீதும் அவனுக்கு கோபமில்லையா என்று கேட்டான்.தனக்கு தன் மீது மட்டும்தான் கோபம் என்றான்.அவள் என் இருப்பையை நிராகரித்துவிட்டாள்.எல்லா விஷயங்களும் முடிந்தபின் தனக்கு அதை செய்தியாக மட்டுமே அவள் சொன்னபோது தன்னால் எந்த எதிர்வினையும் செய்யமுடியவில்லையென்றும், மனம் மிகவும் அலைகழிந்து கிடப்பதாகவும் சொன்னான்.ஸ்ரீனிவாசராவுக்கு ஏனோ எல்லாம் சரியாகி விடும் என்ற எண்ணம் வந்தது.நிம்மதியாக உணர்ந்தான்.அவளுக்கு வேறு வேலை கிடைத்ததா என்று விசாரித்தான். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு சிறு நிறுவனத்தில் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்திருப்பதாக சொன்னான். மகிழ்ச்சி ,மிக்க மகிழ்ச்சி. முகத்தின் அந்த மகிழ்ச்சியை ரிஷியிடம் காட்டவிரும்பாமல் வருகிறேன் என்று சொல்லி திரும்பிவிட்டான்.

-7-



சில நாட்களில் ரிஷி சென்று மருத்தவரை சந்தித்தான்.மார்பு வரை நீளும் மெண்மையான வெண்தாடி.கதர் ஜிப்பா.அவர் அவனது வலது கையை தன் இரு கைகளாலும் பற்றினார். அப்போது தான் உணர்ந்தான்.அவருக்கு அந்த வயதிலும் உறுதியான உடல்.ஒடுங்கிய வயிறு.உயரம் ஆறடிக்கும் மேல்.அவனது பார்வையை புரிந்து கொண்டவர் சிரித்தார்.அவனது நாடக விருப்பங்கள், அவனது ஆசைகள் அனைத்தையும் பற்றி சொன்னான்.அவருக்கு கார்வையான குரல்.சொன்னார். உங்கள் மனம் மிகவும் அலைகழிந்து கிடக்கிறது. கவலைபடாதீர்கள். இதுவே உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆசி.
நீங்கள் பேசும் போது இன்றைய பலரைப் போல நாடகத்திலிருந்து சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையிருக்கிறதா என்று பார்த்தேன்.இல்லை.உங்களுக்கு மனிதர்கள் மீது உண்மையான அன்பு இருக்கிறது.இந்த வருடம் இங்கே வேலை செய்யுங்கள்.எது எதில் உங்களை ஈடுபடுத்தி கொள்வதென்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.ஒரிரு வருடங்களில் நீங்கள் உளவியல் துறையில் மேற்கொண்டு படிக்கலாம். படிக்க வேண்டும்.கட்டளையிட்டார்.அவன் ஏதுவும் பேசவில்லை.மேலும் நாடகத்தின் மீதான ஈர்ப்பை அவன் குறைத்துக்கொள்ள தேவையில்லை, அதுவே அவனை சிறந்த உளவியல் மருத்துவர் ஆக்கும் , இது உறுதி என்றார்.இப்போது புறப்படுங்கள் என்று அவர் சொல்வது போல் அவனுக்கு பட்டது. அவரின் கால் தொட்டு வணங்கினான். உங்கள் கனவுகள் நனவாகட்டும் என்று ஆசிர்வதித்தார்.அவரை பார்த்தான்.வாஞ்சையாக சிரித்தார்.நீங்கள் என்னை புனிதர் போல பார்க்கீறிர்கள். நாளையே நீங்கள் என்னை முழுவதுமாக வெறுக்ககூடிய செயலை நான் செய்யக்கூடும்.பொறுக்கிகள் புனிதர்கள்,குழந்தைகள் பெரியவர்கள்,பரதேசிகள், பணக்காரர்கள்,அரசர்கள் அடிமைகள் எல்லோரும் மண் மேல் நிற்கும் மனிதர்கள்தான்.இதை உணர்ந்து கொண்டால் தூய அன்பு பெரிய விஷயமில்லை."என் ஆசிர்வாதங்கள்" என்றார்.ரிஷி புறப்பட்டான்.

ஸ்ரீனிவாசராவ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு , செக்ந்திரபாத் சென்று வேறு வேலை பார்த்துக்கொள்ளலாமென்று முடிவு செய்தான். ரிஷியிடம் தொடர்பிலிருந்தான்.பார்வதி அவனிடம் பேச முயற்சி செய்தாள்.அவன் பேசவில்லை.ஒரு நாள் வீட்டிற்க்கே வந்து விட்டாள். அவளை ஏதுவும் பேச அவன் அனுமதிக்கவில்லை.தானே செகந்திரபாத் செல்லும்முன் பார்த்து செல்ல நினைத்தாகவும் வந்ததில் மகிழ்ச்சியே என்றும் சொன்னான். நான் சொல்வதை மட்டும் கேட்டுவிட்டு இங்கிருந்து சென்றுவிட வேண்டும்.உன் தாயை எவ்வளவு சீக்கிரம் முடியுமா அவ்வளவு விரைவாக அழைத்துக்கொள்.நீ சிறுமி.எக்காரணத்தைக்கொண்டும் விரைவில் திருமணம் செய்து கொள்ளாதே.ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள் , பெரிய விஷயங்களில் அல்ல, சிறு சிறு விஷயங்கிளிலே மனிதன் முழுமையாக வெளிப்படுகிறான்.மனிதர்கள் பண்முகங்களால் ஆனவர்கள்,கூர்ந்து கவனி, உனக்கானவன் உனக்கு கிடைப்பான்.இப்போது செல் என்றான்.நீங்கள் என்றாள்.எனக்கு தற்செயலில் நம்பிக்கை உண்டு.நீ செல் என்றான்.வருகிறேன் என்று சொல்லி கிளம்பினாள்.பிறகு அவர்கள் வாழ்வில் எப்போதெனும் சந்தித்திருக்கலாம்,சந்திக்காமலும் போயிருக்கலாம்.சுபம்.

புத்தக கண்காட்சி




புத்தக கண்காட்சியில் எத்தனை புத்தகங்கள்.அதை முன்னிட்டு எத்தனை வெளியீடுகள். மிக சமீபத்தில் வரும் புத்தகங்களை தவிர்த்துவிடுவது நல்லது. சுடச்சுட படிப்பதற்க்கு அது ஒன்றும் செய்திதாள் அல்ல! இதில் தள்ளுபடிகள் வேறு. சில பதிப்பகங்களுக்கு என்ன நோக்கமென்று தெரியவில்லை. இந்தமுறை நான் சமகாலத்து எழுத்தாளர்கள் எழுதிய எந்த புத்தகத்தையும் வாங்கவில்லை.அசோகமித்திரன், கி.ரா., பஷூர், தஸ்தாயெவ்ஸ்கி,காம்யூ,ந.முத்துசாமி,சுந்தர ராமசாமி,பாதசாரி ஆகியோரின் புத்தகங்களைத்தான் வாங்கினேன்.இப்போது வணிக நோக்கில் வந்து குவியும் எழுத்துகளை சூழலின் பரபரப்பு காரணமாக வாங்க ஆரம்பித்தால் , பின்பு அவற்றை படித்து இருக்கும் ஆர்வத்தையும் விட்டுவிட நேரும்.


ஒற்றன்



ஒவ்வொரு அத்தியாயமும் தன்னளவில் முழுமையானது என்ற வகையில் எழுதப்பட்டிருக்கிறது. ஏப்படி இவரால் இவ்வளவு அகங்காரம் இல்லாமல் எழுத முடிகிறது. துளிகூட கர்வம் இல்லை.ஆச்சரியம்.காந்தியை உண்மையாகவே உள்வாங்கி கொண்ட எழுத்தாளர். எழுதுவது ஒரு பயிற்சி.ஆட்டோ ஒட்டுவது போல.அவ்வளவுதான் என்கிறார்.இப்படிப்பட்ட ஆளுமைகள் ஆபூர்வம்.

ஒற்றன் அயோவா பல்கலைக்கழகத்திற்க்கு அசோகமித்திரன் ஏழுமாத காலம் அழைப்பின்பேரில் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்களால் எழுதப்பட்டது.புற உலகை கூர்ந்து கவணிப்பது எழுத்தாளனின் முக்கியமான மன அமைப்பு.அப்படி இல்லாதவர்கள் எழுதும் போது பெரும்பாலும் அது சுயசரிதை ஆகிவிடுகிறது.அப்படிபட்டவர்களுக்கு குறைந்தபட்சம் நேர்மையாவது வேண்டும். அசோகமித்திரன் புற உலகை எளிதில் உள்வாங்க கூடியவராகயிருக்கிறார்.நேர்மையானவர்.அவரை படிக்கும் போது ஒரு goodness உருவாகிறது.
கிளர்ச்சியையோ,குழப்பத்தையோ எழுத்து ஏற்படுத்தக்கூடாது என்கிறார்.அமெரிக்கா சென்றவர் முயன்றிருந்தால் அங்கேயே தங்கயிருக்கலாம். ஏன்?இங்கேயே கூட ஆங்கிலத்தில் எழுதியிருக்கலாம். செய்யவில்லை. அம்ஷன்குமார் இயக்கத்தில் அவரைப்பற்றிய ஆவணப்படம் அவர் ஆளுமையின் முக்கிய பதிவு.

ஒற்றன் நாவலில் ஒரு அத்தியாத்தில் மாணவி ஒருத்தி அவரை காதலிப்பதும்,இவர் தன் வீட்டு மனிதர்கள் புகைப்படத்தை காட்டி அதை மறுப்பதும் அழகானவை.

ஒற்றன் - காலச்சுவடு வெளியீடு

பாதசாரியின் காசி



பாதசாரியின் காசி சிறுகதை வாசித்தேன். தமிழின் மிக முக்கியமான சிறுகதை. உளவியல் தளத்தில் இன்னும் சில தூரம் சென்றிருக்க வேண்டுமென்று தோன்றியது.


இதில் காசியாக வருவதும் அவனது நன்பனும் ஒரே மனிதனின் இருவேறு மனநிலைகள் ,ஆளுமைகள்.அந்த மனிதர் கதையை சொல்லும் பாதசாரிதான்.கதையில் முக்கிய தருணங்கள் பல இருந்தாலும் , பேருந்தில் செல்லும் போது ஏற்படும் வாழ்வின் ஆபூர்வ தருணம் என்ற இடம் மிக முக்கியமானது. பேருந்தில் செல்லும்போது அதுவும் மதியான நேரத்தில் (பதினொரு மணியிலிருந்து மூன்று மணிவரை) சமயங்களில் கூட்டம் குறைவாகயிருக்கும்.ஜன சந்தடியில்லாமல் நேரான சாலையில் ஓட்டுனர் சீரான வேகத்தில் , கீயர் மாற்றாமல் செலுத்தும்போது அநேகமாக பேருந்தில் யாரும் பேசுவதில்லை. சிலர் தூங்குவார்கள். அப்போது ஓட்டுனர் , பயனிகள், பேருந்து எல்லாம் சேர்ந்து ஒர் உடல் ஆகும் தருணங்கள் அமைவதுண்டு. வாழ்வின் அற்புத தருணங்கள்.

அவசியம் வாசிக்கபட வேண்டிய சிறுகதை.தமிழினி வெளியீடு.

அறநெறி





அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

இந்த குறளுக்கு என்ன பொருள் கொள்ளலாம்.என்ன வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம் என்பதே சூழல்.

பல்லக்கு சுமப்பவனிடமும் அதில் ஊர்ந்து செல்பவனிடத்தும் அறநெறி இதுவென சொல்ல வேண்டாம் என்னும் பொருள் சரியென படுகிறது.அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கான அரசியல் உண்டு.அரசியல் கருத்துகளால் ஆனது.அந்த கருத்தியல் அறத்தின் வழி நிற்பதற்கான சாத்தியங்கள் கண்டிப்பாக இல்லை.அதுவே வரலாறு.
கம்யூனிசமும், சோவியத் ரஷியாவின் வீழ்ச்சியும் அதில் நமக்கு கிடைத்திருக்கும் கடைசி ஆவணங்கள்.அதே நேரத்தில் ஒவ்வோரு சமுதாயத்திற்க்கும் அதற்கான சராசரித்தனம் உண்டு.
அறத்தின் குரலாய் ஒரு சமுதாயம் ஒலிப்பதற்கான சாத்தியங்களும் இல்லை.

இதைத்தான்,இந்த குறளின் பொருளைத்தான் எழுத்தாளர் ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் , விஷ்ணுபுரம் நாவல்கள் இரண்டும் விரிந்த அளவில் சொல்கிறது.


அறத்தின் குரலாய் ஒலிக்காத சமுதாயம், அறநெறியற்ற அரசை எப்படி எதிர்கொள்ளும்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரென்றே
செல்வத்தை தேய்க்கும் படை.

அரசின் செல்வத்தை அழிக்கும் இந்த படை உருவாக்கும் அரசும் அப்படியேன்று கொள்ளலாமா.
அப்படித்தான்.பெருங் கணவுகள் தோற்கின்றன.இது சோர்வை ஏற்படுத்தும் உண்மை.








நாய்கள்



-1-




பீடியை பற்ற வைத்தான் சிவன்.தனக்கும் ஒன்று என்றவாறு கையை நீட்டினான் ராவ்.சாந்தமான சிநேகமான முகம்.என்ன சவரக் கத்தி முகத்தில் பட்டு தான் இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும்.இருவரும் மூடப்பட்டு இருந்த கடையின் சிமெண்ட் படிக்கட்டுகளில் அமர்ந்து பீடி குடித்தவாறு ரோட்டில் போகும் வரும் வாகனங்களை வெறித்து பார்த்து கொண்டிருந்தனர்.மௌனத்தை உடைத்தவாறு சிவன் ‘எப்ப வக்கீலுக்கு முடிச்ச’ என்று கேட்டான்.

‘என்ன தீடீர்னு’

‘சும்மா சொல்லேன்’

‘தொண்ணூறுன்னு நனைக்கறேன்’

‘அப்படின்னா கிட்டதட்ட ஒரு பத்து பதனைஞ்சு வருஷம் இருக்கும்’ ராவின் முகத்தைப் பார்த்து சொன்னான்.

‘என்னது’ .

‘நீ கோர்ட்டுக்கு போயி’

லேசாக சிரித்தான் ராவ்.

‘ஒங்க அண்ண மட்டும் இல்ல ஒன் கதி நாறிடும்’ என்று சொன்னவாறு பீடியைய் தரையில் தைய்த்தான்.

‘ஏன் நீ இல்ல’ சிரித்தவாறே சொன்னான்.

‘நான் தானே பெரிய கலக்டரு பாரு ,சாக்கட அள்ளற பய’

இருவரும் மௌனம் ஆனார்கள்.

ஒரு மாட்டு வண்டி மெதுவாக சென்றுகொன்டிருந்தது. எதையோ யோசித்தவனாக சிவன் தீடீர் என்று ‘உன்னைய மாதிரி அவனையும் வக்கீல் ஆக்கனும்’ என்றான்.

‘ஆக்கிடலாம்’ .

‘உன்னைய மாதிரின்னா உன்னைய மாதிரியே இல்லடா. தாடியும் ஆளும் ’

இந்த முறை பலமாக சிரித்தான்.

இவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தின் பின்புறம் இருந்த தெருவில் இருந்து ஒருவன் இவர்களை நோக்கி ஒடி வந்தான்.சிவனை பார்த்தவன் மூச்சிரத்தைப்படி இடது கையைய் இடுப்பில் வைத்தவனாக வலது கையை மேலே நீட்டி ‘அண்ணே…. நாலு ஐஞ்சி நாய் சேந்து உன் பையன கடிச்சிருச்சிண்ணே’ .

‘ஐயய்யோ ’ என்று பதறியவனாக எழுந்து தெரு பக்கமாக ஓடினான் சிவன்.பின்னாலே ராவும் வந்தவனும் ஓடினார்கள்.



-2-


V.சீனிவாசன் , Municipal Commissioner என்று மேசை மீது இருந்த பெயர் பலகையை பார்த்தவாறு அமர்ந்திருந்தான் ராவ். வெளியில் Don’t Kill Stray dogs , killing dogs is inhuman,’நாய்களை கொல்பவர்கள் காட்டுமிராண்டிகள்’ என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் பதினஞ்சு இருவது பேர் கோஷம் போட்டு கொண்டிருந்தனர்.அதில் ’இந்துத்துவ எதிராளிகளே,நாய்களை கொல்லாதே’ என்ற வாசகமும் அடக்கம். அந்த சத்தம் எங்கும் கேட்டபடி இருந்தது.

‘கருத்தடை பண்ணாலும் நாய் கடிக்கும்ங்கிறது அவங்களுக்கும் தெரியும் சார்.கருத்தடை பன்றதுல்லாம் ஒரு சமரசம் தான் சார்’ தலையின் முன் பக்கம் ரோமம் முழுவதும் கொட்டி போயிருந்த மண்டையை சொறிந்தவாறே சொல்லிகொன்டிருந்தார் சீனிவாசன்.

தாடியை வருடியபடி இரு கைகளாலும் முகத்தை துடைத்தவனாக ‘பாவம் பண்னன்டு வயசு பையன்.அவன்னு மட்டும் இல்ல நிறைய இடத்தல கேக்றதில்ல.Duty demands killing stray dogs,rabid or notன்னு காந்தி சொல்லிருக்கார் சீனிவாசன்’.

‘எனக்கு புரியுது சார். காலேஜ் டேஸ்லயிருந்து உங்கள பாத்துக்கிட்டு இருக்கேன்.ஏசி கார்ல போறவன் ஏசி ரூம்ல வாழ்றவன் பேச்சு தான் சார் எடுபடுது. நேய்ட் பண்னன்டு மணிக்கு அவங்க ரோட்ல நடந்து போப்போறது கடயாது.அவங்க பசங்க ரோட்ல நடக்க போறதே கடயாது.அவங்களுக்கு இந்த பரச்சனையெல்லாம் புரியாது சார்.ம்ம்ம்…கருத்தடை பண்ணா இந்தப் பரச்சனை குறைஞ்துடும்ன்னு சொல்றாங்க’ தலையைய் பலமாக ஆட்டிக்கொன்டார் சீனிவாசன்.

‘சரி நான் களம்பறேன் ’ எழுந்து கொண்டான் ராவ்.

சீனிவாசனும் எழுந்தவாறு ‘என்னால முடிஞ்த பண்றேன் சார்’ என்றார்.

வெளியில் வந்தவன் கோஷம் போட்டு கொண்டிருந்தவர்களை பார்த்தவாறு நின்றான்.நிறைய பெண்கள் சொற்ப அளவு ஆண்கள் ஆவேசமாக கோஷம் எழுப்பியவாறு இருந்தனர்.



-3-



அது அந்த ஊரின் பெரிய வீடுகளில் ஒன்று.

சுடுவெயில்.அவன் வீட்டின் வெளி தரையில் லுங்கியும் தோளை சுற்றி மலையாள துண்டும் அணிந்தவனாக படுத்திருந்தான்.பெரிதாக எதையோ முழுங்கி விட்ட மலைப்பாம்பு போல தெருவே நெளிந்துகொண்டிருந்தது. சூரியனை பார்த்தவாறு இருந்தான்.

அநேகமாக உலகத்திலயே இந்த நொடியில் சூரியனை பார்த்து கொண்டிருப்பவன் அவன் மாத்திரமே என்ற எண்ணம் அவனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்போது தெருவில் ஒரு காகம் கரைப்பதும்,தெரு முனையில் ஓரு சைக்கிள்காரன் மாத்திரம் செல்வதும் தவிர வேறு இயக்கமே இருக்காது என்று நினைத்தவாறு சிரித்துக்கொண்டான்.

தீடீரென்று சூரியனை போலவே அவனும் தனிமையானவன் என்ற எண்ணம் ஏனோ வந்து தொலைத்து.

வீட்டு வாசலில் குழந்தையுடன் நின்றவாறு அவள் இவனை வெறுப்பாக பார்த்துகொண்டிருந்தாள்.

‘டேய்’ வெறித்தனமாக கத்தினாள்.

‘எக்கா’ என்ற அலறியவனாக எழுந்து வாசலுக்கு அருகில் ஓடி வந்தான்.அவன் முதுகு வியர்த்திருந்தது.

அவனை வெறித்து பார்த்தவாறு ‘வெயில்ல படுத்துக்குட்டு என்னடா பன்னிக்குட்டு இருந்தே’ என்றாள்

‘சும்மா….’ என்றவாறு இழுத்தான்.குழந்தை அதன் உலகத்தில் எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தது.

‘சாக்கட அடைச்சுக்கிச்சே , உங்களுக்குல்லாம் கப்பு அடிக்காதா’ சீறுபவள் போல் கேட்டாள்.

‘அடிக்குதுக்கா நான் போயி யாரயாச்சும் ஈட்டாந்தர்றேன்க்கா’ உடல் நெளிந்தவனாக சொன்னான்.

சிவனை அழைத்து வந்தான்.அவள் வாசலில் குழந்தையோடு படிகளில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தாள்.

‘ஈட்டாந்திட்டுங்க்கா’

இப்ப என்ன சோறு போட சொல்லிறியா என்று சொல்ல வந்தவள் அதை சொல்லாமல் ‘ பின்னால சாக்கட அடைச்சுக்குச்சுன்னு நினைக்றேன் போயி பாரு பா’ என்று சொன்னவளாக ‘வா வா …..’ என்றவாறு குழந்தையைய் எடுத்து அனைத்தவளாக எழுந்து உள்ளே சென்றாள்.

‘இவங்க யாரு எங்கயோ பாத்த மாதிரி இருக்கே’ யோசித்தவனாக கேட்டான் சிவன்.

‘மாமா சம்சாரம்ண்ணே ,பேப்பரல கீப்பர்ல பாத்து இருப்பீங்க’.

யாரோ மண்டையில் கொட்டியது போல் அப்படியே நின்றவன் ‘நாய்ய கொல்ல கூடாதுன்னு கோஷம் போடறவங்க வீட்லல்லாம் வேல செய்ய முடியாது டா….’ பட்டென்று சொன்னவனாக திரும்பினான்.

‘என்ணன்னே சொல்றீங்க மாமாவுக்கு தெரிஞ்சா பரச்சனை ஆயிடும்ண்னே’ ஒன்றும் புரியாதவனாக கேட்டான்.

‘என்னடா மசிறு முடியாதுன்னா முடியாதுதான் ’ கோபமாக சொல்லி வெளியேறினான் சிவன்.


-4-


இரவு சாப்பிட்டு கொண்டிருந்தான் ரத்தினம் .நான்கு ஒட்டடக்குச்சி உடல். அவள் குழந்தையுடன் பக்கவாட்டில் அமர்ந்திருந்தாள்.

‘என்ன ஒரு மாதிரி இருக்க’ அவளை பார்த்தவாறு கேட்டான். அவனுக்கு கீச்சுக் குரல்.

‘ஆமா எவன் என்னைய மதிக்கிறான்’ அலுத்துக்கொண்டாள்.

சிரித்தவனாக ‘இப்ப என்ன ஆயிப்போச்சு’ என்று கேட்டான்.

‘உங்களுக்கும் கப்பு அடிக்காதா’

‘ஆமா கேக்கணும் நினைச்சேன். எவனும் வந்து பாக்கலயா இன்னும் ’

‘ம்ம்…அதான் வந்தவன் வேல செய்ய முடியாதுன்னு போயிட்டானே’.

‘ஏன்னது….’

‘ஆமா நாய்ய கொல்ல கூடாதுன்னு கோஷம் போடறவங்க வீட்லல்லாம் வேல செய்ய முடியாதாம் சொல்லிட்டு போயிட்டான் ’.

‘யாரு ஆளு ’

‘எனக்கு என்ன தெரியும்… ’

‘சரி சரி நான் பாத்துக்றன் , இதுக்கு போயி அம்முவ கொடு’ என்று குழந்தையைய் வாங்கினான்.



-5-



சிவன் ரத்தினம் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டு இருந்தான். ஒரு சிறிய அறை. இன்ஸ்பெக்ட்ரும் ரத்தினமும் அமர்ந்திருந்தனர்.சிவன் அவர்களுக்கு முன் நடுங்கியவனாக நின்று கொண்டிருந்தான்.பக்கத்து அறையில் இருந்து குழந்தையின் ஒயாத அழுகை சத்தம். இருட்டிக்கொன்டிருந்த நேரம்.

‘சொந்த ஊர் எது ’. இன்ஸ்பெக்டர் ஆரம்பித்தார்.

‘இங்க தான் ஐயா’ .

‘வேல செய்ய முடியாதுன்னு சொன்னியாமே ’.

‘அது…இஷ்டம் இல்லன்னு.. ’ இழுத்தான்

‘சரி கடக்கட்டும்.எல்லாத்தையும் கழட்டு ’.

‘ஐயா’ திடுக்கிட்டவனாக சிவன்

‘அடச்சீ.கழட்டுரா நாயி.. ’

‘ஐயா’

இன்ஸ்பெக்டர் அவன் அருகில் சென்றார்.சிவன் பின்னுக்கு சென்றான்.

‘கழட்டுரா’ குரலை உயர்த்தினார் இன்ஸ்பெக்டர்.கண்ணத்தில் ஒரு அறை விட்டார். அரண்டு போனவனாக சட்டையையும் லுங்கியையும் கழற்றியவன், உள்ளாடையுடன் நின்று கொண்டிருந்தான். தன் கோபம் அடங்காத காரணத்தாலோ என்னவோ ‘முட்டி போடுரா ’என்று சைகை காட்டியவாறு உட்கார்ந்தார்.

பக்கத்து அறையில் இருந்த குழந்தை அழுது கொண்டே இருந்தது.

‘என்ன அழுதுக்கிட்ட இருக்கு ’குரலை உயர்த்தி கேட்டான் ரத்தினம்

‘ஆயி போக முடியாம அழுதுக்கிட்ட இருக்குங்க.இங்க கொஞ்சம் வாங்கலேன் ’. அவள் குரல் கேட்டது.எழுந்து சென்றான். சற்று நேரத்தில் குழந்தையின் அழுகை நின்றது.கையில் நீயூஸ்பேப்பரை அதன் இரு முனைகளையும் அருவெருப்புடன் பிடித்து வந்த ரத்தினம் சிவன் அருகில் அதை கீழே போட்டான். பேப்பரின் ஒரு முனை மற்றொரு முனையை முடியவாறு இருந்ததால் உள்ளே என்ன இருந்தது என்று தெரியவில்லை. அதன் வெளிபுறம் ஈரமாக இருந்தது.பீ நாற்றம் அடித்தது.

‘என்ன உனக்குத்தான் ’ ரத்தினம் குருரமாக சிரித்தான்.

‘ஐயா…’

பேப்பரின் ஒரு முனையேய் திறந்தவன் ‘என்ன ஐயா உயான்னுட்டு தின்றா’.

‘ஐயா வேண்டாய்யா ’ பார்த்தவன் அப்படியே கதறினான்.

‘நாயினா கடிக்கத்கான் செய்யும் உன் புள்ள என்ன படிச்சு பெரிய இவன் ஆவாப் போறானா ’ இன்ஸ்பெக்டர் மூர்க்கமாய் கூறினார்.

‘என்னப்பா பேசிக்கிட்டு டேய் தின்றா …’

‘ஐயா நான் அடைப்ப சுத்தம் செய்யிறேன்ங்கய்யா ’ அழுதவாறு கூறினான்.

‘டேய் நீ ஒன்னும் அத சுத்சம் செய்ய தேவையில்ல.இத்த சுத்தம் பண்ணு போதும்’

‘இப்படி கேட்டுக்கிட்டு இருந்தா சரி வராது ரத்திணம் ’.

‘தின்றா’.

காலால் அவன் மீது ஒரு எத்து எத்தினான் ரத்திணம். அவன் தலைமூடியை பிடித்து தரதர வென்று இழுத்துவந்து பேப்பரில் முகம் படும் போல் அழுத்தினான்.

‘தின்றா நாயே.. ’

எல்லாம் முடிந்துபோனது. அவர்களது கோபமும் தீர்ந்துபோயிருந்தது.


-6-


மீசை,தலைமூடி மழிக்கப்பட்டு இருந்தான் சிவன் .பக்கத்தில் ராவ் அமர்ந்திருந்தான்.இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.அனைத்தும் அந்நியமாகத் தெரிந்தது. ரோட்டில் பள்ளி சிறுவர்கள் மூவர் மாலை வீடு திரும்பி கொண்டிருந்தனர்.ஓருவன் மாத்திரம் கலர் டரஸ் அனிந்திருந்தான். இன்னைக்கு எனக்கு ஹப்பி பர்த்டே என்று சொல்லும் வயதிலான பள்ளிச் சிறுவர்கள். அவர்களை பார்த்தவாறு இருந்த சிவன் தீடீரென்று பீறிட்டு அழுதான்.ராவ் அவனை சமாதானம் செய்யாமல் பார்த்துகொண்டே இருந்தான்.

-7-


நீதிபதியின் சேம்பரில் உட்கார்திருந்தான் ராவ்.

‘உங்க பேரு என்ன சொன்னீங்க’ நீதிபதி கேட்டார்.

‘சீனிவாசராவ்’

‘நீங்க காலய்ல Petition கொடுக்கரகப்பயே பாத்தேன், Private compliant கொடுக்கீறிங்க,இன்ஸ்பெக்டர் second accused, எல்லாம் சரிதான்,ஆனா நீங்க ஒரு சாட்சிகூட செக்கலையே.’

ராவ் ஏதேனும் பதில் சொல்வான் என்று எதிர்பார்த்தார் நீதிபதி.ராவ் வாயை திறக்கவில்லை.

‘நிங்க சத்தியநாராயணா தம்பி தானே’

‘ஆமா சார்’

நீதிபதி அனைத்தையும் மறந்து சிரித்துவிட்டார்.‘சார்ன்னு கூப்பட்ட மோத வக்கீல் நீங்கதான்’ என்றார்.

தேவையின்றி சிரித்துவிட்டோமோ என்று எண்ணிய நீதிபதி ‘நான் யாரையும் நார்மலா சேம்பர்ல அலோ பன்னறதில்ல.Anyway, i am returning the petition. சாட்சிய கொண்டுவாங்க , கண்டிப்பா எடுத்துக்றன்’ என்று சொன்னவாறு பெட்டிஷனை அவனிடம் நீட்டினார்.



-8-


‘ என்னாச்சு ’.முன்கூட்டியே அறிந்தவன் போல் கேட்டான் சிவன்.

‘என்னாவும்.நம்மலாலதான் ஒரு சாட்சி கூட ரெடி பண்ண முடியலயே’. கோபமாக கத்தினான் ராவ்.

‘ம் ’.சலனமில்லாமல் இருந்தான் சிவன். பீடி குடித்தவாறு ‘நான் களம்பறன் ’ என்றான். ராவ் பதில் பேசவில்லை.

‘இனிமே இங்க வரமாட்டேன்.அவ ஊர் பக்கம் போயிடலாம்ன்னு பாக்றேன்’.

‘ம்’

‘சரி நான் களம்றேன் ’.எழுந்து கொண்டான் சிவன்.ராவும் எழுந்தான்.

‘எப்ப போற’ அவன் முகத்தை பார்த்தவாறே கேட்டான் ராவ்.

‘நாளைக்கு’.

‘வரேன் ’ என்றவன் சட்டென்று திரும்பி சைக்கிளை நோக்கி சென்றான்.ஒரு நொடி நின்றவன் திரும்பி ராவ் அருகில் வந்தான்.

‘பையன் செத்துட்டான்.பீ தீங்க வைச்சாய்ங்க.சாவனும்ன்னு தோன மாட்டிங்கிது பாத்தியா ’.அவன் உதடு துடித்தது.

ராவ் அவனை அப்படியே கட்டிக் கொண்டான்.சிறிது நேரம் அப்படியே உறைந்து போனவர்களாக இருந்தனர். இவற்றின் சாட்சி பூதமாக ஒரு நாய் இவர்களையே பார்த்துகொண்டிருந்தது.

‘நாளைக்கு காலைய்ல வீட்டுக்கு வா’ என்று சொன்னவாறு சைக்கிளை எடுத்து திரும்பி பார்க்காமல் சென்றான். ராவுக்கு எதோ மாதிரி இருந்தது.அப்படியே அமர்ந்தான்.தீடீரென்று ஆவேசம் அடைந்தவன் போல் எழுந்து அப்படி இப்படி நடந்தான்.கைகளையும் கால்களையும் உதறினான். ‘எனக்கு கோவம் வருது. எனக்கு கோவம் வருது ’ என்று கத்தினான்.அவனை பார்த்து கொண்டிருந்த நாய் பயந்துபோய் எழுந்து ஒடியது.‘எனது கண்டனத்தை நான் தெரிவிக்க வேண்டும் ’ என்றவாறு கத்தினான்.பக்கத்தில் கடையில் இருந்தவர்கள் அவனையே பார்த்து கொண்டிருந்தனர் .

மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு நறிக்குறவர்கள் வந்து கொண்டிருந்தனர்.ஒரு கைக்குழந்தையைய் தன் மார்போடு சேர்த்து கட்டி இருந்தான் ஒருவன். அவர்களை பார்த்து கொண்டிருந்தவன் தீடிரென்று அவர்கள் அருகில் சென்றான்.

‘வணக்கம்’ என்று கைகுப்பயவாறு சொன்னான் ராவ்.அவர்களுக்கு எதுவும் புரியாமல் பார்த்தார்கள்.

‘குழந்தைக்கு என்ன பேரு’ குழந்தையைய் வைத்திருந்தவனை பார்த்து கேட்டான்.

அவன் பதில் கூறாமல் தன்னை சுற்றி உள்ளவர்களை பார்த்தான்.

யோசித்தவன் ‘கும்டறன் சாமின்னு பேர் வைங்க’ என்றான்.

‘சாமி’

‘ம் அதில்ல . கும்டறன் சாமி, கும்டறன் சாமின்னு வைங்க. ’சுற்றும் பார்த்தான்.பக்கத்தில் கடையில் இருந்து தன்னையே பார்த்து கொண்டிருந்த இருவரை அழைத்தான்.

‘என்ன’ என்றான் ஒருவன்.

‘குழந்தைக்கு பேரு வச்சிருக்கு.மூனு தடவ கூப்புடுங்க. ’

‘எது. ’

‘கும்டறன் சாமி பேரு ’ராவ் சிரித்தவாறே சொன்னான்.

‘என்னது’ ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

‘சரியான லூசு பய..’ மெதுவான குரலில் ஒருவன் சொன்னான்.

‘கும்டறன் சாமி, கும்டறன் சாமி, கும்டறன் சாமி போதுமா ’.

‘நீ கூப்புடு’.ராவ் மிகவும் சஷ்தோஷாமாய் இன்னொருவனை பார்த்து சொன்னான்.

‘கும்டறன் சாமி, கும்டறன் சாமி, கும்டறன் சாமி. ’

சிரித்தவாறே ராவ் பத்து ரூபாய் எடுத்து குழந்தையைய் வைத்திருந்தவனிடம் கொடுத்தான். ‘இந்தாங்க பத்து ரூபா தான் இருக்கு. குழந்தைக்கு பேரு வைச்சா கொடுக்கனுமாமே’. அவர்கள் வாங்காமல் அப்படியே நின்றனர். ‘வாங்கிங்க’ என்று அவன் கையைப் பிடித்து கொடுத்தான். வாங்கிங் கொண்டு சென்றனர்.அவர்கள் போவதை பார்த்து கொண்டே இருந்தான் ராவ்.கடையில் இருந்தவர்கள்,அவன்,அவள்,இவன்,இவள்,அவர்கள்,இவர்கள்,இதை படிப்பவர்,எழுதியவர் என எல்லோரும் அவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தனர். இறுதியாக கடவுள்களும்.

ஒளிக்கற்றைகள்



-1-



அறை முழுவதும் புத்தகங்கள். மேசையின் மீதும் கட்டிலுக்கு அடியிலும் அலமாரி முழுமைக்கும் அதுவே.
ஃஹங்கரில் இரண்டு மூன்று அரைக்கை சட்டைகள். பேண்டுகள். சீனிவாசராவ் ஏதோ பழைய சஞ்சிகையை புரட்டியவாறு அமர்ந்திருந்தார். தலையிலும் முகத்திலும் நிறைந்த நரை. ‘இன்றைய பொழுது இனி எங்கனம் கழியும்’ என்பது போல மரநாற்காலியில் அமர்ந்திருந்தார் பாலா. அவர் தலை வியர்த்திருந்தது. அதன் காரணமாகவோ என்னவோ ராவின் தலை முடியை பார்த்தவாறு இருந்தார். சுவர்களிலும் மௌனம் அப்பியிருந்தது. சூரியன் தூசுகளாலும் , துகிள்களாலும் மேசையுடன் ஒளிக்கற்றைகளான பாலம் அமைத்திருந்தது. ராவ் எழுந்து பாத்ரும்க்குள் சென்றார். ‘ஸ்வேங்’ என்ற ஒலியெழுப்பியவாறு உள்ளே நுழைந்தான் ராஜன். அவன் கையில் ஏதோ லெதர்பையிருந்தது. அதை அப்படியே கட்டிலில் கடாத்தி விட்டு ராவ் புரட்டி கொண்டிருந்த சஞ்சிகையை இவன் புரட்ட ஆரம்பித்தான். பாலா அவனை பார்த்தவாறு இருந்தார். ஏதோ யோசனையில் ஆழ்ந்தவன் ‘எருமைமாட வைச்சு தலையை நக்கவிட்டா, முடி வளருமா அங்கிள் என்றான். அவன் முகத்தில் கேலிக்கான அறிகுறிகள் இல்லை. வெலவெலத்து போன பாலா சற்று நிதானித்து முயற்சித்து பார்க்கலாம் என்று சொல்லி சிரித்தார்.

ராவ் ராஜன் அருகில் அமர்ந்து கொண்டார். தங்கள் வீட்டில் இன்று தன் தாத்தாவுக்கு தவசமென்றும்,எங்கும் ஒரேபுகை, அதனால் ஓடிவந்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான் ராஜன். தீடீரென்று ராவ்வை பார்த்து அவருக்கு என்று தவசம் என்று விசாரித்தான்.

ராவ் பாலாவின் முகத்தை பார்த்தார். பாலாவின் முகத்தில் எந்த சலனமுமில்லை. இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் கழித்திருக்கலாம் என்று சொல்லி சமாளித்தார். சஞ்சிகையை புரட்டிக் கொண்டிருந்தவன் சட்டென்று எழுந்து கொண்டு தனக்கு போர் அடிப்பதாக சொல்லி, இருவருக்கும் டாட்டா காட்டி விட்டு லெதர்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அதைப்பார்த்த ராவ் சற்று பதறியவராக அவனை பிடித்து கொண்டு லெதர்பை யாருடையது? எங்கிருந்து எடுத்தது என்று விசாரித்தார். தன்னுடையது, தன் கணக்கு புத்தகமும் நோட்டும் இருப்பதாகவும் தான் எடுத்துக் கொண்டு வந்ததாக சொல்லி மார்போடு அனைத்துக் கொண்டான். பாலாவும் அவன் கொண்டார்ந்ததுதான் என்றார். சரி போ , என்றவாறு கட்டிலில் அமர்ந்து ,அலமாரியை நோட்டமிட்டார். அதில் அதை போன்ற லெதர்பையிருந்தது. பாலாவும் அதை பார்த்தார். அவர் எதுவும் கேட்டு கொள்ளவில்லை. எங்காவது வெளியே செல்லலாம் என்றார் ராவ். பாலா எழுந்து கொண்டார்.



-2-



மைதானத்தை ஒட்டி இரண்டு மூன்று வேம்பு இருந்தது. சிறுவர்கள், பெரியவர்கள் யாருமில்லை. சூரியன் எழுந்து கொண்டிருந்தான். சைக்கிளில் ஒருவர் மைதானத்தின் ஒருமுனையிலிருந்து மறுமுனைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் வேஷ்டி காற்றில் பறக்க அவர் தொடைதெரிந்தது. பார்வையாளர்கள் அமர்வதுக்கென்று கட்டப்பட்ட இரண்டு மூன்று அடுக்குள் கொண்ட படிகளில் அமர்ந்து கொண்டனர் இருவரும். மைதானத்தை ஒட்டியிருந்த சாலையில் பேருந்தில் சிலர் ஏறிக் கொண்டிருந்தனர்.

‘அறுபத்தி ஒன்னுல முத சிறுகத வந்தது பாலா’ அவராகவே பேச ஆரம்பித்தார். பஷூர் போல ,தஸ்தாயெவ்ஸ்கி போல இனிதானும் ஒரு எழுத்தாளர் என்று அன்று நினைத்தது இன்றும் நினைவிலிருக்கிறது என்றார். சொற்கள் அவரிலிருந்து பீறிட்டு எழுந்தன. எழுந்து கொண்டு பெண்டுலம் போல அப்படி இப்படி நடந்தார். இந்த மைதானத்தை பற்றி , வேம்பை பற்றி ,சூரியனைப்பற்றி எல்லாமே தன் கதையில் எழுதியிருப்பதாகவும், இன்று நினைக்கையில் எல்லாமே அபத்தமாகபடுவதாகவும் சொன்னார். ‘எல்லாம் துரத்திட்டு நிக்கற மாதிரி இருக்குது பாலா’. பாலா எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. எந்த எதிர்வினையும் என்னி அவர் பேசவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார்.
கொஞ்ச நாட்களாகவே இப்படி தோன்றுவதாக சொன்னவர், அதுவும் தனக்கு விருது அறிவிக்கப்பட்டுயிருப்பதாக நாதன் வந்து சொன்னபின் , அந்த முள்ளின் நெருடல் அதிகமாகி விட்டது என்றார். நாதன்தான் தனக்கும் விருது வழங்கப்பட்ட விஷயத்தை நேற்று வந்து சொன்னார் என்றார் பாலா. எல்லோருக்கும் அவர்தான் சொல்வார் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார் ராவ். பாலாவை பார்த்து தன்னைப் பற்றியும் , தன் எழுத்தைப் பற்றியும் , ஒரு வாசகனாக ஒரு நண்பனாக அவருடைய கருத்து என்ன என்று கேட்டார். ‘என்ன சார் திடீர்னு’ என்றார் பாலா. தான் யாரிடமும் இப்படி இதற்குமுன் கேட்டதில்லையென்றும் , நாதனிடம் கேட்ட தனக்கு துணிவில்லை என்று சொல்லி முடித்து கொண்டார் ராவ். பாலாவின் மனம் சொற்களை சேர்க்க ஆரம்பித்திருந்தது. அங்கு சற்று நேரம் மௌனம் நிலவியது. ‘நீங்க சுயமையநோக்கு கொண்ட இருத்தலியவாதி’ சொற்களை பட்டென்று போட்டு உடைத்தார் பாலா. ராவ் பாலாவிடமிருந்து இவ்வளவு கறாரான வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை ஆமாம். அவருடைய உலகத்தில் அவர் மட்டுமே இருப்பதாகவும், அவரின் ஆதார பிரச்சனையே அவர் இருப்புதான்யென்றும், அதை கழற்றி வைத்துவிட்டு ஒடவே அவர் யத்தனித்து வருவதாகவும், அதன் பொருட்டே அவர் திருமணமும் செய்து கொள்ளாமல், தாவூத் போன்ற உண்மையான நண்பர்களை பிரிந்து இப்படி தனித்து வாழ்ந்து தன்னையும், பிறரையும் இம்சிப்பதாக தனக்குள் நீண்ட நாட்களாயிருந்த குமறல்களை கொட்டி தீர்த்தார் பாலா. தொடர்ந்தவர், ‘உங்க பிரச்சனை இருப்பு சார்ந்த துயர். அதுக்கு விடைய எழுத்துல தேடீனிங்க. இன்னிக்கு வரைக்கும் கண்டையல. நிறைய மனிஷங்கல பத்தி நீங்க கதைகள்ல எழுதியிருக்கீங்க. நிச்சயமா உங்களுக்கு மனிஷங்க மேல உண்மையா பற்று இருக்கு , அன்பு இருக்கு ,ஆனா அத உங்க உலகத்துல இருந்துதான் எழுதீனிங்க. இருப்பு சார்ந்த துயர் ஆதி மனிதன் பிரச்சனை. ஜகப் பிரளயம் வந்து கடைசி மனிதன் இறக்கப்போகும் வரை இருக்க போகும் பேசு பொருள். அதனால் உங்க படைப்புக்கு காலத்துல இடமுண்டு என்று தனக்குள் ராவ்வை பற்றியிருந்த எல்லா பிம்பங்களையும் கழற்றி வைத்தார் பாலா. தன் வாழ்வின் அனுபவத்தில் எவ்வளவு பிரச்சனைகள் ,சச்சரவுகள் இருந்தாலும் மனிதன் தனித்து வாழ பிறந்த பிறவி அல்ல என்பதை தான் அனுபவபூர்வமான உணர்ந்து கொண்டதாகவும் சொன்னார் பாலா. ராவ் அருகில் வந்து தன் கரங்களை பாலாவின் தோள் மீது வைத்தார். ‘நீங்க சொல்றது உண்மையாத்தான்படுது’ என்றார். அவர் வெடித்து அழுதுவிடுவார் என்பது போல இருந்தது. ஆனால் பிறர்முன் அழக் கூடியவர் அல்ல அவர் என்று பாலாவுக்குத் தெரியும். ‘விருது வேண்டாம்னு சொல்லிடலாம்ன்னு இருக்கேன் , போகலாம்’ என்றார்.

-3-


பாலா வரும் வழியிலேயே விடைபெற்றுக் கொண்டார். ராவ் மிக தனியனாக படி ஏறி தன் அறைக்கு சென்று கொண்டிருந்தார். வெளியில் வரேந்தாவில் கோவிந்தன் அயர்ந்துபோய் தூங்கிக் கொண்டிருந்தார். ஒல்லியான உருவம். கதர் சட்டை, வேஷ்டி. பழுப்பேறிய கண்கள். கையில் துணிப்பை .ஒடுங்கிப் போயிருந்தார். கோவிந்தனை ராவ் எதிர்ப்பார்க்கவில்லை. ராவ் கோவிந்தனை எழுப்பி உள்ளே அழைத்து சென்றார். ‘சாருக்கு விருது அறிவிச்சிருக்கிறதா கேள்விபட்டேன். சாரை பாத்திட்டு போலாம் வந்தேன்’ என்றார் கோவிந்தன். மேலும் ஏதோ சொல்ல வந்தவர் சொல்லாமல் விட்டு விட்டார். அவரின் மகளும், மனைவியும் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்து கொண்டிருந்தார் ராவ். மிகவும் செளகரியமாக இருப்பதாக சொன்ன கோவிந்தன் , தனக்கு முக்கியமான வேலை ஒன்று இருப்பதாக சொல்லி கிளம்பினார். வாசல் வரை சென்றவர் திரும்பினார். காலை வெயிலின் கதிர்கள் அவர் மீது பட்டு தெரித்தது. அவர் முகம் அவ்வளவு சரியாக ராவுக்கு தெரியவில்லை. தன் மனைவி ரோஸி படிக்கட்டில் இறங்கும் போது கால் தவறி விழுந்து விட்டதால் இடுப்பு எலும்பு நழுவி விட்டதாக சொல்கிறார்கள். கொஞ்சம் பணம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றார். அவரது குரல் தழதழத்து போயிருந்தது. ராவ் எழுந்து அவர் அருகில் ஒடினார். அவர் கரங்களை பற்றிக் கொண்டு எவ்வளவு தேவைப்படும் என்றார். ஒரு இருபதாயிரம், மூப்பதாயிரம் கிடைச்சா நல்லாயிருக்கும் சார் என்று சொன்னவர் அதற்கு மேல் கட்டு படுத்த முடியாமல் ராவின் தோளில் சாய்ந்து வெடித்து அழுதுவிட்டார்.

-4-


மாலையில் பாலா வந்திருந்தபோது பதற்றமாக அமர்ந்திருந்தார் ராவ். கோவிந்தன் வந்து போன விஷயத்தை சொன்னார். பாலா கிண்டலாக விருது வாங்கிவரும் பணத்தை கொடுத்தால் போதும் என்றார். ராவின் முகம் ரத்தமேறி சிவந்தது. பாலா மேலும் கோபத்துடன் அவரும் சேர்ந்து உழைத்து உருவாக்கியது தானே அந்த செருப்புக்கடை. ஏன் தாவூத்திடம் சென்று பணம் கேட்கக்கூடாது, தாவூத் அவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை தான் சொல்லத் தேவையில்லை என்றார். படுக்கையில் படுத்திருந்த ராவ் எழுந்து கொண்டு மேசையில் கட்டைவிரலால் தட்டினார். தாவூத் , தாவூத் என்ற வார்த்தையை மறுபடி ,மறுபடி சொல்லிக் கொண்டார். ஏதோ தன்னுள் ஆழ்ந்து நாளைக்கு சென்று பார்க்கலாம் ,நாதனை அழைத்துக் கொண்டு கடைக்கு வந்துவிடுங்கள் என்று பாலாவிடம் சொன்னார்.

-5-


அதிகாலையெல்லாம் எழுந்து கொண்டு அடையர் டிப்போ அருகே வந்துவிட்டார் ராவ். அருகே இருந்த பள்ளிவாசலில் ஓதுவது கேட்டது. ‘ஆர்.டி. ஷூ மார்ட்’ என்ற பெயர் பலகையை பார்த்தவாறு நின்றார். கடைதிறக்க எப்படியும் இன்றும் மூன்று நாலுமணி நேரம் ஆகும், அதுவரை என்ன செய்வது என்று யோசித்தவர், கால் போன போக்கில் நடந்தார். கால் அது பழகிய போக்கில் சென்றது. எல்.பி.ரோட்டை கடந்து காந்திநகர் நோக்கி சென்றார். அங்கே இருந்த ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் முகப்பில் சென்று அமர்ந்து கொண்டார். அடர்த்தியான மரங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சென்னை குழந்தை விழித்துக் கொள்ள ஆரம்பித்தது. மரங்களின் ஊடாக ஒளிக்கற்றைகள் எங்கும் சிதறியபடியிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்தவர் சட்டென்று மன எழுச்சி கொண்டார். ஒளிக்கற்றைகளில் தன் கைகளை காட்டினார். அது செந்நிறத்தில் ஜொலித்தது. உள்ளங்கைகளால் ஒளிக்கற்றைகளை குவித்து முகத்தில் பொதித்துக் கொண்டார். கீழே எங்கும் உதிர்ந்து போன சருகுகள். லேசான காற்றில் அவை அசைந்தன. ஒரு நொடியில் வானமும் பூமியும் அவரும் அனைத்தும் சேர்ந்து ஒரு பிண்டம் ஆகின. அவர் பறக்க ஆரம்பித்தார். பறக்கிறார். தலையை சிலுப்பிக் கொண்டார் ராவ். அண்ணாந்து மேலே பார்த்தார். கண்கள் கூசின. அதுவரையான கொந்தளிப்புகள் அடங்கி போயிருந்தது. உதிர்ந்து கிடந்த இலைகளுக்கும் தனக்கும் பெரிய வித்யாசம் இல்லை என்று அவருக்கு தோன்றியது .சிரித்துக் கொண்டார்.

-6-


சென்னை குழந்தை முழுவதுமாக விழித்துக் கொண்டது. எங்கும் இரைச்சல். கடைக்கு சென்றார். பாலாவும் நாதனும் ஏற்கனவே வந்திருந்தனர். தாவூத் பருமனாக இருந்தார். ராவை பார்த்ததும் எழுந்து கொண்டார். முகமலர்ச்சியோடு வாஞ்சையாக குழந்தை போல சிரித்தார். வீட்டில் யாரிடமேனும் கருப்பட்டி காபி போட்டி எடுத்துவரச் சொல்லுமாறு கடைப்பையனிடம் சொன்னார். அங்கே யாரும் பேசிக் கொள்ளவில்லை. ராவ் தினமணி நாளிதழை புரட்டியவாறு இருந்தார். ‘இவன் தான் பஷீர்’ என்றார் தாவூத். அவர்முன் இருபது இருபத்திரெண்டு வயதிலான இளைஞன் கையில் ஃப்ளாஸ்க்கும், டம்ளர்களுடன் நின்று கொண்டிருந்தான். ‘முகம்மது பஷூரா’ என்று வாயை விரித்தார் ராவ். ஆமாம் என்பது போல தலையசைத்தார் தாவூத். ராவ் எழுந்து பஷூர் தலையை வருடினார். என்னசெய்வதாக விசாரித்தார். ‘லெதருக்கு படிச்சு முடிச்சிருக்கேன் பெரியப்பா’ என்றான். ‘ஆம்பூர்ல சின்னதா ஒரு ஃபேக்ட்ரி ஆரம்பிக்கலான்னு இருக்கோம்’ என்றார் தாவூத். நல்லது நல்லது என்று தனக்கே சொல்லிக் கொள்வது போல சொல்லிக்கொண்டார் ராவ். வாடிக்கையாளர்கள் யாருமில்லை .சிறிது நேரமிருந்தவர் வந்துடறேன் என்று சொல்லி கிளம்பிவிட்டார். நாதனும் பாலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ‘அவனுக்குள்ள ஏதோ பெரிசா நடந்திட்டுயிருக்கு அனேகமா திரும்பி வருவான்’ என்றார் தாவூத்.

-7-


ஒரு மணி நேரம் கழித்து வந்தார் ராவ். நாதனும் பாலாவும் சென்று விட்டிருந்தனர். அறுபது அறுபத்தியெந்து வயதிலான ஒருவர் தன் மனைவிக்கு செருப்பு வாங்க வந்திருந்தார். தன் மனைவிக்கு கால்கள் சிறியது, ஆனால் அகலமாகயிருக்கும், அது போன்ற செருப்புகள் ஏதாவது இருந்தால் காட்டுமாறு கடைப்பையனிடம் சொன்னார். பெரும்பாலும் அப்படி சிறியதாகவும், அதே சமயத்தில் அகலமாகவும் செருப்புகள் வருவதில்லை என்று சொன்னவன் ஒரு செருப்பை காண்பித்து இது வேண்டுமானால் நீங்கள் சொல்வது போல் இருக்கும் என்றான். வாடிக்கையாளர் தான் வாங்கிக் கொண்டு செல்வதாகவும் சரியில்லையென்றால் மாற்றுக் கொள்ளமுடியுமா என்றும் கேட்டார். கடைப்பையன் தாவூத்தை பார்த்தான். ராவ் ‘அதெல்லாம் மாத்திக்கலாம் சார் கவலைப்படாதீங்க’ என்றார். கடைப்பையனுக்கு அவர் யார் , எதுவும் புரியவில்லை. நூற்றி எழுப்பைத்தைந்து ரூபாய் வாங்கி கல்லாவில் போட்டார் ராவ். ‘அவர் அனேகமா திரும்பி வரமாட்டார். சும்மா ஒரு ஆறுதலுக்குதானே’ தாவூத்தை பார்த்து சொன்னார். தாவூத் சிரித்தார் .எல்லோரை பற்றியும் விசாரித்தார். கடைப்பையனை அழைத்தார். அவன் பெயரை கேட்டார். ரஹ்மத்துல்லாஹ் என்றான். சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி என்றும், அப்பா வெற்றிலை கடை வைத்திருப்பதாகவும், படிப்பு படிக்காமல் ஊர் சுற்றி கொண்டிருந்தால், ஏதேனும் வியாபாரம் கற்றுக் கொள்ளட்டும் என்று தன் அப்பா இங்கே அனுப்பியிருப்பதாவும் சொன்னான். ‘என்னோடு வந்து தங்கிக்கிறியா’ என்று கேட்டார் ராவ். அவன் தாவூத்தை பார்த்தான். தாவூத் போயி தங்கிக்கோ என்றார். அவன் அவரை எப்படி அழைப்பது என்று கேட்டான். அவன் எப்படி அழைக்க விரும்புவதாக கேட்டார்.

தன் ஊரில் அவரைப் போன்ற ஒருவரை பார்த்திருப்பதாகவும், அவரை சிலர் சாஹிப் என்று அழைப்பதை கேட்டிருப்பதாகவும் அப்படி உங்களையும் ‘ராவ் சாஹிப்’ என்றே அழைக்கிறேன் என்றான். சரி என்றார்.